search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national flags"

    • சிவகாசியில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும்.

    சிவகாசி

    சுதந்திர தின கொண்டாட் டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. சுதந்திர தின கொண்டாடத்தில் அனைவரின் நெஞ்சங்களி–லும் தவறாமல் இடம் பிடிப் பது மூவர்ண தேசிய கொடி என்றால் அது மிகையல்ல. விருதுநகர் மாவட்டம் சிவ–காசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக் கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிக–ளும் விறுவிறுப்பாக நடை–பெற்று வருகிறது.

    சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடி–கள், வார்னிஷ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தயாராகி வருகின்றன. சட் டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புக–ளில் பொருத்தும் வகையி–லான அட்டையால் தயாரிக் கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வரு–கின்றன. மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்து–டன் கூடிய தேசிய கொடி–கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்து–டன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப் பட்டு வருகின்றன. மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகை–யில் தேசியக் கொடிகள், கைகளில் மாட்டிக் கொள் ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட் டுள்ளன.

    தேசிய கொடிகள் தயா–ரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையா–ளர் கூறும்போது, எங்களது அச்சகத்தில் பல்வேறு வகை–களிலான அச்சு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக் கும் பணிகளையும் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரப–லமான பள்ளிகள், கல்லூரி–களில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கா க தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள். பொதுமக்கள் பயன்ப–டுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்க–ளிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளது. படிப்படியாக தமிழகம் முழு–வதும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை சட்டைக–ளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது. இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடை–களில் விற்பனை செய்வ–தற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.

    ஒரு முறை எங்களது நிறுவனத்தில் தேசிய கொடி–கள் வாங்குபவர்கள் பின்னர் தொடர்ந்து ஒவ் வொரு ஆண்டும் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உள்ளது. பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்த–வில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தேசிய கொடி–கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வரு–கின்றன என்றார்.

    • தனது சொந்த செலவில் வேதாரண்யம் பகுதியில் தேசியக் கொடிகள் வழங்கினார்.
    • பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு 3000 தேசியக் கொடிகள் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகானந்தம். இவர் தனது சொந்த செலவில் வேதாரண்யம் பகுதியில் உள்ள கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, கருப்பம் புலம் தெற்கு காடு நடுநிலைப்பள்ளி, ஆதனூர் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு 3000 தேசியக் கொடிகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்துகொண்டனர்.

    • ஒவ்வொரு மண்டலத்திலும் தலா நாற்பதாயிரம் கொடி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருச்சி மாநகராட்சி பகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் உள்ளன.

    திருச்சி:

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சம் தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தேசியக் கொடி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் தலா நாற்பதாயிரம் கொடி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கொடிக்கு ரூ.21 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சி பகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் இரண்டு லட்சம் மக்களுக்கு கொடி விற்பனை செய்யலாம் என கருதுகின்றனர். இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், நமது மாநகராட்சி கவுன்சிலர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறோம். மேலும் 16 ஆயிரம் கொடிகள் பள்ளிகளுக்கு வழங்க இருக்கின்றோம்.

    கவுன்சிலர்கள் நன்கொடையாளர்கள் மூலம் தேசியக் கொடிகளை வாங்கி வார்டு மக்களுக்கு இலவசமாக கொடுத்தால் நிறைய வீடுகளில் கொடி ஏற்றும் வாய்ப்பு ஏற்படும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    துணியினால் செய்யப்பட்ட இந்த கொடி ரூ.21 -க்கு வாங்கப்பட்டு அதே விலைக்கு பொதுமக்களுக்கு விநியோகிப்பதாகவும், இதில் எந்த லாப நோக்கமும் இல்லை எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் தேசியக்கொடிகளை தயார் செய்ய முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கொடிகள் தேவைப்படுவோர் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் தேவையை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து உரிய மரியாதை செலுத்திட பிரதமர் மோடி வெளியிடப்பட்ட அறிக்கையினை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தேசியக்கொடி, தரமான தாகவும், மிக குறைந்த விலையிலும் மற்றும் எளிதில் அருகாமையில் கிடைக்கும் வகையிலும் செய்திட மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    அதில் ஒரு நடவடிக்கை யாக கிராமங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையில் தரமான கொடிகளை குழுக்கள் மூலமாகவே தயார் செய்து குழு உறுப்பி னர்களுக்கும், கிராம மக்களுக்கும் மிக விரைவில் கிடைத்திடவும், இதன் மூலம் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு வருமானத்தையும் ஏற்படுத்தி தரும் வகையிலும் 11 வட்டாரங்களில் 33 குழுக்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் கொடிகள் தைத்து வழங்கிடவும் 1 லட்சம் தயார் நிலையில் உள்ள கொடிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்திடவும் மாவட்ட கலெக்டரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொடிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி தேவைப்படு வோர் சில்லரையாகவோ, மொத்தமாகவோ அந்தந்த ஊராட்சிகளில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு ஒன்றியங்கள் வாரியாக கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் 96007-17293, திருப்புல்லாணி 63745-34691, மண்டபம் 95003-70615, ஆர், எஸ்.மங்களம் 91594-69563, திருவாடணை 97863-51888, பரமக்குடி 87788-38898, நயினார்கோவில் 99421-30078, போகலூர் 95004-64169, முதுகுளத்தூர் 90806-98257, கமுதி 90473-75371, கடலாடி 95142-68837. எனவே, கொடிகள் தேவைப்படுவோர் தங்களின் தேவையை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது.
    • அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது.

    திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது. அதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது. அஞ்சலகங்களில் தலா 25 ரூபாய்க்கு தேசியக்கொடி விற்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகளின் யோசனைப்படி தையல் தொழில் செய்து வரும் மகளிர் குழுவினர் தேசியக்கொடி தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளனர்.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு மாவட்டத்தில் தையல் தொழில் செய்து வரும் 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் கொடுத்து தலா 2,000 தேசியக்கொடிகள் வீதம், 20 ஆயிரம் தேசியக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- தேசிய அளவில், வீடுகள் தோறும் தேசியக்கொடி கட்டும் மக்கள் இயக்கம், விமரிசையாக நடக்க உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டுப்பற்றை பறைசாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் துணிகள் கொள்முதல் செய்து, 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் கொடி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கலெக்டர் அலுவலக மகளிர் திட்ட விற்பனை மையம் உட்பட, மக்கள் கூடும் இடங்களில் தேசியக்கொடி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுரையில் தேசியக்கொடி விற்பனையாகி வருகிறது.
    • பேன்சி ஸ்டோர் மளிகை கடை மற்றும் வணிக அங்காடிகளில் தேசியக்கொடி வாங்க கூட்டம் அலை மோதுகிறது.

    மதுரை

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பேசுகையில், வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய க்கொடி விற்பனை அதிகரித்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பேன்சி ஸ்டோர், மளிகை கடைகள், டிபா ர்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் பொது இடங்களில் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. மதுரையில் 50-க்கும் மேற்பட்ட ஆப்செட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தேசிய கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தையல் கடைகளிலும் தேசியக்கொடி தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்து உள்ளது.

    மதுரை கீழஆவணி மூல வீதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்கள் கூறுகையில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் தேசிய கொடி விற்பனை அதிகமாக இருக்கும். அரசு நிகழ்ச்சி உள்ளிட்ட தினங்களில் தேசியக்கொடி விற்பனை ஓரளவு இருக்கும். பிரதமர் மோடி தற்போது வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    சிவகாசி, திருப்பூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து தேசியக்கொடிக்கு கூடுதலாக ஆர்டர் கொடுத்துள்ளோம். 8 செமீ. உயரம்-12 செ.மீ. நீளம் முதல், 48-க்கு 72 செ.மீ. வரை பல்வேறு அளவுகளில் காட்டன் தேசியக்கொடி உள்ளது. இவற்றை ரூ.30 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கிறோம்.

    பாலியஸ்டர் கொடி 18க்கு 27 செ.மீ-ரூ.95, 24க்கு 36 செ.மீ- ரூ.140க்கு விற்கப்படுகிறது. சட்டை பாக்கெட்டில் ஒட்டும் ஸ்டிக்கர் கொடி 120 எண்ணம்-ரூ.100, சாதாரண பாக்கெட் கொடிகள் 5000 எண்ணம்-ரூ.500க்கு விற்கிறோம்.

    வாகனங்களின் முன்புறம் பறக்கவிடும் கொடி, விசிறி, தொப்பி என்று பல்வேறு வகைகளில் தேசிய கொடிகள் உள்ளன. வீடுகளில் ஏற்ற 8-க்கு 12 செ.மீ., அல்லது 14க்கு 21 செ.மீ., அளவுள்ள தேசிய கொடி பொருத்தமாக இருக்கும் என்றனர்.

    மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற ஆர்வமாக உள்ளதால், பேன்சி ஸ்டோர் மளிகை கடை மற்றும் வணிக அங்காடிகளில் தேசியக்கொடி வாங்க கூட்டம் அலை மோதுகிறது.

    தேசிய கொடியை மட்டும் காண்பித்து இது எந்த நாட்டு கொடி என கேள்வி எழுப்பினால் நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி பண்ருட்டி யூ.கே.ஜி. மாணவன் அசத்துகிறான். #PanrutiUKGStudent
    பண்ருட்டி:

    பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், இவரது மனைவி சுகன்யா இவர்களது மகன் ஹரி சரண் (வயது 4) இவன் பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறான்.

    பெற்றோர்களிடம் கல்வி கற்று வந்த சிறுவன் ஹரிசரனை கடந்தாண்டு பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் ப்ரி கே.ஜி.யில் சேர்த்தனர்.

    இவனது அபார திறனை வியந்தபள்ளி ஆசிரியைகள் சிறுவன் ஹரிசரணுக்கு தூண்டுகோலாக இருந்தனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய வி‌ஷயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்து வந்தனர். 2 வயதில் தொடங்கிய இவனது நினைவாற்றல் தற்போது 4 வயதில் அசத்தும் வகை பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டி வருகிறான்.

    கரும்பலகையில் அமைக்கப்பட்டுள்ள 200 உலக நாடுகளின் தேசிய கொடிகளை சுட்டிகாட்டி அவை எந்த நாட்டிற்கான கொடி என்று கேட்டால் கடகடவென வரிசையாக உலக நாடுகளின் பெயரை சொல்லி அசத்தி அனைவரின் பாராட்டை பெற்று சாதனை படைத்துள்ளான். இது மட்டும் இல்லாமல் கொடியை மட்டும் காண்பித்து இது எந்த நாட்டு கொடி என கேள்வி எழுப்பினால் நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி அசத்துகிறான்.

    ஹரிகரணின் அசத்தல் இதோடு மட்டும் இல்லாமல் உலக நாடுகளின் பெயர், தலைநகரம் ஆகியவையும் கூறி வருகிறான். தேவாரம், திருவாசகம் பாடல்களையும் மழலை மொழியில் பாடி அசத்தும் ஹரிசரணை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் பாராட்டுகின்றனர். சிறுவன் ஹரிசரணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இது பற்றி ஹரிசரணின் தாயார் சுகன்யா கூறியதாவது:-

    மாணவன் ஹரிசரண் படிப்பில் படுசுட்டி. படிப்பில் இவனுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்து இவனது ஆர்வத்தை தூண்டும் வகையில் இவனது படிப்பில் தனிகவனம் செலுத்தி வந்தோம்.

    ஹரிசரணுக்காக டி.வி. பார்ப்பதை தவிர்த்தோம். உலக நாடுகள் பெயர், அந்தந்த நாடுகளின்கொடி, சின்னம், தலைநகர் பெயர் ஆகியவைகளை பார்த்து படிக்க ஆரம்பித்தான். 2 வயதிலேயே 100 நாடுகளின் பெயர், கொடி ஆகியவை காண்பித்து சொல்ல தொடங்கினான். இப்போது 200 நாடுகளின் கொடியை காண்பித்து இது எந்தநாட்டு கொடி என்று கேட்டால் உடனே அந்த நாட்டின் பெயரை சொல்லும் அளவிற்கு சிறு வயதிலேயே ஞாபகசக்தியில் சிறந்து விளங்கி வருகிறான்.

    இவ்வாறு அவர் கூறினார். #PanrutiUKGStudent
    ×