search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில்லூர் அணை"

    • நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
    • பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, துணி துவைக்க கூடாது என நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காரமடை அடுத்த பில்லூர் அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும்.

    நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி குந்தா பகுதியில் 20 மி.மீ மழை பெய்து உள்ளது. இதேபோல கெத்தையில் 6 மி.மீ, பரளியில் 5 மி.மீ, பில்லூர் அணைப்பகுதியில் 6 மி.மீ, அவலாஞ்சியில் 382 மி.மீ, அப்பர் பவானியில் 41 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் அங்கு நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக உள்ளது. எனவே பில்லூர் அணை விரைவில் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, லிங்காபுரம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, காந்தவயல் உள்ளிட்ட பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, துணி துவைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

    • தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்.
    • ரூ.138 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சியில் முருங்கையன் பரிசல் துறையில் கோவை மாநகராட்சிக்கு பில்லூர் அணையின் 3வது குடிநீர் திட்ட பணிகள் ரூ.138 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    இத்திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பணிகளில் தலைமை நீரேற்றும் நிலையம், இயல்பு நீர், சுத்த நீர் குழாய் மற்றும் கிளை பிரதான நீரேந்து குழாய் அமைக்கும் பணி ஆகியவற்றை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாக செயலாளருமான சிவ்தாஸ் மீனா நேரில் சென்று இன்று ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்திட உத்தரவிட்டார்.

    உடன் கலெக்டர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    • அவலாஞ்சி, அப்பர் பவானி, குந்தா நீர்பிடிப்பு பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • 4 மதகுகளின் வழியாக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    காரமடை

    நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, அப்பர் பவானி,குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பெய்து வரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    மொத்த கொள்ளளவான 100 அடியில் நேற்று காலை 81 அடி நீர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றிரவு 97 அடியை எட்டியது.

    இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீரின் அளவான 14 ஆயிரம் கன அடி நீர் அப்படியே 4 மதகுகளின் வழியாக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும்,மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பவானியாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு கரை புரண்டோடுகிறது.

    இந்நிலையில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும்,ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும்,தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் 5 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பில்லூர் அணை. இந்த அணை 100 அடி கொள்ளளவு கொண்டதாகும். நீலகிரி மற்றும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது. அதன்பின்னர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கும் நீர்வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு வச்சினம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாசில்தார் மாலதி,மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.
    • இதன்காரணமாக பில்லூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    காரமடை:

    கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும்.

    இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக கேரள மாநிலம் அட்டப்பாடி, புள்ளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா போன்றவை உள்ளன.

    தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.

    இதன்காரணமாக பில்லூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு வினாடிக்கு 6 ஆயிரம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையில் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 96 அடி தண்ணீர் உள்ளது. 100 அடி நீர்மட்டம் இருந்தாலும் அணையின் பாதுகாப்பு கருதி அணை 97 அடியை எட்டியதும் திறக்கப்படுவது வழக்கம். 97 அடியை எட்டுவதற்கு இன்னும் ஒரு அடியே உள்ளது. அதன்பின்னரே அணை திறந்து விடப்படும்.

    தற்போது வரை மின் உற்பத்திக்காக மட்டும் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே எப்போது வேண்டுமானாலும் அணை திறக்கப்பட வாய்ப்பிருப்பதால், பவானி ஆற்றின் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ×