search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசோலை"

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்
    • ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகள் 14 மனுக்களை வழங்கினர். மாவட்ட மாற்றுத்தி றனாளி நல த்துறை சார்பில் தசை சிதைவு நோயினால் பாதிக்க ப்பட்ட 2 மாற்றுத்தி றனாளி களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், மடக்கு சக்கர நாற்காலி 2 நபர்களுக்கும், இயற்கை மரணம் ஈமச்ச டங்கு காசோலை 5 நபர்க ளுக்கும், காதெலிக்கருவி ஒரு நபருக்கும் என மொத்தம் 10 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் கடந்த 14-ந் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    பின்னர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.உடன் ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

    • புதியதாக அங்கன்வாடி மையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கடலூர் பச்சையாங்குப்பம் ஊராட்சி சொத்திக்குப்பம், காரைக்காடு, அன்னவல்லி, சாத்தங்குப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, குடிகாடு, புதுக்குப்பம், ஆண்டிக்குப்பம் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, பெரியகாரைக்காடு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நிதியின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

    புதுக்குப்பம் பகுதியில் கடலூர்- ராமாபுரம் ( வழி கண்ணாரப்பேட்டை, வழி சோதனைப்பாளையம்) வரை இயங்கி வந்த அரசு பஸ் சேவையை, புதுக்குப்பம் வரை நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலான பஸ் சேவையை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களில் மொத்தம் 176 நபர்களுக்கு ரூ.91 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை களை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், , கூட்டுறவு இணை பதிவாளர் நந்தகுமார், ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், விஜயசுந்தரம், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க உத்திரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான 132 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 93 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 46 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 44 மனுக்களும், இதர மனுக்கள் 184 ஆக மொத்தம் 531 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக 6 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை யினையும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.22,320 மதிப்பீடிலும், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பாதுகாவலர் சான்று மற்றும் ஒரு பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.6,800 மதிப்பீட்டிலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வாயிலாக ஒரு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையை யும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • 63 நாட்டுப்புற கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
    • குடும்ப பராமரிப்பு நிதியுதவி 5 பேருக்கு ரூ. 25,000 வீதம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இசைக் கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கான நிதியுதவி மற்றும் மறைந்த கலைஞா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    விழாவில் நாட்டுபுற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத் தலைவா் வாகை சந்திரசேகா் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    நலிந்த நிலையில் வாழும் கலைஞா்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி ரூ. 3,000 வழங்குதல், புகழ்பெற்ற மறைந்த கலைஞா்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி தற்போது ரூ. 25,000 வழங்குதல், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும், கலைக்குழுக்களுக்கும் இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்க ரூ. 10,000 வீதம் 500 கலைஞா்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதன்படி, தஞ்சாவூா் மண்டலத்தில் (தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள்) நலிந்த நிலையில் வாழும் 63 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப பராமரிப்பு நிதியுதவி 5 பேருக்கு ரூ. 25,000 வீதம் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
    • 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 547 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோ லைகளை வழங்கினார்.

    தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும், வருவாய் துறையின் சார்பில் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியை சோந்த மாணவர்ளுக்கு சான்றிதழ்.
    • மொத்தம் ரூ.92 ஆயிரத்திற்கான காசோலையை மாணவர்களுக்கு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியினை சோந்த 22 மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரத்திற்கான காசோலையாக மொத்தம் ரூ.92 ஆயிரத்திற்கான காசோலையினை 22 மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.
    • மின்விபத்தில் உயிரிழந்த அபிமணி தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கல்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அபிமணி (வயது 21).

    சம்பவத்தன்று இவர் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

    இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக மின்சாரத் துறை சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மின்விபத்தில் உயிரிழந்த அபிமணி தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பன்னீர்செல்வம் எம்.எல். ஏ. வழங்கினார்.

    அப்பொழுது செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி, உதவி மின்பாதை பொறியாளர் ரங்கராஜன், சீர்காழி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரவேலு, பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.
    • 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 82).விவசாயி.

    இவரிடம் மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஓட்டல் தொழில் செய்து வரும் சத்தியமூர்த்தி (வயது 55) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ரூ 4 லட்சம் செல்வராஜ் கடன் வாங்கி உள்ளார்.

    கடனை செல்வராஜ் திருப்பி கேட்ட பொழுது சத்தியமூர்த்தி கடன் தொகைக்காக காசோலை வழங்கியுள்ளார்.

    காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.

    இதனை அடுத்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 -ல் செல்வராஜ் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று முன்தினம் முன்னாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி கடன்தொகையில் இரு மடங்கு தொகையான ரூ 8 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

    மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

    • மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 25,000-க்கான காசோலையை வழங்கினார்.
    • பயனாளிக்கு சுயதொழில் தொடங்க ரூ. 1,05,570 லட்சம் மானியத்துடன் கூடிய மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 461 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து பாபநாசம் வட்டம் மாலினி என்ற மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 25,000- மதிப்பிலான காசோலையினையும், தாட்கோ திட்டத்தின் சார்பில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற பயனாளிக்கு சுயதொழில் தொடங்கிட ரூ. 1,05,570 லட்சம் மானியத்துடன் கூடிய மூன்று சக்கர வாகனத்தினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு ரூ. 3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்; பட்டா தொடர்பான 269 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 52 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 16 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 48 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 76 மனுக்களும், இதர மனுக்கள் 55 ஆக மொத்தம் 516 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)கிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து பயனாளிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார்.
    • முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ேமாகன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்தமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டம் தென்னமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஆகாஷ் (வயது 7) நீரில் மூழ்கி இறந்ததையொட்டி அந்த குடும்பத்துக்கு நிவாரண உதவியாக முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியின்கீழ் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தங்கராஜ் என்பவரிடம் மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துைண கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×