என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cultural Competition"
- மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டி நடந்தது.
- முடிவில் கேந்திர பொருளாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
ராஜபாளையம்
கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரம், என்.ஏ.ராமச் சந்திரராஜா அறக்கட்டளை சார்பில் இயங்கும் ராஜபா ளையம் விவேகானந்த கேந் திர கிளையும் இணைந்து, விருதுநகர் மாவட்ட அள வில் நகர்ப்பு றப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகளை ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி யில் நடத்தின.
ராஜபாளையம் விவேகா னந்த கேந்திரக் கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ண மூர்த்திராஜா தலைமை தாங்கி பேசினார். என்.ஏ. ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ண மூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டி களைத் தொடங்கி வைத் தார். கேந்திரக்கிளைச் செய லர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.
விவேகானந்தக் கேந்திரம் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் பேச்சியப் பன் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு இடையேயான ஒப்பு வித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, போன்ற பல்வேறுவிதமான போட்டிகளின் விவரங் களை விளக்கமாகக் கூறி நடுவர்களை அறிமுகப்படுத் தினார். போட்டிக ளில் 32 பள்ளிகளிலிருந்து 350-க் கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்ற னர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிக ளுக்கு நூல், சான்றிதழ்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவி கள் கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரத்தில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இரண்டுநாள் முகாமில் கலந்து கொண்டு அங்கு மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர் என் பது குறிப்பிடத்தக்கது. முடி வில் கேந்திர பொருளாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கலாச்சார போட்டிகள் நடந்தது.
- வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை இலக்கிய மன்றமும், ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்திய கலாச்சார பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் கலாச்சார போட்டிகளை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களான திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் கோகுலஹரி, சிவகாசி விஸ்டம் வெல்த் சர்வதேச பள்ளி நிர்வாக அதிகாரி முத்துக்குமார், புகைப்பட மற்றும் காணொளி வடிவமைப்பாளர் வித்யஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலாச்சார சமையல், வண்ண சுவரொட்டி தயாரித்தல், ரங்கோலி, குறும்படம். மாறுவேடப் போட்டிகள் நடந்தன. நடுவர்களாக முன்னாள் செயல்பட்டனர். 108 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 4 அணிகளாகப் பிரிந்து இந்த போட்டிகளில் பங்கேற்றனர். முதல்நிலை வெற்றியாளர்களுக்கான கோப்பையை கிளடியேட்டர்கள் என்ற அணி வென்றது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் பெமினா வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் புவனா, ஆங்கில மொழி பயிற்றுநர் ஹரிஹரன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்