search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட அளவிலான"

    • மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதற்காக மாவட்டத்தில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகள், வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் என போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்க ப்பட்டுள்ளது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 26-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக மாவட்டத்தில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு பருவாச்சி ஐடியல் மேல்நிலைப்பள்ளியிலும், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி யிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோபி பி.கே.ஆர். கல்லூரியிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது.
    • மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலைத்திருவிழா போட்டிகள் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றது.

    ஆடல், பாடல், மொழித்திறன், மனப்பாடம், இசை வாசித்தல், பலகுரல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வான மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது.

    இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அந்தியூர் ஐடியல் பள்ளியிலும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்திலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நந்தா பொறியியல் கல்லூரியிலும் நடைபெற்று வருகின்றது.

    போட்டிகளை நடத்த ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர், கோபி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர். இப்போட்டிகள் வரும் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனையடுத்து மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது.
    • அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி இன்று நடந்தது. 11, 14, 17, 19 ஆகிய வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், 19 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் பிரிவில் நடத்தப்பட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்கள் சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2, 3, 4-ந்தேதிகளில் மாநில அளவில் நடைபெறவுள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஈரோடு சிலம்ப கமிட்டி சார்பில் மாவட்ட அளவிலான திறந்த வெளி சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது,
    • போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது,

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்மகளிர் கல்லூரி வளாகத்தில் ஈரோடு சிலம்ப கமிட்டி சார்பில் மாவட்ட அளவிலான திறந்த வெளி சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது,

    இந்த போட்டிகளில் பங்கேற்க திருவண்ணா–மலை, திருப்பூர்,கோவை, உடுமலை,நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளிலிருந்தும் 200 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ மாணவி–கள்வந்திருந்தனர்,

    இங்கு நெடுங்கம்பு, நடுங்கம்பு, இரட்டைகம்பு, ஒற்றைவாள்வீச்சு, இரட்டை வாள்வீச்சு, வேல்கம்பு, மான்கொம்பு, குத்து–வரிசைஉள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது,

    இதில் 10 வயதிற்கு உட்பட்டோர், 11 முதல் 14, 15 வயது முதல் 17, 18 வயது முதல் 25 என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளில் ஒரு மாணவர் நான்கு போட்டி–களில் கலந்து கொள்ளலாம் என்ற விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் போட்டிகளில் உற்சாகமாக பங்குபெற்றனர், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களை அவரது பெற்றோர்கள் உற்சாகப்படுத்தினர்.

    மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது,

    ×