search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRPF"

    • 48 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
    • மார்ச் 7-ந்தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.

    சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்ற மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    மாநில அரசுகளும், கட்சித் தலைவர்களும் அந்ததந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் இனிமேல் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்மறு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு நேற்று முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நாட்டின் 128 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

    • நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் எல்லையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    ஸ்ரீநகர்:

    நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 76-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், பணிக்கு இடையே பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். அனைவரும் ஒரு குடும்பம் போன்று தீபாவளியைக் கொண்டாடுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

    சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

    • யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
    • சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    காஷ்மீரின் பாஹல்காமில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இக்கோயிலில் குளிர்காலத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, அமர்நாத் யாத்திரை என்ற புகழ் பெற்ற யாத்திரையின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த யாத்திரை சந்தன்வாரி பகுதியில் ஆரம்பித்து கோயில் வரை நடைபெறும்.

    தற்போது நடைபெற்று வரும் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்க, ஏராளமான சிஆர்பிஎஃப் படையினர் நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    "யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் உலகில் கிடைக்கக்கூடிய மிக நவீன தொழில்நுட்பத்தை பாதுகாப்பிற்கும் கண்காணிப்பிற்கும் பயன்படுத்துகிறோம். தெற்கு காஷ்மீர் பகுதியில் நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு பருந்து போன்ற விழிப்புணர்வுடன் சிஆர்பிஎஃப் செயல்பட்டு வருகிறது" என சிஆர்பிஎஃப் அமைப்பின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் அவஸ்தி தெரிவித்தார்.

    அமர்நாத் யாத்திரைக்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல் உள்ளதா என்று கேட்டதற்கு அவஸ்தி பதிலளித்திருப்பதாவது:

    "குறிப்பிட்டு சொல்லும்படியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், யாத்திரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. எங்கள் வீரர்கள் ஓய்வெடுக்காமல் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்; 365 நாட்களும் பணியில் இருக்கிறார்கள். உங்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இருக்கிறோம். நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் யாத்திரை குழு சுமூகமாக செல்வதை உறுதி செய்வதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு உள்ளூர் மக்களின் முழு ஒத்துழைப்பு உள்ளது. அவர்கள் யாத்ரீகர்களுக்கு குடிநீர் வழங்குகிறார்கள்.

    இவ்வாறு அவஸ்தி கூறினார்.

    • ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
    • தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

    அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆந்திராவில் இன்று அதிகாலை சிஆர்பிஎப் - நக்சலைட்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்கள் பலியாகினர். ஒரு சிஆர்பிஎப் வீரர் படுகாயமடைந்தார். #AndraNaxal #ShotDead
    விசாகப்பட்டினம்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில் விசாகப்பட்டினத்தின் பேடாபயலு பகுதியில் நக்சலைட்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலை சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீசார் அங்கு சென்று, அப்பகுதியை சுற்றி வளைத்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தாக்குதல் முடிவடைந்த நிலையில், ஒரு சிஆர்பிஎப் வீரர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #AndraNaxal #ShotDead
    புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி 2,500 பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்.) 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து தீவிரவாதி மோத செய்தான்.

    இதில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். இது நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    தாக்குதலை நடத்தியது உள்ளூரைச் சேர்ந்த 22 வயது ஆதில் அகமதுதர் என்பது தெரிந்தது. அவன் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய காரை ஓட்டி வந்து தாக்குதல் நடத்தியதும் தெரிந்தது.

    இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

    காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ரியாஸ் நைகூ பேசியதாக கூறப்படும் 17 நிமிட ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ரியாஸ் நைகூ பேசியதாவது:-

    ஆடியோவில் பேசிய ரியாஸ் நைகூ

    சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் (புல்வாமா) காஷ்மீர் மக்கள் மீதான அட்டூழியங்களுக்காக நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் இருக்கும் வரை தொடர்ந்து அழுகுரல் கேட்டு கொண்டேதான் இருக்கும்.

    ராணுவம் இங்கு இருக்கும் வரை உங்களது வீரர்களின் சவப்பெட்டிகள் நிரம்பி கொண்டே இருக்கும். நாங்கள் சாக இருக்கிறோம். ஆனால் உங்களை வாழவிட அனுமதிக்க மாட்டோம். எங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்து விட்டோம்.

    சரண் அடைவதை விட இறப்பதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். 15 வயது சிறுவர் கூட தற்கொலை படை பயங்கரவாதியாக மாறி ராணுவ வாகனத்தை தகர்க்கும் நாள் வெகு தூரம் இல்லை. அவர்கள் (ராணுவம்) இங்கு இருக்கும்வரை இந்தகைய தாக்குதல் நீடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo
    புல்வாமா தாக்குதல் நடத்திய தற்கொலை பயங்கரவாதி ஆதில் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPF #AdilAhmedDar
    ஸ்ரீநகர்:

    புல்வாமா நகரில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் பெயர் ஆதில் அகமதுதார்.

    காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை மிகவும் திட்டமிட்டு ஜெய்ஷ்-இ- முகமது தலைவன் மசூத் அசார் தேர்வு செய்து இருந்தான்.

    பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு குறிப்பாக இம்ரான் கானுக்கு நெருக்கடி வரும் என்பதால் காஷ்மீரைச் சேர்ந்த ஆதிலை தேர்வு செய்துள்ளனர். இவன் சிறு வயதிலேயே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.

    முதலில் இவன் ஜாகீர் மூஷா என்பவன் நடத்திய அன்சார் காஸ்வத் உல் ஹிந்த் என்ற இயக்கத்தில் இருந்தான். ஆனால் அந்த இயக்கத்துக்கு காஷ்மீர் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்த இயக்கம் அல் கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவாக காஷ்மீரில் இயங்கி வந்தது. ஆனால் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர். 4 பேர் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.

    இதையடுத்து அந்த இயக்கத்தில் இருந்து விலகிய ஆதில் அகமதுதார் ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தில் போய் சேர்ந்தான். மிக குறுகிய காலத்தில் இவன் மசூத் அசாரின் நம்பிக்கையை பெற்றான்.

    ஜிகாத் எனும் புனித போரை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஆதில் கூறி இருந்தான். எனவே அவனை மிகப்பெரிய தாக்குதலுக்கு மசூத் அசார் பயன்படுத்தி கொண்டான்.

    கடந்த சில மாதங்களாக ஆதிலுக்கு தற்கொலை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காகவே 10 பேர் கொண்ட ஒரு தனி குழுவை மசூத் அசார் உருவாக்கி இருந்தான். அந்த குழுவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருந்தனர்.



    கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இவர்கள் தனித்தனியாக காஷ்மீர் வந்து சேர்ந்தனர். பிறகு ஒருங்கிணைந்து தற்கொலை தாக்குதல் திட்டமிட்டனர். ஜனவரி மாதமே குண்டுகளை தயாரித்து காரில் பொருத்தினார்கள். பிறகு அந்த கார் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டது.

    ஆதிலுக்கு சிறிய ரக காரை ஓட்டி சென்று தற்கொலை தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அவன் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.

    ஒத்திகை பார்த்தப்படி அவன் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPF #AdilAhmedDar
    புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மவுன ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. #PulwamaAttack #Peoplepaytribute
    ஜம்மு:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.

    பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    இந்த தாக்குதல் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.

    உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    வீரர்களின் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வீரர்களின் இறுதி யாத்திரைக்காக சென்றுள்ளனர். #PulwamaAttack #Peoplepaytribute

    பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #PulwamaAttack #CRPF #RahulGandhi
    புதுடெல்லி:

    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த சம்பவம் வெறுக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கையால் இந்தியாவை எந்த சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது.



    பயங்கரவா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நாடு துணை நிற்கும். பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடன் இருந்தார். #PulwamaAttack #CRPF #RahulGandhi
    சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். #CRPFjawan #jawanshootsself #ChhattisgarhCRPFjawan
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. 

    இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (20-ந்தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் ராஜிவ் குமார் சிங்(37) என்பவர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தன்னிடம் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்திய ரிசர்வ் படையின் 148-வது படைப்பிரிவில் இடம்பெற்றிருந்த ராஜிவ் குமார் சிங், தலைநகர் ராய்ப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கபிர் நகர் காவல் நிலையத்துக்குள் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    பலியான ராஜிவ் குமார் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலம், சன்டவுலி மாவட்டம், ஜமுனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. #CRPFjawan  #jawanshootsself  #ChhattisgarhCRPFjawan
    சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் துணை ராணுவ முகாமின் அருகே இன்று மாலை அரசு பேருந்தை வழிமறித்த நக்சலைட்கள் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். #Naxalstorchbus #bustorchedinBijapur
    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், ஜகதல்பூரில் இருந்து பசகுடா பகுதியை நோக்கிச் சென்ற பேருந்தை பிஜப்பூர் மாவட்டம், திமாபூர் அருகே இன்று மாலை 6 மணியளவில் சுமார் 25 நக்சலைட்கள் வழிமறித்தனர்.

    பயணிகளை அனைவரையும் கீழே இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் துணை ராணுவப்படை முகாம் உள்ளது குறிப்பிடத்தக்கது. #Naxalstorchbus #bustorchedinBijapur
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பயங்ரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மத்திய துணை ராணுவப் படையினர் வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, இங்குள்ள ஃபத்தேக்டல் பகுதியில் ரோந்துப் படையினர் வந்தபோது மறைந்திருந்த சில பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள், ஒரு பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர். #Srinagargrenadeattack
    ×