search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Protection"

    • வன பாதுகாப்புத்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை அமைப்பு சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

     உடுமலை:

    உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் மாவடப்பு செட்டில்மென்ட் கிராமத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாசா தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம், வன பாதுகாப்புத்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை அமைப்பு சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, தன் சுத்தம் பேனல், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், வன பாதுகாப்பு அலுவலர் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மலைவாழ் மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • குழந்தைகளுக்கான பல்வேறு சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது. அவர் பேசுகையில், குழந்தைகள் சாலைபாதுகாப்பு விதிகளை நன்கு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சாலை பாதுகாப்பு தொடர்பாக இங்கு விளக்கப்பட்ட காணொலியில் சாலைப்பாதுகாப்பு விதிமிறல்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை தவிர்கும் வழிமுறைகள் பற்றியும், பள்ளி குழந்தைகள் சாலைவிதிகளை பின்பற்றினால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும் என்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். குழந்தைகளுக்கான பல்வேறு சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இதில் துணை போக்குவரத்து ஆணையர் ரவிசந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் குலசேகரமந்திர செல்வி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு சாலைபாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் சுமார் 750 மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • சைல்டு லைன் குறித்தும் விளக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் குப்பிடிச்சாத்தம் ஊராட்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு சமூக பணியாளர் நிரோஷா, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு உறுதிசெய்தல், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து

    அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தடுப்பு குறித்து சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

    இதில், காவல் துறையினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

    • குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

    குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் எனவும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் இல்லாத குழந்தை நேய சமூகத்தை உருவாக்குவதோடு குழந்தைகளை மரியாதையோடும், மதிப்போடும், தோழமையோடும் நடத்துவேன் எனவும்... குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்வேன் எனவும், 1098 ஐ அழைப்பேன் எனவும் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் விளக்கமாக பேசப்பட்டது.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குஞ்சப்பனை ஊராட்சி சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ரம்யா மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • 8 வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

    திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு வாட்ஸ்ஆப் குரூப் மூலம் தகவல்களை பரிமாறி குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்தார். மேலும் 18 வயது வரை உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், 24 மணி நேர இலவச தொலைபேசி எண் 1098, அவசர போலீஸ் எண் 100, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக எண் 04575240166 அறிவிக்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி, சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநின்ற குழந்தை,நிதி ஆதரவுத்திட்டம்,ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து பேசினார்.
    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள்குறித்தும் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநின்ற குழந்தை,நிதி ஆதரவுத்திட்டம்,ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள்குறித்தும் பேசினார்.

    வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகை திருச்செந்தூர் வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன் தலைமையில் வைக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா,பொங்கலரசி,தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி,அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேரி, மற்றும் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
    • கூட்டத்திற்கு குழுவின் தலைவரும், நட்டாத்தி ஊராட்சி தலைவருமான சுதாகலா தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தாய் தந்தையை இழந்த கொம்புக்காரன் பொட்டலைச் சேர்ந்த பிரகாஷ் என்ற குழந்தைக்கு அரசு நிதி உதவி வழங்க விண்ணப்பம் பெறப்பட்டது. குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வளர் இளம் பெண்கள் கூட்டம், மகளிர் சுய உதவி குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    கண்ணான்டி விளை வளர்இளம் பெண்கள் கூட்டம், பட்டான்டி விளை மகளிர் சுய உதவி குழு கூட்டம் மற்றும் நட்டாத்தியில் ஊராட்சியில் 6 ஆரம்ப பள்ளிகளில் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு குழுவின் தலைவரும், நட்டாத்தி ஊராட்சி தலைவருமான சுதாகலா தலைமை தாங்கி னார். குழுவின் செயலர் கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ் பானுகோபன் மற்றும் உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர் ஜெமி ஜெயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் அனிதா, போலீசார் சண்முகம் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொம்புகாரன் பொட்டல் பண்டாரம், சுப்பிர மணியபுரம் ஜேஸ்மின் கோவில் பிள்ளை, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் எஸ்தர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் கள் தேவி சகுந்தலா, ஜோதி கனி, உச்சிமாகாளி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை நட்டாத்தி ஊராட்சி செய லர் முத்துராஜ் செய்து இருந்தார்.

    தயா பவுண்டேஷன் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வருகிற 24-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று லதா ரஜினிகாந்த் கூறினார். #DhayaFoundation #LathaRajinikanth
    நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், ‘தயா’ பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான லதா ரஜினிகாந்த் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கல்வியாளராகிய நீங்கள் ‘தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி, சமூக சேவை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்கு தோன்றியது?

    பதில்:- நிறைய தர்மங்கள், சேவைகள் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய அப்பா, அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். சிறு வயதிலேயே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதன் வெளிப்பாடு தான் ‘தயா பவுண்டேஷன்’ உருவாக காரணம்.

    இந்திய பண்பாட்டுடன் ஒட்டிய வாழ்க்கையில், சமூக சேவை என்பது ஒரு அங்கம். தற்போது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் சமூக சேவை ஆற்ற வேண்டும் என்று எங்களுடைய பள்ளி (தி ஆஷ்ரம் குருப் ஆப் இன்ஸ்டிட்டியூஷன்) குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கிறோம்.

    கேள்வி:- ‘தயா’ அமைப்பு மூலம் எத்தனை குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இத்தனை குழந்தைகளுக்கு உதவியிருக்கிறோம் என்று நாங்கள் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. எல்லா ஊர்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் தயாவோடு தொடர்பு இருக்கிறது. பல குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வந்து எங்களுடன் இணைத்து மேடையில் ஏற்றியிருக்கிறோம். இப்படி 40 ஆண்டுகளாக பல தரப்பட்ட குழந்தைகளை நான் பார்த்து இருக்கிறேன். நான் பார்த்த குழந்தைகள், கல்யாணம் ஆன பிறகு கூட என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கி செல்கிறார்கள்.

    கேள்வி:- ‘தயா’ அமைப்பில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார்?

    பதில்:- எங்களுக்கு பக்கபலமாக ‘டாடா’ அறக்கட்டளை இருக்கிறது. பலவிதமான தேவைகள் மேலும் தேவைப்படுகிறது. தயா அமைப்பின் முயற்சிகள் என்பது, அனைவரும் ஒன்றாக சேரவேண்டும். இந்த ஒருங்கிணைப்பு இருந்தாலே நம்முடைய சமுதாயத்தை நாமே பாதுகாக்க முடியும்.

    இதற்காக எல்லா ஊர்களிலும் தயா அமைப்பின் மையங்களை உருவாக்க போகிறோம். தற்போது சென்னையை தவிர புனே, மும்பையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- நீங்கள் செய்யும் சேவைக்கு அரசு உதவி இருக்கிறதா?



    பதில்:- இதுவரைக்கும் சாருடைய (ரஜினிகாந்த்), என்னுடைய சொந்த முயற்சியில் நடந்தது தான் தயா அமைப்பின் பணிகள். தற்போது ஒரு லட்சம் பேருக்கு செய்வது, இன்னும் 10 லட்சம் பேருக்கு போய் சேர வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே இதற்கு பல பேருடைய துணை தேவைப்படுகிறது.

    ஏனென்றால் குழந்தைகளுக்கான தேவை தற்போது அதிகமாக இருக்கிறது. நாம் செய்கிற உதவிகள் பல பேருக்கு போய் சேர வேண்டும். எனவே யாரெல்லாம் தயா பவுண்டேஷனில் சேர விரும்புகிறார்களோ? மனதார நன்கொடை அளிக்க முன்வருகிறார்களோ? அவர்களுக்கு தயா அன்னதானம், தயா பூஜன், தயா கல்வி நிறுவனம் என்று தனித்தனி திட்டங்கள் இருக்கிறது.

    கேள்வி:- ‘தயா’ அமைப்பு சார்பில் 24-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சி எப்படி இருக்கும்?

    பதில்:- தற்போதைய சூழலில் குழந்தைகள் ஒரு எந்திர வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஐ-பாட், செல்போன்கள், டி.வி.க்கள் என்று வேறுமாதிரியான சூழலில் தான் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

    பழைய இந்தியா எப்படி இருந்தது? என்பது தெரியவில்லை. உலகம் புரிகிறது, அதில் இந்தியா குறைவான அளவே தெரிகிறது. எனவே இந்தியாவை பற்றி நன்றாக பிள்ளைகள் புரிந்துகொள்ளவேண்டும். நமது வழிமுறைகள், பாரம்பரியம், கலாசாரம், கலை போன்றவற்றை கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம்.

    முக்கியமாக ‘ஒன்றாக சேருதல்’ என்ற பழக்கம் வரவேண்டும். ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசும்போது தான் மனநிலை நன்றாக இருக்கும். தனியாக இருக்கும்போது தான் மனநிலையில் பிரச்சினை ஏற்படுகிறது. தனியாக ஒதுங்குதல், தனியாகவே இருத்தல், பேசாமல் இருத்தல், சிரிக்காமல் இருத்தல், ஆடாமல்-பாடாமல் இருத்தல் போன்றவை தான் மன அழுத்தம் வர காரணமாக அமைகிறது. அந்த மன அழுத்தம் வரக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற திருவிழாக்களை நாங்கள் நடத்துகிறோம்.

    திருவான்மியூர் கன்வென்ஷன் சென்டரில் சமீபத்தில் 3 நாட்கள் திருவிழா நடத்தினோம். அந்த விழாவில் எங்கள் நோக்கத்தை விதைத்துவிட்டோம். தற்போது 24-ந்தேதி அதே இடத்தில் மீண்டும் நடக்கும் புதிய திருவிழாவில் 1,500 குழந்தைகள் மேடையில் சிறந்த கலைஞர்களுடன் தங்கள் திறமையை வெளிக்கொணர உள்ளனர்.

    ‘எங்கள் உலகத்தின் முன்னோடிகளாக நாங்கள் உருவாகிறோம்’, என்று குழந்தைகள் தங்களுக்காக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். முதலில் குழந்தைகள் குழந்தைகளுக்காக உறுதிமொழி எடுக்கிறார்கள். பின்னர் பெரியவர்களும், குழந்தைகளும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்காக நாங்கள் என்று பெரியவர்கள் உறுதிமொழி எடுக்கிறார்கள்.

    எல்லா இடங்களிலும் குழந்தைகள் குறித்த முதன்மையான எண்ணம் உருவாக வேண்டும். அதுதான் முக்கியம். இந்த திருவிழாவில் குழந்தைகள் தான் சிறப்பு விருந்தினர்கள். இது ஒரு பொது காரியம். இதில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். மேலும் விளையாட்டு, சினிமா, கார்ப்பரேட் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பிலும் இருந்து பிரபலங்கள் வருகிறார்கள்.

    மாலை 5 மணி முதல் 8 மணி வரை விழா நடைபெறுகிறது. தயா பவுண்டேஷன் உள்பட அரசு-தனியார் பள்ளி குழந்தைகள், சாலையோர குழந்தைகள் என எல்லா தரப்பிலான குழந்தைகளும் பங்கேற்க இருக்கிறார்கள். சிறு வயதிலேயே பிரபலங்களாக உயர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள். அவர்களது தனித்தன்மையை மேடையில் நாங்கள் எடுத்து கூற இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 10 குழந்தைகள் எங்கள் முக்கியமானவர்கள் பட்டியலில் (ஹால் ஆப் பேம்) இடம்பெறுவார்கள்.

    இசை, நாட்டியம் என திருவிழா நிறைந்திருக்கும். இசையமைப்பாளர் அனிருத், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போன்றவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்த திருவிழாவில் எதுவுமே போட்டியாக இருக்காது. குழந்தைகள் முழுக்க முழுக்க அனுபவித்து மகிழும் தளமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா நடக்கும்.

    கேள்வி:- சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு தயா அமைப்பு சார்பில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

    பதில்:- நீண்ட வருடங்களாக குழந்தைகளுக்கு என்று எந்த சிறந்த காரியங்களும் சமுதாயத்தில் நடைபெறவில்லை. பல தலைமுறைகளாக ஏதோ ஒரு விஷயத்தில் குழந்தைகள் தவித்துதான் வருகின்றனர். குப்பையில் கிடந்து உருண்டு தவழ்ந்தாலும், பங்களாவில் செழிப்பாக வளர்ந்தாலும் குழந்தையின் தேவை ஒன்று தான். பிறந்தது முதல் வளர்வது வரை அவர்களின் தேவை அன்பும், பாசமும், அரவணைப்பும் தான். அதோடு பாதுகாப்பும் மிக அவசியம்.

    அன்றைய சமுதாயத்தில் மக்கள் மிகவும் மனோபலம் கொண்டவர்களாக, உணர்வுரீதியாக உயர்ந்தவர்களாக இருந்தனர். பக்குவமான பெரியவர்களாக இருந்தனர். அந்த சூழ்நிலையில் எதையும் நமக்கு சொல்லித்தர தேவையில்லை. தானாகவே தெரிந்துகொண்டோம். இன்றைக்கு நாம் எதையும் சத்தம்போட்டு சொல்ல வேண்டியதிருக்கிறது. சமுதாயத்தில் பண்புகள், கலாசாரங்கள், ஒருங்கிணைந்து செயல்படுவது, ஒற்றுமை இதெல்லாமே குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் குழந்தைகள் வளருகிறார்கள். அப்படி வளரும்போது அவர்களது சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்களேன்...

    குழந்தைகள் உலகத்தில் வன்கொடுமை, சுரண்டல், தவறான பார்வை, கடத்தல் உள்பட பல பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது. இதில் சிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை என்னாகும் என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கான தீர்வுகள் என்னென்ன? என்பது 24-ந்தேதி திருவிழாவில் சொல்கிறோம். விழாவின் கடைசிபாகத்தில் அந்த முக்கிய தகவல் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DhayaFoundation #LathaRajinikanth
    ×