search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பில்லூர் அணையில் 3-வது குடிநீர் திட்ட பணிகள்
    X

    பில்லூர் அணையில் 3-வது குடிநீர் திட்ட பணிகள்

    • தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்.
    • ரூ.138 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சியில் முருங்கையன் பரிசல் துறையில் கோவை மாநகராட்சிக்கு பில்லூர் அணையின் 3வது குடிநீர் திட்ட பணிகள் ரூ.138 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    இத்திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பணிகளில் தலைமை நீரேற்றும் நிலையம், இயல்பு நீர், சுத்த நீர் குழாய் மற்றும் கிளை பிரதான நீரேந்து குழாய் அமைக்கும் பணி ஆகியவற்றை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாக செயலாளருமான சிவ்தாஸ் மீனா நேரில் சென்று இன்று ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்திட உத்தரவிட்டார்.

    உடன் கலெக்டர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×