பி.கே.ஆர்.மகளிர் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

ஈரோடு சிலம்ப கமிட்டி சார்பில் மாவட்ட அளவிலான திறந்த வெளி சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது,போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது,
பி.கே.ஆர்.மகளிர் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்மகளிர் கல்லூரி வளாகத்தில் ஈரோடு சிலம்ப கமிட்டி சார்பில் மாவட்ட அளவிலான திறந்த வெளி சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது,

இந்த போட்டிகளில் பங்கேற்க திருவண்ணா–மலை, திருப்பூர்,கோவை, உடுமலை,நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளிலிருந்தும் 200 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ மாணவி–கள்வந்திருந்தனர்,

இங்கு நெடுங்கம்பு, நடுங்கம்பு, இரட்டைகம்பு, ஒற்றைவாள்வீச்சு, இரட்டை வாள்வீச்சு, வேல்கம்பு, மான்கொம்பு, குத்து–வரிசைஉள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது,

இதில் 10 வயதிற்கு உட்பட்டோர், 11 முதல் 14, 15 வயது முதல் 17, 18 வயது முதல் 25 என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளில் ஒரு மாணவர் நான்கு போட்டி–களில் கலந்து கொள்ளலாம் என்ற விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் போட்டிகளில் உற்சாகமாக பங்குபெற்றனர், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களை அவரது பெற்றோர்கள் உற்சாகப்படுத்தினர்.

மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது,

X

Maalai Malar
www.maalaimalar.com