search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhavani river"

    • கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
    • 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது.

    கோவை:

    குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளிலும் நீர்மட்டம் குறைந்தது. ஆறுகள், நீரோடைகள், சிறு ஆறுகள் உள்ளிட்டவையும் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் 2-வது நாளாக மழை நீடித்தது.

    குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பல இடங்களில் தேங்கியும் நின்றது. சில இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடைகளுக்குள் புகுந்த தண்ணீரை இன்று காலை ஊழியர்கள் அகற்றினர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இந்த கோடைமழை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது.

    கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, பில்லூர் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்ததால், அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக பவானி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைந்துவிட்டது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வர தொடங்கியுள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 63.50 அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் 2 மாதங்களுக்கு பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கும் பொழுது சங்கரநாராயணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பொதியமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சங்கரநாராயணன் (20) அந்தப் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று விநாயகர் சிலை கரைப்பதற்காக தனது நண்பர்களுடன் ஆப்பக்கூடல் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றிற்கு சென்றனர்.

    ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கும் பொழுது சங்கரநாராயணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் தேடிப் பார்த்தனர். ஆனால் சங்கரநாராயணன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் சங்க ரநாராயணன் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை பெரியசாமி கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை.
    • போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் 3.5 அடி கொண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    அதன் பிறகு இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் இரவு ஊர்வலமாக எடுத்து வந்து ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கி கரைத்து உள்ளனர்.

    இந்த விநாயகர் சிலையை கரைக்க அந்தியூர் தாலுகா, வேம்பத்தி பொதிய மூப்பனூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சங்கர் (18) என்பவரும், அவருடன் மேகநாதன், தம்பிராஜ், வேங்கைராஜ், ராஜா, ரமேஷ் உள்ளிட்ட நண்பர்களும் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி பார்த்து உள்ளனர்.

    ஆனால் எங்கு தேடியும் சங்கர் கிடைக்காததால் பவானி ஆற்றில் நீரில் மூழ்கி இருக்கலாம்? என்று கருதி உடன் வந்தவர்கள் ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் இரவு முழுவதும் சங்கரை தேடியுள்ளனர்.

    பின்னர் இன்று காலை முதல் ஆப்பக்கூடல், பெருந்துறை, கவுந்தப்பாடி வழியாக செல்லும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சங்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    விநாயகர் சிலைகளை ஆற்றங்கரையில் இறங்கி கரைக்கும் போது பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.
    • பரிகார நிவர்த்தி செய்யும் வகையில் கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்துவது என முடிவு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட திம்மராயன்பாளையம், இலுப்பம்பாளையம், வச்சினாம்பாளையம், கிச்சகத்தியூர், மூலத்துறை, பழத்தோட்டம், லிங்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன.

    அங்கு அவர்கள் போதிய அளவுக்கு மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.

    இந்நிலையில் சிறுமுகை திம்மராயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியம்மா என்பவரின் தோட்டத்தில் ஒரு கழுகு இறந்த நிலையில் கிடந்தது. பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கழுகின் உடலை பார்வையிட்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று விவசாய நிலத்தில் கழுகு இறந்து கிடப்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களுக்கும் நல்லது இல்லை என்று பொது மக்கள் கருதினர். எனவே இதற்கு பரிகார நிவர்த்தி செய்யும் வகையில் கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்துவது என முடிவு செய்தனர்.

    இதையடுத்து இறந்த கழுகுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கழுகின் உடலை எடுத்து செல்ல பாடை கட்டப்பட்டது. அதில் கழுகை வைத்து தோளில் சுமந்து ஊர்வலமாக பவானி ஆற்றங்கரைக்கு எடுத்து சென்றனர்.

    அங்குள்ள ஒரு பொது இடத்தில் சாஸ்திர சம்பிரதாயபடி கழுகை எரியூட்டி வழிபட்டனர். பின்னர் கழுகின் அஸ்தி பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவர் கூறுகையில் கருடன் (கழுகு) விளைநிலத்தில் இறந்து கிடந்தால் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களில் மழை பொழியாது.

    இதனால் விவசாயம் பாதிக்கப்படும்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலத்தில் இறந்து கிடந்த கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்தினோம். பின்னர்தான் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து விவசாயம் செழித்தது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கழுகு இறந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே கழுகுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்கு நிகழ்ச்சிகளை செய்து தரிசனம் செய்து வழிபட்டு உள்ளோம் என்று கூறினார்.

    • நீரில் முழ்கி கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், நடுப்பாளை யம் காலனியைச் சேர்ந்தவர் கொமரன் (73). இவரது மனைவி கருப்பம்மாள் (50). இருவரும் கூலித் தொழி லாளிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று மாலை 6 மணியளவில், பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்ற கொமரன் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

    இதையடுத்து, கருப்ப ம்மாள், அருகில் வசித்து வரும் தனது மகள்களுடன் சேர்ந்து தேடிப் பார்த்துள்ளனர். நள்ளிரவு ஆகிவிட்ட தால் இருவரும் வீடு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பவானி ஆற்றில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கருப்பம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, நீரில் முழ்கிக் கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே கொமரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 228 கனஅடியாக குறைந்து ள்ளது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.08 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.88 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும் உள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
    • பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, துணி துவைக்க கூடாது என நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காரமடை அடுத்த பில்லூர் அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும்.

    நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி குந்தா பகுதியில் 20 மி.மீ மழை பெய்து உள்ளது. இதேபோல கெத்தையில் 6 மி.மீ, பரளியில் 5 மி.மீ, பில்லூர் அணைப்பகுதியில் 6 மி.மீ, அவலாஞ்சியில் 382 மி.மீ, அப்பர் பவானியில் 41 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் அங்கு நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக உள்ளது. எனவே பில்லூர் அணை விரைவில் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, லிங்காபுரம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, காந்தவயல் உள்ளிட்ட பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, துணி துவைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

    • கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
    • இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர்தி ட்டப்பணிகளும், விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பவானி சாகர்அணை நீர்தேக்க பகுதிக்கு வந்து ஆய்வுக்காக தண்ணீர் மாதிரியை எடுத்து சென்றனர்.

    இந்நிலையில் பவானியை காப்போம் என்ற இயக்கம் சார்பில் இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர், சத்திய மங்கலம், ராஜன்நகர், பண்ணாரி, அய்யன் சாலை, புதுபீர்கடவு, கொத்தமங்கலம், படுகுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொது மக்கள், பூ மார்க்கெட் விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், டாக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாசில்தாரிடம் மனு கொடுக்க உள்ளனர்.

    • கழிவுகளில் உள்ள ராசாயனங்களால் பவானி ஆற்றின் தண்ணீர் நஞ்சாகி மாசடைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    • பவானி ஆற்றின் தண்ணீரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    நீலகிரி மலைப்பகுதியில் பவானி ஆறு உற்பத்தியாகி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை வரை சுமார் 150 கிலோ மீட்டர் செல்கிறது. பவானி ஆற்று தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி பயணித்து வருகிறது.

    இந்த பவானி ஆறு நீலகிரி மாவட்டம் முக்காலியில் தொடங்கி அட்டப்பாடி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையை அடைகிறது. அந்த அணையில் திறந்து விடப்படும் பவானி ஆற்று தண்ணீர் அங்கு இருந்து தேக்கம் பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மூலத்துறை வழியாக பவானிசாகர் அணையை அடைகிறது.

    பவானி ஆற்றின் தண்ணீரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இதன் மூலம் தொட்டப்பாளையம், திருப்பூர், எலத்தூர், நம்பியூர், பெருந்துறை என 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானிசாகர் அணை மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று பயன் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலக்கப்படுவாக கூறப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், குப்பை கழிவுகள் கலப்பதாகவும் தெரிகிறது. அதே போல் அந்த பகுதிகளை சேர்ந்த சிலர் ஆலை மற்றும் மருத்துவ கழிவுகளையும் பவானி ஆற்றில் நேரிடையாக கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கழிவுகளில் உள்ள ராசாயனங்களால் பவானி ஆற்றின் தண்ணீர் நஞ்சாகி மாசடைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுபடுவதால் ஆறு மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. பவானி ஆற்றில் கழிவுகளை கலப்பதை தடுக்க அரசு ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.

    எந்த காரணம் கொண்டும் பவானி ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை அனுமதிக்க கூடாது. கழிவு கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசியல் அமைப்புகள், பொது நல அமைப்புகள் ஒண்றிணைந்து பவானியை காப்போம் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பு பொதுமக்களிடம் விழிப்புணர்வ ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.

    இந்த நிலையில் பவானியை காப்போம் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்த நிறுத்த வலியுறுத்தி பவரிசாகரில் கூடுவோம் என முழக்மிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    இதையொட்டி நாளை 5-ந் தேதி (திங்கட்கிழமை) பவானிசாகர் பகுதியில் போராட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதை வலியுறுத்தி பவானி நதியில் ஆலை கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த பவானிசாகரில் கூடுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் பவானிசாகர் பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    • பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குப்பண்டாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி விஜயகுமாரி (48). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலுச்சாமி இறந்து விட்டார்.அதன் பின்பு விஜயகுமாரி கருவல் வாடிபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். விஜயகுமாரி அத்தாணி அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார்.

    அவரது மகள் கோவையில் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். தினமும் தந்தையிடம் பேசி வந்த விஜயகுமாரி கடந்த 2 நாட்களாக தந்தையிடம் போனில் பேசவில்லை.

    இதனையடுத்து விஜயகுமாரின் தந்தை மகளை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    பின்னர் வீட்டிற்கு பின்புறம் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின்உடல் மிதந்து வருவதாக தகவல் அறிந்து விஜயகுமாரின் தந்தை அங்கு சென்ற பார்த்தபோது இறந்து கிடந்தது தனது மகள் என்று உறுதி செய்தார்.

    இதனையடுத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயகுமாரி குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சுழல் நிறைந்த பகுதியாகும்.

    மேட்டுப்பாளையம்,

    சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட வச்சினம்பாளையம் நீருந்து நிலையத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வச்சினம்பாளையம் நீருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளிக்கச் சென்ற 5 பேரில் 3 பெண்கள் ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வெள்ளப் பெருக்கிலும், சுழலிலும் சிக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வச்சினம்பா ளையம் நீருந்து நிலையம் அருகே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் இப்பகுதி அபாயகரமான பகுதியாகும். இந்த இடம் மிகவும் ஆபத்தான அடிக்கடி வெள்ளப்பெருக்கு மற்றும் சுழல் நிறைந்த பகுதியாகும். மேலும் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே, இந்த இடத்தில் பொதுமக் கள் குளிக்கவோ, அத்துமீறி ஆற்றில் இறங்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த எச்சரிக்கை பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறுகையில்: சிறுமுகை வச்சினம்பாளை யம் பகுதியில் உள்ள நீருந்து நிலையம் அருகே அடிக்கடி ஆற்றில் குளிக்க வருவோர் சுழலில் சிக்கியும், வெள்ளப்பெருக்கில் சிக்கியும் பரிதாபமாக தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுக்கவே அப்பகுதியில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • தீயணைப்புத்துறையினர் பவானி ஆறு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஒரே நாளில் 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). இவர் சிறுமுகை பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார்.

    இவரது தங்கை பாக்கியா (45). இவர் சிறுமுகையில் அரசு மருத்துவமனை எதிரே புதிதாக வீடு வாங்கி உள்ளார். இந்த வீட்டில் இன்று கிரகபிரவேசம் நடப்பதாக இருந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக பாக்கியாவின் மருமகள் ஜமுனா (25), அவரது நண்பர்களான நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கஸ்தூரி (30), சகுந்தலா (52) ஆகியோர் சிறுமுகைக்கு வந்தனர்.

    இந்த நிலையில் பாக்கியா, அவரது மருமகள் ஜமுனா, கஸ்தூரி, சகுந்தலா ஆகியோர் மாலையில் சிறுமுகை வச்சினாம்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அவர்களுடன் பாலகிருஷ்ணனும் வந்தார்.

    4 பேரும், ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டதையொட்டி பவானி ஆற்றில் வெள்ளம் வந்தது. இதனால் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

    இதை பார்த்த பாலகிருஷ்ணன் உடனடியாக சென்று ஆற்றில் இறங்கி அவர்களை மீட்க போராடினார். ஆனால் அவரும் தண்ணீரில் தத்தளிக்க தொடங்கினார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறை, வருவாய் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் அவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் இறங்கி தேடினர். சிறிது நேரத்தில் பாக்கியா(53), ஜமுனா (30) ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த பாலகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உயிரிழந்த சகுந்தலாவின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். ஆனால் இரவாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை 2-வது நாளாக உடலை தேடும் பணி தொடங்கியது.

    தீயணைப்புத்துறையினர் பவானி ஆறு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அவரது உடல் மீட்கப்படவில்லை. அவரது உயிருடன் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் பவானி ஆற்றில் குளித்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜீவானந்தம் (16), உப்பிலிபாளையத்தை சேர்ந்த கவுதம் (16) ஆகியோரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இவர்கள் 2 பேரையும் தேடும் பணியும் இன்று 2-வது நாளாக நடக்கிறது. மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் ஆகியோர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ நடந்த இடம் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் தேடும் பணியானது நடக்கிறது.

    மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரே நாளில் 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×