search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "check"

    • இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை சீசன்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மேலும் இந்த இ-பாஸானது 3 வகை அடையாளக் கோடுகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளூர் பொதுமக்களுக்கு பச்சை நிற இ-பாசும், வேளாண் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை, சரக்கு வாகனங்களுக்கு நீல நிற இ-பாசும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஊதா நிறத்திலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், அரசு பஸ்களில் வருபவர்களின் விவரங்கள் போக்குவரத்து துறை மூலம் பெறப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இணையதளத்தில் சென்று இ-பாசுக்கு விண்ணப்பித்தனர். அதில், சுற்றுலா பயணிகள் எங்கிருந்து வருகிறீர்கள். எத்தனை நாள் இங்கு தங்க உள்ளீர்கள் என பல்வேறு விவரங்கள் அதில் கேட்கப்பட்டிருந்தது. அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை பூர்த்தி செய்து சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுக்கொண்டனர். விண்ணப்பித்த உடனே எளிதாக இ-பாஸ் கிடைத்ததால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று ஒரே நாளில் நீலகிரி வருவதற்கு 21,446 வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளன. இதில் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் நீலகிரிக்கு வருகை தர உள்ளனர்.

    இன்று காலை முதல் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. நீலகிரிக்கு வந்த அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லார், நாடுகாணி, தொரப்பள்ளி, சோலாடி, பாட்டவயல் உள்பட 16-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் சோதனை சாவடி வழியாக ஊட்டிக்கு வரும் தனியார் பஸ்கள், வேன்கள், கார்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.

    அவர்களிடம் இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் போலீசார் இ-பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதித்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள், வர்த்தக வாகனங்கள் தங்களுக்கான ஊதா நிறத்திலான இ-பாசையும், உள்ளூர் வாகனங்கள் தங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற இ-பாசை காண்பித்து சென்று வருகின்றனர்.

    அவர்கள் நீலகிரிக்குள் சென்றதும் அங்குள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    நேற்று இரவு முதல் மழை பெய்ததால் தற்போது ஊட்டியில் குளு,குளு காலநிலை நிலவி வருகிறது. இதனை அங்கு வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் ரசித்து அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வாகனங்கள் உடனுக்குடன் சென்றதால் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.
    • எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லையில் தமிழகம் மற்றும் புதுவை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர்.

    ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.கருவடிக் குப்பம் மற்றும் இடையஞ் சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் லாஸ்பேட்டை மற்றும் ஆரோவில் போலீ சார் 50-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இவர்கள் கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை பகுதி, சாமிபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.

    மேலும் வெடி பொருள், கத்தி போன்ற ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என சோதனையிட்டனர். ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்களிடம் மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்து கொள்ள எச்சரித்தனர்.

    இதே போன்ற சோதனை புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி வெடிமருந்து பதுக்கி வைத்தல், குற்ற நடவடிக்கைக்கு திட்டமிடுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இந்த சோதனையை 3 மாவட்ட போலீசாரும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் கடந்த 14-ந் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    பின்னர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.உடன் ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

    • புதியதாக அங்கன்வாடி மையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கடலூர் பச்சையாங்குப்பம் ஊராட்சி சொத்திக்குப்பம், காரைக்காடு, அன்னவல்லி, சாத்தங்குப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, குடிகாடு, புதுக்குப்பம், ஆண்டிக்குப்பம் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, பெரியகாரைக்காடு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நிதியின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

    புதுக்குப்பம் பகுதியில் கடலூர்- ராமாபுரம் ( வழி கண்ணாரப்பேட்டை, வழி சோதனைப்பாளையம்) வரை இயங்கி வந்த அரசு பஸ் சேவையை, புதுக்குப்பம் வரை நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலான பஸ் சேவையை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களில் மொத்தம் 176 நபர்களுக்கு ரூ.91 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை களை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், , கூட்டுறவு இணை பதிவாளர் நந்தகுமார், ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், விஜயசுந்தரம், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க உத்திரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான 132 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 93 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 46 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 44 மனுக்களும், இதர மனுக்கள் 184 ஆக மொத்தம் 531 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக 6 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை யினையும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.22,320 மதிப்பீடிலும், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பாதுகாவலர் சான்று மற்றும் ஒரு பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.6,800 மதிப்பீட்டிலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வாயிலாக ஒரு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையை யும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

    நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

    கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து பார்த்தனர்.

    கோத்தகிரி,

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வட்டார அளவில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் பூசனகுமார், குன்னூர் டி.எஸ்.பி குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (அமலாக்கம்) விஜயா ,கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, தீயணைப்புத்துறை ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்தது.

    அப்போது வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பள்ளி வாகனங்களில் பொருத்த வேண்டிய கண்காணிப்பு காமிராக்கள் அனைத்தும் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா, அவசர கதவுகள் சரியாக திறக்கப்படுகிறதா? என்று பரிசோதனை செய்தனர்.

    அப்போது காமிரா சரியாக எந்த இடத்தில் பொருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன் பிறகு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு அம்சங்கள் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அடுத்தபடியாக வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது, மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது, பள்ளி வாகனங்களில் இருக்கை அளவுக்கு ஏற்ப மட்டுமே குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டும், வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என்பவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளிடம் தவறான செயலில் ஈடுபடுபவர் மீது போக்சோ சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் தகுதி சான்று இல்லாத வாகனங்களை மீண்டும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் பள்ளி வாகன தகுதி ஆய்வின் போது வாகனங்களை ஆய்வு மேற்க்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • இரவு பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது.
    • அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்ததையொட்டி டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னையில் டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி சம்பந்தமாக கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகிறது.

    இதை மீறி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. இரவு பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக அடிக்கடி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகாரை தொடர்ந்து அடிக்கடி அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்து வருகின்றனர்.

    இதுபோல் அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி வட்டாரங்களில் அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்ததையொட்டி டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    சோதனையில் அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் 95 பார்களும், செங்குன்றத் தில் 53 பார்களும், பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் 66 பார்கள் உள்பட முறை கேடாக செயல்பட்ட 214 பார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.

    இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த நடவடிக்கை பார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கார்கள், மீன் வண்டிகள் மற்றும் பஸ்களில் தீவிர சோதனை நடை பெற்றது.

    காரைக்கால், மே.20-

    தமிழக பகுதிகளில் அண்மையில் கள்ள ச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததையடுத்து, காரைக்கால்-தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தமிழக எல்லைகளில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. சோதனையின் போது, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    சோதனையில், கனரக வாகனங்கள், கார்கள், மீன் வண்டிகள் மற்றும் பஸ்களில் தீவிர சோதனை நடை பெற்றது. குறிப்பாக, கனரக வாகனங்கள், 4 மற்றும் 2 சக்ர வாகனங்களில் மது மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா என சோதனை நடைபெற்றது. தொடர்ந்து, எல்லையோர பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், சாராயக் கடை களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது, போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தனி நபருக்கு அரசு விதித்துள்ள அளவுக்கு மீறி மது பானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்க ப்பட்டால் அபராதத்துடன் கூடிய கடுமையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கடையில் பணிபுரியும் சில ஊழி யர்கள், மொத்தமாக தமிழக பகுதிக்கு மது கடத்த உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    • 63 நாட்டுப்புற கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
    • குடும்ப பராமரிப்பு நிதியுதவி 5 பேருக்கு ரூ. 25,000 வீதம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இசைக் கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கான நிதியுதவி மற்றும் மறைந்த கலைஞா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    விழாவில் நாட்டுபுற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத் தலைவா் வாகை சந்திரசேகா் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    நலிந்த நிலையில் வாழும் கலைஞா்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி ரூ. 3,000 வழங்குதல், புகழ்பெற்ற மறைந்த கலைஞா்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி தற்போது ரூ. 25,000 வழங்குதல், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும், கலைக்குழுக்களுக்கும் இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்க ரூ. 10,000 வீதம் 500 கலைஞா்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதன்படி, தஞ்சாவூா் மண்டலத்தில் (தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள்) நலிந்த நிலையில் வாழும் 63 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப பராமரிப்பு நிதியுதவி 5 பேருக்கு ரூ. 25,000 வீதம் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
    • 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 547 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோ லைகளை வழங்கினார்.

    தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும், வருவாய் துறையின் சார்பில் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியை சோந்த மாணவர்ளுக்கு சான்றிதழ்.
    • மொத்தம் ரூ.92 ஆயிரத்திற்கான காசோலையை மாணவர்களுக்கு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியினை சோந்த 22 மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரத்திற்கான காசோலையாக மொத்தம் ரூ.92 ஆயிரத்திற்கான காசோலையினை 22 மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×