search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
    X

    கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

    • சைல்டு லைன் குறித்தும் விளக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் குப்பிடிச்சாத்தம் ஊராட்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு சமூக பணியாளர் நிரோஷா, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு உறுதிசெய்தல், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து

    அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தடுப்பு குறித்து சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

    இதில், காவல் துறையினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

    Next Story
    ×