search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்பாட்டு போட்டி"

    • மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் கேந்திர பொருளாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரம், என்.ஏ.ராமச் சந்திரராஜா அறக்கட்டளை சார்பில் இயங்கும் ராஜபா ளையம் விவேகானந்த கேந் திர கிளையும் இணைந்து, விருதுநகர் மாவட்ட அள வில் நகர்ப்பு றப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகளை ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி யில் நடத்தின.

    ராஜபாளையம் விவேகா னந்த கேந்திரக் கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ண மூர்த்திராஜா தலைமை தாங்கி பேசினார். என்.ஏ. ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ண மூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டி களைத் தொடங்கி வைத் தார். கேந்திரக்கிளைச் செய லர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.

    விவேகானந்தக் கேந்திரம் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் பேச்சியப் பன் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு இடையேயான ஒப்பு வித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, போன்ற பல்வேறுவிதமான போட்டிகளின் விவரங் களை விளக்கமாகக் கூறி நடுவர்களை அறிமுகப்படுத் தினார். போட்டிக ளில் 32 பள்ளிகளிலிருந்து 350-க் கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்ற னர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிக ளுக்கு நூல், சான்றிதழ்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவி கள் கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரத்தில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இரண்டுநாள் முகாமில் கலந்து கொண்டு அங்கு மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர் என் பது குறிப்பிடத்தக்கது. முடி வில் கேந்திர பொருளாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×