search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கடை"

    • எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.
    • மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடை, பார்கள் உள்ளது.

    கோடை வெயில் தொடங்கியதால் பெரும்பாலான மது பிரியர்கள் பீர் வகைகளை அதிக அளவு வாங்கி அருந்துகின்றனர்.

    பீர்கள் 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்க கால நிர்ணயம் உள்ளது. பீர் தயாரிக்கும் தொழிற் சாலைகளில் இருந்து வாங்கி வரப்படும் பீர் வகைகள் சில மதுபான கடைகளில் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.

    அதோடு பண்டிகை காலங்களில் அதிக அளவில் பீர் வியாபாரம் ஆகும் என கருதி மதுக்கடை உரிமையாளர்கள் பெட்டி பெட்டியாக பீர் வகைகளை வாங்கி குடோன்களில் சேமித்து வைக்கின்றனர்.

    ஆனால் எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.

    இதனால் காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு மதுபான கடைகள் ரூ.20 தள்ளுபடி அளித்து விற்பனை செய்கின்றன. ரூ.120 மதிப்பிலான பீர்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    • கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
    • அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

     அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள முளியனுர் கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இங்கு மதுக்கடை இருப்பதால் தங்கள் பகுதியில் இருக்கும் வாலிபர்கள் வேலைக்கு கூட செல்லாமல் குடித்து விட்டு சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்தக் கடையில் வாலிபர்கள் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வாகனங்களில் செல்வதால் வாகன விபத்து ஏற்படுகிறது.

    எனவே இந்த மது கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் இன்று அந்தியூர்-மேட்டூர் மெயின் ரோட்டில் முளியனூர் பிரிவு என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடையை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர்.

    இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்துகளைந்து சென்றனர். இதனால் அந்தியூர் அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் அரசு மதுபானக்கடை

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி பேரூராட்சியின் கூட்டம் தலைவர் ஆலிவர்தாஸ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் அனில்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மரியா அற்புதம், ஈஸ்வரி, கலா, அசாருதீன், நபீலா அன்சார், யூனிஷ்பாபு, டதி செல்வபாய், முருகன் பிள்ளை, ஜெசி தம்பி, முத்துலெட்சுமி, மெர்சி பாய் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பூதப்பாண்டியை அடுத்துள்ள 12-வது வார்டு துவரங்காடு பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் அரசு மதுபானக்கடையை (டாஸ்மாக்) மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையே சேவை தொடர்பாக பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையை பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ் வழங்கினார்.

    • அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம்- செட்டிபாளையம் ரோடு பிரிவில் அரசு மதுபான கடை எண் 1830 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால், அந்தக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பல்லடம் தாசில்தார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி மதுபான கடையை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுபான கடையை அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி அதே பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் அமைக்க, இடம் ஆய்வு செய்யப்பட்டது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், அந்தப் பகுதியில் மீண்டும் மதுபான கடை அமைக்க கூடாது. அதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

    • போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருக்கும் வயதான பெண்கள் உள்ள வீடுகளின் முன்பு விழுந்து கிடப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
    • கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடை, நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட டாட்டா நகர் பகுதிக்கு இட மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தொப்பூர்,  

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட அதியமான் கோட்டை மற்றும் வடக்கு தெரு கொட்டாவூர் பகுதி யில் இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடை கள் செயல்பட்டு வந்தன.

    இந்நிலையில் இப்பகுதி யில் அதிக அளவில் குடிமகன்கள் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, சேசம்பட்டி, புறவடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் அதிக அளவில் மது அருந்த குவிந்து வந்தனர்.

    அதிகளவில் மதுப்பிரி யர்களால் நிறைந்து வந்த அரசு மதுபான கடைகள் கடந்த ஒரு வருடங்களாகவே கடைக்கு வரும் குடி மகன்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    அதற்கு முக்கியமாக சந்துக்கடைகள் அதிகரித்தது தான் காரணம் என பல்வேறு புகார்கள் இருந்தது. மேலும் அவற்றில் கள்ள மதுபானங்களோடு சேர்த்து கலப்பட மதுபானமும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

    இதன் காரணமாக அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட சந்துக் கடைகள் முழுமையாக மூடப்பட்டன.

    இதனால் மீண்டும் அதியமான் கோட்டை மற்றும் வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு மது பிரியர்கள் குவிந்து வந்தனர்.

    இதனால் அப்பகுதியில் கிராமங்கள் வழியாக வரும் பொழுது பல்வேறு இன்னல்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.

    சில நேரங்களில் விபத்துக்கள் குறிப்பாக வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் தெருக்கள் வழியாக வரும் பொழுது மதுபோதை யில் தள்ளாடியபடி வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருக்கும் வயதான பெண்கள் உள்ள வீடுகளின் முன்பு விழுந்து கிடப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

    இது குறித்து மாலை மலர் நாளிதழில் பொது மக்களுக்கு அதிக அளவில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் குடிமகன்களால் பாதிப்பு ஏற்படுகிறது என செய்திகள் வெளியிடப் பட்டிருந்தன.

    அதன் காரணமாக தற்பொழுது வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடை, நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட டாட்டா நகர் பகுதிக்கு இட மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

    நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

    கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராஜாராமன் ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
    • ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    கடலூர்:

    புவனகிரி குரியமங்கலம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு கீழ்மணகுடியைச் சேர்ந்த வீரப்பன் மகன் ராஜாராமன் (வயது 45) என்பவர் மது பாட்டில் வாங்க சென்றார். அப்பொழுது திடீரென்று பலத்த மழை பெய்ய தொடங்கியது அதனால் அவர் அந்த கடையின் ஓரம் ஒதுங்கி அங்குள்ள ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டியும், அந்த மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டியும், ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டியும் சுமார் 500-க்கும் மேற்ப்பட்டோர் புவனகிரி போலீஸ் நிலையத்தில் குவிந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. அரசை, அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
    • மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை தூண்டுகிறது தி.மு.க அரசு.

    சென்னை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, தமிழக மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டை போதைப்பொருட்களின் கேந்திரமாக மாற்றிவிட்டார்கள். இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பெருகி உள்ளதை பலமுறை நான் சட்டமன்றத்திலும், ஊடகத்தின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி உள்ளேன். டாஸ்மாக் மதுபான கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மதுபானங்களை விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்றது.

    இந்தநிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி எந்திரம் மூலம் மதுபான விற்பனையை தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தி.மு.க. அரசு, திருமண மண்டபத்திலும், விளையாட்டு திடல்களிலும் மதுபானம் அருந்தலாம் என்று அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது எந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி எந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில், டாஸ்மாக் தானியங்கி எந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட இந்த அரசுக்கு இல்லையா? ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்துக்கு கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை தூண்டுகிறது தி.மு.க அரசு.

    மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

    நவீனமயமாகி வரும் கல்வித்துறை, சுகாதாரத்துறைகளில் கூட இதுவரை எந்த ஒரு நவீன திட்டத்தையும் தி.மு.க. அரசு கொண்டு வந்ததாக தெரியவில்லை. கொலை களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களை பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களை குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் தி.மு.க. அரசை, அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. எந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • எந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொதுமக்களால் அணுக முடியாது.

    சென்னை:

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை தடுக்கும் கையில் 4 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் நிறுவ நடவடிக்கையில் உள்ளது.

    இந்த தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்போது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை எந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது.

    மேலும், தானியங்கி மதுபான எந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப் பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் மூலம் கடை பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது.

    தானியங்கி மதுபான விற்பனை எந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த எந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொதுமக்களால் அணுக முடியாது.

    இதுகுறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் மதுபான கடையை அகற்றகோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சிக்கலை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் ஆதம் நகரில் செயல்படும் மதுபான கடையை அகற்ற வேண்டும், கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆயிஷா, மாவட்ட அமைப்பாளர் சதாம்ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞர் சங்கதலைவர் பாலா, மாவட்ட தலைவர் சந்தானதாஸ், தொழிற்சங்க தலைவர் லட்சுமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராஹிம், ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம், ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் ஜகுபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    • தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
    • கிங் பிஷர் பீரை விரும்பி குடித்து வந்த மது பிரியர்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மதுக்கடை நடத்துபவர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பீர் மது பிரியர் ஒருவர் நேற்று ஜெகத்யாலா கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் தெலுங்கானாவில் உள்ள புறநகர் பகுதிகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மதுபான கடைகளில் கிங் பிஷர் பீர் விற்பனை செய்யப்படுவது இல்லை.

    இதனால் கிங் பிஷர் பீரை விரும்பி குடித்து வந்த மது பிரியர்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே நகர்ப்புறங்களிலும் பீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    மனுவை வாங்கி படித்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மதுக்கடைகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    • ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
    • மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

    பின்னர் மதுபானங்களின் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் போதைக்கு அடிமையானவர்கள் எப்போது அதிகம் குடிப்பார்கள்.

    இன்னமும் அதிகமாக மது விற்பனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் மதுபான விற்பனை குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    அரசு மதுக்கடைகளுக்கு எந்த நேரத்தில் அதிக மக்கள் வருகிறார்கள்.

    அதில் மதியம் 12 மணிக்கு முன்பாகவா, மதியம் 12-2 மணிக்குள், மதியம் 2-4 மணிக்குள், மாலை 4-6 மணிக்குள், மாலை 6 மணிக்குப் பிறகா. இரவு நேரத்தில் அதிகம் விற்பனை நடக்கிறதா.

    எந்த வகையான ஆல்கஹால் குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.எந்த வயதினர் அதிகமாக வருகிறார்கள், 21-35, 36-50, 51-00,, எந்த வகையான ஆல்கஹால் பெரும்பாலும் வாங்கப்படுகிறது? பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர். தேவைக்கு ஏற்ப மது சப்ளை செய்யப்படுகிறதா, இல்லையா? போன்ற தலைப்புகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது எங்கே குறைபாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சந்தைப்படுத்தல் உத்திகளை வகுத்து விற்பனையை அதிகரிப்பதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாக உள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

    மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுபான உற்பத்தி கழக எம்டி வாசுதேவ ரெட்டி டெலிகான்பரன்ஸ் நடத்தி, இந்த கேள்வித்தாளுக்கு பதில் அனுப்புமாறு மேற்பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்டப் பெயர், மதுபானக் கிடங்கு, மதுக்கடை உரிம எண் போன்ற விவரங்களை இணைத்து இந்தக் கணக்கெடுப்புக்கு கண்காணிப்பாளர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    ×