search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teaching posts"

    • சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
    • கான்ட்ராக்ஸ் பணியிடத்தை நிரப்ப 90 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் 10-ம் வகுப்புக்கும், 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டிக்கும் ஏற்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இதற்கு விண்ணப்பிக்க கல்வி தகுதிகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

    அதை மாற்றி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பொது 90, எம்.பி.சி, மீனவர், ஓ.பி.சி, முஸ்லீம் பிரிவினர் 82, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் 75 மதிப்பெண் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

    இதன்படி விண்ணப்பங்கள் பெற்றதும் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதேபோல வழிமுறைகள், வெயிட்டேஜ் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு பிளஸ்-2, டிப்ளமோ ஆசிரியர் படிப்பில் 70 சதவீதம், டெட் தகுதியில் 20 சதவீதம், வேலைவாய்ப்பு சீனியாரிட்டியில் 10 சதவீதம் வெயிட்டேஜ் அளிக்கப்படும். பட்டப்படிப்பு, பிஎட் படிப்பில் 70 சதவீதம், டெட் தேர்வில் 20 சதவீதம், வேலைவாய்ப்பு சீனியாரிட்டியில் 10 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும். பள்ளிநூலகம், உடற்கல்வி விரிவுரையாளர், ஆசிரியர், பல்வேறு பாட விரிவுரையாளர் பணிக்கு அவர்களின் படிப்பில் 90 சதவீதம், வேலைவாய்ப்பில் 10 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும்.

    பாலசேவிகா பணிக்கு பிளஸ் 2 படிப்பில் 50 சதவீதம், பாலசேவிகா அல்லது டிப்ளமோ சான்றிதழில் 50 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும். தொடர்ந்து இந்த மதிப்பெண்கள் 90 சதவீதமாக ஆசிரியர் தகுதிக்காக மாற்றப்படும். மீதமுள்ள 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டி கவனத்தில் கொள்ளப்படும். கான்ட்ராக்ஸ் பணியிடத்தை நிரப்ப 90 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் 10-ம் வகுப்புக்கும், 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டிக்கும் ஏற்கப்படும்.

    ஆசிரியர் அல்லாத பணிக்கான பால்பவன் பயிற்றுநர், நுண்கலை ஆசிரியர், கலை ஆசிரியர், நிகழ்கலை ஆசிரியர், தையல் ஆசிரியர் பணிகளுக்கு 50 சதவீத மதிப்பெண், 40 சதவீத கலை தேர்வு, 10 சதவீத வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில் வெயிட்டேஜ் தரப்படும்.

    இந்த படிப்புகளில் மதிப்பெண் தராமல் கிரேடு தரப்பட்டிருந்தால் 50 சதவீதம் மேல் முதல் வகுப்பு, 45 சதவீதத்துக்கு மேல் 2-ம் வகுப்பு, 40 சதவீதத்துக்கு மேல் 3-ம் வகுப்பு தேர்ச்சியாக கவனத்தில் கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
    • மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமீமா பீவி, மஹ்ஜபின் சல்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், கடந்த 4ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எண்ணும், எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் உள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த பற்றாக்குறையை எப்போது நிவர்த்தி செய்யப்படும்? என ேகள்வி எழுப்பினர். அப்போது தலைமை ஆசிரியை, இதுகுறித்து கல்வி அதிகாரி களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் பற்றாக்குறையை சரி செய்வார்கள் என்றும் கூறினார்.

    அப்போது உறுப்பினர்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதே பதில்தான் கூறப்படு வதாகவும், உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாவிட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்போம் என்றும் கூறினர்.

    ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும், இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆசிரியைகள் புஷ்பா, இஸ்மத் ராணி உட்பட இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.

    காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலமும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் உள்ளதால் 8 மாதங்களுக்கு மட்டும் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிக பணியிடத்தில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    இந்த தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 139, பட்டதாரி ஆசிரியர்கள் 48, முதுகலை பட்டதாரி 94 என மொத்தம் 281 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், பதவி உயர்வு மூலமோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமோ நிரப்பபடும் பொழுது தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. #JapanUniversity #Ban #Smoking
    டோக்கியோ:

    ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், பணியில் சேருவதற்கு முன்பாக புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவேன் என உறுதி அளித்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் யூசுகே தாகுகுரா கூறுகையில், “புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் கல்வித்துறைக்கு பொருத்தம் இல்லாதவர்கள் என்கிற முடிவுக்கு வந்துள்ளோம். நாகசாகி பல்கலைக்கழகத்தை புகைப்பிடிப்பவர்கள் இல்லாத பல்கலைக்கழகமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்காக பல்கலைக்கழகத்துக்கு உள்ளே மருத்துவமனை தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.  #JapanUniversity #Ban #Smoking 
    ×