search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரிசுதாரர்"

    • செப்டம்பர் 30 முன்னர் கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது
    • முதலீட்டாளர்கள் இவ்வசதியை பயன்படுத்தி கொள்ள நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்

    செபி (SEBI) எனப்படும் இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம், டிமேட் (demat) மற்றும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், தங்கள் கணக்கிற்கு வாரிசுதாரர்களை நியமனம் (nomination) செய்வதற்கு டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

    தற்போது அந்த காலக்கெடுவை செபி, 2024 ஜூன் 30 வரை நீடித்துள்ளது.

    "சந்தையில் பங்கேற்பவர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில் நாமினேஷன் சமர்ப்பிக்க கடைசி தேதியை ஜூன் 30 2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என செபி இது குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

    என்எஸ்டிஎல்-இன் (NSDL) இணைய பக்கத்தில் முதலீட்டாளர்கள், நாமினி (nominee) பெயருடன் மற்ற விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களை தனது வாரிசுதாரராக நாமினேஷன் செய்யும் போது ஒவ்வொரு நாமினிக்கும் எவ்வளவு பங்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் முதலீட்டாளர் பதிவு செய்ய இயலும்.

    முதலீட்டாளர்களின் சொத்துக்கள் சட்டபூர்வ வாரிசுகளுக்கு துரிதமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலீட்டாளர்கள் சரிவர இந்த வசதியை பயன்படுத்த தவறியதால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது குறிப்பிடத்தக்கது.

    முன்னர் செப்டம்பர் 30 என இருந்த காலக்கெடு, பிறகு டிசம்பர் 31 என நீட்டிக்கப்பட்டது.

    காலக்கெடுவிற்குள் நாமினேஷன் செய்ய தவறும் பட்சத்தில் முதலீட்டாளரின் கணக்கு செயல் இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் பல சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு பிறகுதான் மீண்டும் இயங்க வைக்க முடியும் என்றும் கால விரயத்தை தவிர்க்க உடனடியாக இந்த வசதியை முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பங்கு வர்த்தனை ஆலோசகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    பான் (PAN) கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 25 லட்சம் முதலீட்டாளர்கள் தங்கள் நாமினேஷனை இன்னும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
    • 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 547 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோ லைகளை வழங்கினார்.

    தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும், வருவாய் துறையின் சார்பில் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×