search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு  ரூ.49 லட்சம் கடன் உதவிக்கான காசோலை: மாவட்ட கலெக்டர் வழங்கினார்
    X

    கடலூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.49 லட்சம் கடன் உதவிக்கான காசோலையை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    கடலூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.49 லட்சம் கடன் உதவிக்கான காசோலை: மாவட்ட கலெக்டர் வழங்கினார்

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க உத்திரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான 132 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 93 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 46 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 44 மனுக்களும், இதர மனுக்கள் 184 ஆக மொத்தம் 531 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக 6 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை யினையும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.22,320 மதிப்பீடிலும், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பாதுகாவலர் சான்று மற்றும் ஒரு பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.6,800 மதிப்பீட்டிலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வாயிலாக ஒரு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையை யும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×