search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess Tournament VOC stadium"

    பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட சதுரங்க விளையாட்டு முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெற்றது.

    இந்த போட்டியை சங்கத்தின் மாவட்ட செயலாளர் பால் குமார் தொடங்கி வைத்தார். இதில் 9 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

    இந்த போட்டிக்கு முதன்மை நடுவராக செல்வ மணிகண்டன் செயல்பட்டார். போட்டிக்கான ஏற்பாடுகளை இணை செயலாளர்கள் முருகானந்த் மற்றும் பால சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் நடத்தும் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×