search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Level"

    • மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் கேந்திர பொருளாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரம், என்.ஏ.ராமச் சந்திரராஜா அறக்கட்டளை சார்பில் இயங்கும் ராஜபா ளையம் விவேகானந்த கேந் திர கிளையும் இணைந்து, விருதுநகர் மாவட்ட அள வில் நகர்ப்பு றப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகளை ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி யில் நடத்தின.

    ராஜபாளையம் விவேகா னந்த கேந்திரக் கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ண மூர்த்திராஜா தலைமை தாங்கி பேசினார். என்.ஏ. ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ண மூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டி களைத் தொடங்கி வைத் தார். கேந்திரக்கிளைச் செய லர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.

    விவேகானந்தக் கேந்திரம் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் பேச்சியப் பன் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு இடையேயான ஒப்பு வித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, போன்ற பல்வேறுவிதமான போட்டிகளின் விவரங் களை விளக்கமாகக் கூறி நடுவர்களை அறிமுகப்படுத் தினார். போட்டிக ளில் 32 பள்ளிகளிலிருந்து 350-க் கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்ற னர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிக ளுக்கு நூல், சான்றிதழ்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவி கள் கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரத்தில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இரண்டுநாள் முகாமில் கலந்து கொண்டு அங்கு மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர் என் பது குறிப்பிடத்தக்கது. முடி வில் கேந்திர பொருளாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதற்காக மாவட்டத்தில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகள், வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் என போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்க ப்பட்டுள்ளது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 26-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக மாவட்டத்தில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு பருவாச்சி ஐடியல் மேல்நிலைப்பள்ளியிலும், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி யிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோபி பி.கே.ஆர். கல்லூரியிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில் உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குநரும், தொழில் ஆணையரும், தொழில் வணிக இயக்குனருமான சிஜீ தாமஸ் வைத்தியன் தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்ட ங்களை சேர்ந்த உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழி ல்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்கு விப்பு கழக அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசி ரியர்கள் கலந்து கொண்டு உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பு கூட்டுதல் சந்தை இணைப்புகளை உருவாக்குதல் தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு விரிவாக எடுத்து கூறினர்.

    மேலும் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதில் குறிப்பாக வேளாண் உட்கட்டமைப்பு நிதியினை பயன்படுத்துதல் தொடர்பா கவும் மற்றும் அறுவடைக்கு பின்பு உணவு பதப்படுத்துதல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் தொழில் முனை வோர்களுக்கு தெரிவிக்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு பதப்படு த்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழக தலைவர் அழகுசுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணி கண்டன், இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன் (பொறுப்பு), துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன் மற்றும் அரசு அலுலவர்கள் உள்பட ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ங்களை சார்ந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்டம் முழுவதும் இருந்து வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
    • கடைசி நாளான இன்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மாவட்ட அளவிலான போட்டி

    முதற்கட்டமாக பள்ளி அளவிலும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று முன்தினம் பாளை தனியார் பள்ளியில் தொடங்கியது.

    முதல் நாளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 2-ம் நாளான நேற்று 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    2 ஆயிரம் பேர்

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு குழு நடனம், இசைகருவிகள் இசைத்தல், காய்கறிகளில் கலைபொருட்கள், மணல்சிற்பம், தனிநடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    70 பள்ளிகள்

    இந்நிலையில் கடைசி நாளான இன்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 70 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பேச்சுப்போட்டி, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட 59 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

    மாநில அளவிலான போட்டி

    இதில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கலை இலக்கிய திருவிழா போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

    • குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது.
    • விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது.

    இதில் முதலிடம் பிடித்த தேரியூர் அணிக்கு ரூ.15ஆயிரத்தை குலசை ஊராட்சி தலைவர் சொர்ணபிரியாதுரையும், 2-வது இடம் பிடித்த குலசை ஹசனியா பவுன்சர் அணிக்கு ரூ.10ஆயிரத்தை தாண்டவன்காடு எஸ்.ஜி டிரேடர்ஸ், 3-வது இடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் அணிக்கு ரூ.6ஆயிரத்தை ஜெயா மல்டி ஸ்பெஷாலிட்டிகிளினிக், 4-வது இடம் பிடித்த குலசை ஹசனியா அணியிணருக்கு ரூ.4ஆயிரத்தை கிராமநிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர். தொடர்நாயகன் விருதினை தேரியூர் சதீஷ்க்கு ஹாஜி வழங்கினார்.

    சிறந்த பேட்ஸ்மேனாக தேரியூர் ரவி, சிறந்த பவுலராக முகமது யூசுப், கவுதம், சிறந்த பீல்டராக சபீர், சிறந்த அணியாக விண்ணவரம் அணியினரும் பரிசுகளை பெற்றனர். கிரிக்கெட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு ஹாஜா, 11-வது வார்டு கவுன்சிலர் முகமது அபுல்ஹசன் ஆகியோர் தலைமை தாங்கினார். விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    • தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ் பாராட்டினர்

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பள்ளி, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சன்எபி முதலிடமும், அண்ணல் காந்தியடிகள் நினைவு போட்டியில் பள்ளி மாணவி தர்ஷினி முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ், தலைமை ஆசிரியர் அருள்பர்னாந்து மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர். பேச்சுப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம் கலெக்டர் வழங்கினார்.

    • பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன்மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.
    • 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் திருப்பூர் ஸ்கேட்டிங் அசோசியேன்மற்றும் தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம், திருப்பூர், தாராபுரம், காங்கேயம், உடுமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.

    • கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநின்ற குழந்தை,நிதி ஆதரவுத்திட்டம்,ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து பேசினார்.
    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள்குறித்தும் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநின்ற குழந்தை,நிதி ஆதரவுத்திட்டம்,ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள்குறித்தும் பேசினார்.

    வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகை திருச்செந்தூர் வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன் தலைமையில் வைக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா,பொங்கலரசி,தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி,அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேரி, மற்றும் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது.
    • அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி இன்று நடந்தது. 11, 14, 17, 19 ஆகிய வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், 19 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் பிரிவில் நடத்தப்பட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்கள் சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2, 3, 4-ந்தேதிகளில் மாநில அளவில் நடைபெறவுள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் உலக சோட்டோகான் கராத்தே பெடரேஷன் அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 6 வயது முதல் 20 வயது வரை பங்கேற்ற மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியை உலக சோட்டோகான் பெடரேஷன் அமைப்பின் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பால்பாண்டி முன்னிலை வைத்தார். துணைத் தலைவர் அவனமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கேரளாவைச் சேர்ந்த விபூஷணன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    செயற்குழு உறுப்பினர்கள் நவாஸ்ஷெரிப், சுபாஷ், விக்னேசன், ஹரிகரன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • தமிழக அரசு நடத்திய செஸ் போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றார்.
    • 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பில் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார்.

    சங்கரன்கோவில்:

    பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் வசுந்தரன். இவர் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு நடத்திய செஸ் போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றார்.

    பின்னர் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பில் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். மேலும் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி விமானத்தில் செஸ் விளையாடினார்.இவரது சகோதரர் கார்த்தி குமார் என்பவரும் 19 வயதுக்குட்பட்ட செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற வசுந்தரனுக்கு பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை தாங்கினார்.ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் வரவேற்றுப் பேசினார்.ஆசிரியர்கள் மாரித் தங்கம், ஏஞ்சல் மலர் மெரினா, பெர்ஜிலின், அழகு மகேஸ்வரி, வர்மா, வீரலட்சுமி, சகாயம், ஹெலன், கவிதா, குருவம்மாள், அருணா, ஐஸ்வர்யா, கவிதா மற்றும் மாணவர்களும், பொதுமக்களும பாராட்டி பேசினர்.

    விழாவில் மாணவனுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன. ஆசிரியர் வர்மா நன்றி கூறினார்.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட சதுரங்க விளையாட்டு முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெற்றது.

    இந்த போட்டியை சங்கத்தின் மாவட்ட செயலாளர் பால் குமார் தொடங்கி வைத்தார். இதில் 9 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

    இந்த போட்டிக்கு முதன்மை நடுவராக செல்வ மணிகண்டன் செயல்பட்டார். போட்டிக்கான ஏற்பாடுகளை இணை செயலாளர்கள் முருகானந்த் மற்றும் பால சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் நடத்தும் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×