search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Decision"

    • சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.
    • இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், ரகு, லட்சுமியிடம் நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கூறி மிரட்டியுள்ளார். அவர் மறுத்ததால் ரகு தனது கூட்டாளிகளை அழைத்து வந்து கொடூரமாக லட்சுமியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தனிப்படை போலீசார் தீவிரமாக கொலையாளி களை தேடி வந்த நிலையில் பிரபல ரவுடி ரகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

    தொடர்ந்து போலீசார், அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ரகமதுல்லாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஷேக்மைதீன் (வயது 29), சேலம் செவ்வாய்ப்பேட்டை லட்சுமி அய்யர் வீதியை சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி (19), மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய 3 பேரும் நேற்று பவானி ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து நீதிபதி, சரண் அடைந்த இவர்கள் 3 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 3 பேரும் ெஜயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    ஏற்கனவே சரண் அடைந்த ரகுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே மேலும் அவரது கூட்டாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    போலீசார், இதற்கான ஆவணங்களை கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் லட்சுமி கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ரகு உள்பட 4 பேரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பார்கள்.

    அதன்அடிப்படையில் போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

    • விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
    • அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு தனி இடம்.

    சூலூர்,

    சூலூர் வாரச்சந்தையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் சண்முகம் தலைமையில் ஒன்று கூடினர்.

    அப்போது வாரச்சந்தையில் விவசாயிகள் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

    வாரச்சந்தை சுங்க கட்டண வசூலிப்பாளர், விவசாயிகளுக்கு வார சந்தையில் தனி இடம் ஒதுக்கி தர வேண்டிய அதிகாரம் பேரூராட்சிககு உட்பட்டது.

    சந்தையில் விற்பனை செய்யும் பொருள்களுக்கு சுங்கம் வசூலிக்கவே தான் இந்த சந்தையில் ஏலம் எடுத்துள்ளதாகவும் விவசாயிகளுக்கு குறைவான கட்டணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு மூட்டைக்கு 50 ரூபாய் சுங்க கட்டணமாக வசூலிப்பது கூடாது என தெரிவித்தனர்.

    மேலும் வாரச்சந்தையில் விவசாயிகளிடம் வாங்கி விற்கும் விற்பனையாளர்களுக்கு இதனால் எவ்வித இட யூறும் ஏற்படாது என்றார்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரச்சந்தையில் கூடியதால் அப்பகுதிக்கு சூலூர் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மன்னவன், சூலூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மதிமுக கோவை மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு என சூலூர் வாரச்சந்தையில் தனியிடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்தர். இதனை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • மரக்காணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பழனி முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, திருவேங்கடம், கவுன்சிலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது பஞ்சாயத்துகளின் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். அதற்கு சேர்மன் தயாளன் அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்றப்படும் என்று பதிலளித்தார்.  இதனைத் தொடர்ந்து மரக்காணம் ஒன்றியம் பிரம்மதேசம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சிலர் அரசு அனுமதி பெறாமல் கல் குவாரிகள் நடத்தி வருகின்றனர். அவ்வாறு அனுமதி பெறாமல் நடத்தப்படும் கல் குவாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மரக்காணம் அருகே செட்டி குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இறால் குஞ்சு பொறிப்பு தொழிற்சாலைகளுக்கு சட்ட விரோதமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுகின்றனர். இவ்வாறு உறிஞ்சிவதால் தற்பொழுது கோடை காலம் என்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை உள்ளது.

    எனவே சட்ட விரோதமாக ஆழ்துளை குழாய்கள் அமைத்து தண்ணீரை உறிஞ்சும் தனியார் இறால் குஞ்சு பொறிப்பு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

    சேலம்:

    மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    சேலத்தில்...

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

    • சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் தேசியக்கொடிகளை தயார் செய்ய முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கொடிகள் தேவைப்படுவோர் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் தேவையை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து உரிய மரியாதை செலுத்திட பிரதமர் மோடி வெளியிடப்பட்ட அறிக்கையினை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தேசியக்கொடி, தரமான தாகவும், மிக குறைந்த விலையிலும் மற்றும் எளிதில் அருகாமையில் கிடைக்கும் வகையிலும் செய்திட மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    அதில் ஒரு நடவடிக்கை யாக கிராமங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் தரமான கொடிகளை குழுக்கள் மூலமாகவே தயார் செய்து குழு உறுப்பி னர்களுக்கும், கிராம மக்களுக்கும் மிக விரைவில் கிடைத்திடவும், இதன் மூலம் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு வருமானத்தையும் ஏற்படுத்தி தரும் வகையிலும் 11 வட்டாரங்களில் 33 குழுக்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் கொடிகள் தைத்து வழங்கிடவும் 1 லட்சம் தயார் நிலையில் உள்ள கொடிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்திடவும் மாவட்ட கலெக்டரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொடிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி தேவைப்படு வோர் சில்லரையாகவோ, மொத்தமாகவோ அந்தந்த ஊராட்சிகளில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு ஒன்றியங்கள் வாரியாக கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் 96007-17293, திருப்புல்லாணி 63745-34691, மண்டபம் 95003-70615, ஆர், எஸ்.மங்களம் 91594-69563, திருவாடணை 97863-51888, பரமக்குடி 87788-38898, நயினார்கோவில் 99421-30078, போகலூர் 95004-64169, முதுகுளத்தூர் 90806-98257, கமுதி 90473-75371, கடலாடி 95142-68837. எனவே, கொடிகள் தேவைப்படுவோர் தங்களின் தேவையை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • கடையம் யூனியன் அலுவலக சுவற்றில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வணிக வளாகம் அமைக்க வேண்டும்.
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைக்கான அட்டையை ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் வழங்க அனுமதிக்க வேண்டும்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 பஞ்சாயத்துக்களின் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் துப்பாக்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவர் டி.கே .பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் பூமிநாத் முன்னிலை வகித்தார். துப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெறும் பணிகளுக்கான பேக்கேஜ் டெண்டருக்கு ஒப்பந்ததாரரை ஊராட்சி தலைவரே நியமிக்கவும், 75-வது சுதந்திர தின விழாவில் அனைத்து ஊராட்சிகளிலும் கல்வெட்டுகள் அமைத்து கொடியேற்றவும், கடையம் யூனியன் அலுவலக சுவற்றில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வணிக வளாகம் அமைக்க வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைக்கான அட்டையை ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம் , கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளராக திருமலையப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் அணைந்த பெருமாள்நாடனூர் அழகுதுரை, கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், அடைச்சாணி மதியழகன்,பொட்டல்புதூர் கணேசன்,மந்தியூர் கல்யாணசுந்தரம் , ஐந்தாங் கட்டளை முப்புடாதி பெரியசாமி, சிவசைலம் மலர்மதி சங்கரபாண்டியன் ,முதலியார்பட்டி முகைதீன் பீவி அசன்,கடையம் முத்துலட்சுமி ராமதுரை, மேலஆம்பூர் குயிலி லட்சுமணன் , பாப்பான்குளம் முருகன், தர்மபுரம் மடம் ரூகான் ஜன்னத் சதாம், வீராச முத்திரம் பர்வீன் யாகூப், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், கீழ ஆம்பூர் மாரிசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 100 காலியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு உத்தரவிட்டுள்ளது.
    • பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இதில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.7,500, நடுநிலை, உயா்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

    இதற்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவா்களுக்கு முன்னுரிமை வழங்கவும், அதன்பிறகு, ஆசிரியா் பயிற்சி முடித்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், கொல்லிமலை ஒன்றியத்தில் 41 காலியிடங்களும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 9 இடங்களும், இதர ஒன்றியங்களில் 21 பணியிடங்கள் என மொத்தம் 71 இடங்களில் இடைநிலை ஆசிரியா்களை பணியமா்த்தவும், 15 பட்டதாரி ஆசிரியா்கள், 14 முதுநிலை ஆசிரியா்களும் நியமனம் செய்யப்பட உள்ளனா்.

    அந்தந்த ஒன்றியத்திற்கு உள்பட்டவா்கள் காலியிடங்கள் உள்ள பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக அறிந்து தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம், சான்றிதழ்களை வழங்கி, தங்களுடைய பாடப்பிரிவுக்கான பணியிடம் காலியாக இருப்பின் வேலைவாய்ப்பு கோரலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.

    காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலமும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் உள்ளதால் 8 மாதங்களுக்கு மட்டும் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக பணியிடத்தில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், பதவி உயர்வு மூலமோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமோ நிரப்பபடும் பொழுது தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×