என் மலர்
நீங்கள் தேடியது "ODI Centuries"
- ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் இரட்டை சதமடித்து 202 ரன்கள் எடுத்தார்.
- பீகார் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 190 ரன் எடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.
புதுடெல்லி:
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் உள்பட இளம் வீரர்களும் சதமடித்து அசத்தியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
பீகார் அணியின் சூர்யவன்ஷி 190 ரன்னும், சகிபுல் கனி 128 ரன்னும், ஆயுஷ் லோஹருகா 116 ரன்னும் அடித்தனர்.
ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் 202 ரன்னும், பிப்லாப் சமந்த்ரே 100 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா அணியின் துருவ் ஷோரே 136 ரன்னும், அமன் மோகடே 110 ரன்னும் எடுத்தனர்.
மேகாலயா அணியின் கிஷான் லிங்டோ 106 ரன்னும், அர்பித் படேவரா 104 ரன்னும் அடித்தனர்.
மும்பை அணியின் ரோகித் சர்மா 155 ரன்னும், கர்நாடகா அணியின் தேவ்தத் படிக்கல் 147 ரன்னும், சவுராஷ்டிரா அணியின் சம்மார் கஜ்ஜார் 132 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணியின் விராட் கோலி 131 ரன்னும், ஜம்மு காஷ்மீர் அணியின் ஷுபம் கஜுரியா 129 ரன்னும், அரியானா அணியின் ஹிமான்ஷு ரானா 126 ரன்னும் அடித்தனர்.
ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் 125 ரன்னும், ஆந்திரா அணியின் ரிக்கி புய் 122 ரன்னும் எடுத்தனர்.
ரயில்வேஸ் அணியின் ரவி சிங் 109 ரன்னும், கோவா அணியின் ஸ்நேஹல் கவுதன்கர் 107 ரன்னும், மத்திய பிரதேச அணியின் யாஷ் துபே 103 ரன்னும், கேரளா அணியின் விஷ்ணு வினோத் 102 ரன்னும், மணிப்பூர் அணியின் ஜோடின் பெய்ரோஜியாம் 101 ரன்னும் அடித்தனர்.
- விராட் கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் உள்ளார்.
- இந்தியா அடுத்த 2027 உலகக் கோப்பை வரை சுமார் 30-35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அவர் 2008-ல் அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடினார். 3 வடிவத்திலும் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 53, டி20யில் 1).
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 53 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்திச் சென்று அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். சேஸிங்கின் போது மட்டும் 26 சதங்களுக்கு மேல் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 27,000க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 16 சதங்கள் தேவை. அவர் இந்த மைல்கல்லை எட்டுவது சாத்தியமா என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
37 வயதிலும் அவர் மிக உயர்ந்த உடல் தகுதியுடன் உள்ளார். இது இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட உதவும். அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடர்களில் அவர் தொடர்ந்து சதங்கள் அடித்து வருகிறார்.
இருந்தாலும் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அவர் விளையாடும் ஒரே வடிவம் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே. இந்தியா அடுத்த 2027 உலகக் கோப்பை வரை சுமார் 30-35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.
அவர் 16 சதங்களை எட்ட, கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் ஒரு சதம் அடிக்க வேண்டும். 2027 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோலி 2027 உலகக் கோப்பையில் 11 போட்டிகள் வரை விளையாட முடியும். ஒருவேளை இந்தியா சீக்கிரமே வெளியேறினால் குறைந்தபட்சம் 6 போட்டிகள் விளையாடும்.
புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் இது மிகவும் கடினமான இலக்காகத் தெரிகிறது. ஆனால், கோலியின் திறமை, அனுபவம் மற்றும் தீவிரமான ஆட்ட வேட்கையைக் கருத்தில் கொள்ளும்போது, கிரிக்கெட்டில் எதையும் சாத்தியமற்றது என்று சொல்லிவிட முடியாது.
விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 1000க்கும் அதிகமான பவுண்டரிகளை (1027 ஃபோர்ஸ்) அடித்துள்ளார். அவரது டெஸ்ட் சராசரி ஒரு கட்டத்தில் 55.10 என்ற உச்சத்தை எட்டியது. குறிப்பாக இந்தியாவில் நடந்த போட்டிகளில் இவரது சராசரி 55.58 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்தார்
- 2008ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கோலி ஏலத்தில் தேர்வானார்
இந்தியாவில், அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் பரபரப்பாக நடைபெறுகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த போட்டித்தொடரில், தற்போது நடைபெறுவது 13-வது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இன்று கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் முக்கியமான போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், விராட் கோலி அடித்த 49 சதங்களை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அந்த அரங்கிற்கு செல்லும் வழி நெடுக கோலியின் முதல் சதத்தில் இருந்து அவரது 49-வது சதங்களையும் குறிப்பிடும் விதமாக 49 கட்-அவுட்களை வைத்துள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், விராட் கோலி.
கடந்த 2008ல், ஐ.பி.எல். (IPL) 20 ஓவர்கள் போட்டிக்கான அணிகளில், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இவர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து கோலிக்கு கர்நாடகாவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Karnataka: ICC Men's Cricket World Cup | Ahead of India Vs Netherlands, 49 cut-outs of Indian cricketer Virat Kohli showing his 49 centuries, put up at M Chinnaswamy Stadium in Bengaluru. pic.twitter.com/ixA4dy2J6n
— ANI (@ANI) November 12, 2023






