search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய"

    • மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெறுகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின் நிறைவாக ஜெயங்கொண்டத்தில் நாளை (வியாழக்கிழமை) தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்று காலை புதுச்சாவடி கிராமத்தில் தப்பாட்ட இசைக்குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசாரம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மீனா, பத்மாவதி, சேகர் குமார், வீரப்பன், தியாகராஜன் ஆகிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பிரசார பயணம் ஆமணக்கந்தோண்டி, கடாரம்கொண்டான், உட்கோட்டை, வீரசோழபுரம், கங்கைகொண்ட சோழபுரம், இளையபெருமாநல்லூர், முத்து சேர்வாமடம், மீன்சுருட்டி, வெத்தியார் வெட்டு, சலுப்பை வழியாக ஜெயங்கொண்டத்தில் இரவு 7 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்தது. இதில், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

    சேலம்:

    மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    சேலத்தில்...

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

    • மத்திய அரசு பணிகளில் 90 சதவீத தமிழகத்தை சேர்ந்வர்களை பணியமர்த்த கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை கலெக்டரிடம் மனு

    திருச்சி:

    மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை சார்பில் அதன் தலைவர் பொன்.முருகன், துணை பொதுச்செயலாளர் ஞானசேகர் கலெக்டர் பிரதீப் குமாரிடம் அளித்த மனுவில், "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் யு.பி.எஸ்.சி. தகுதி தேர்வில் தமிழ்மொழியிலும் வினாக்கள் கேட்கப்பட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்தி மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலிக்க அனுமதி அளித்தது வருந்ததக்கது.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்" என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நிர்வாகிகள் வக்கீல் சன்.மாரியப்பன், சக்தி, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் உள்ளிட்டோ

    • ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.

    கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.

    எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • மத்திய அரசு பணிக்கான தேர்வில் சேலம், நாமக்கல் பட்டதாரிகள் தேர்ச்சி.
    • பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    பட்டதாரிகளுக்கான கணினி அடிப்படையிலான இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெற்றது.

    4 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 536 பேர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசித்து வரும் பட்டதாரிகள், முதுநிைல பட்டதாரிகள் என ஏராளமானோர் எழுதினர்.

    இந்த நிலையில் பேஸ்-9 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் தகுதியான தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ெமாத்தம் 14 ஆயிரத்து 345 பேர் அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக பட்டியலி னத்தவர் -2306 பேர், பழங்குடியினர் -1140 , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3165 , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -1014, பொதுப்பிரிவு- 6424, இ.எஸ்.எம்.-174, ஓ.எச்-68, எச்.எச்-19, வி.எச்-29, இதர மாற்றுத்திறனாளிகள் -6 என 14 ஆயிரத்து 345 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து துணை ஆவணங்களின் நகலை கையோப்பம் போட்டு சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, அனுபவம், வகை, வயது, வயது தளர்வு, முதலியவற்றை ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த பிராந்திய அலுவலகங்களுக்கு வருகிற 22-ந்தேதி விரைவு தபால் வழியாக மட்டுேம அனுப்ப வேண்டும்.

    உறையின் மேல் பகுதியில் "பட்டதாரி மற்றும் அதற்கு மேல் நிலை" மற்றும் வகை எண் எழுத வேண்டும். ஒரு விண்ணப்பதார் 3 வகை பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    ×