search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி"

    • பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்
    • டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி என்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகளில் 4-ல் ஆம் ஆத்மியும் 3-ல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

    டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன். அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார்.

    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இரு கட்சி தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் வரமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    ஒருவேளை பிரதமர் தன் முன் வந்தால் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயப் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்பேன்" என்று தெரிவித்தார்.

    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி என்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார்.
    • அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் சென்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார். அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டருடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் செல்ல தொடங்கினர்.

    சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கிச் சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பா.ஜ.க. அலுவலகம் உள்ள பகுதியில் டெல்லி போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • எங்களை அழிக்க பா.ஜ.க. மூன்று திட்டங்களை வகுத்துள்ளது என்றார் டெல்லி முதல் மந்திரி.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதல் மந்திரியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

    ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியை நசுக்க விரும்புகிறது.

    ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவதாகவும், அவர்களது பணி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவருக்கு தெரிந்த நபர்கள் எனக்கு தெரியும். அவர்கள் என்னிடம் இதை தெரிவித்தனர்.

    ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் ஒழிக்க 'ஆபரேஷன் ஜாது' என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    ஆம் ஆத்மி கட்சியின் வங்கி கணக்கு தேர்தலுக்கு பிறகு முடக்கப்படும். வங்கி கணக்குகள் முடக்கப்படும் என அமலாக்கத்துறை வக்கீல் ஏற்கனவே கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளார். இப்போது எங்கள் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று கூறினார்.

    வங்கி கணக்கு முடக்கம், அலுவலகத்துக்கு சீல், நாங்கள் வீதிக்கு கொண்டு வரப்படுவோம். இவைதான் பாரதிய ஜனதாவின் திட்டமாகும்.

    2015-ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் (பா.ஜ.க.) எழுப்பினார்கள். இப்போது மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்கள். ஊழல் நடந்ததா என்று மக்கள் கேட்கிறார்கள். பணம் எங்கே? மற்ற இடங்களில் சோதனை நடக்கும்போது நோட்டுகள், தங்கம் மீட்கப்படுகிறது. ஆனால் இங்கு எதுவும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதாவினர் பொய் வழக்குகளைப் போட்டு கைதுசெய்தனர் என தெரிவித்தார்.

    • பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
    • பா.ஜனதா வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறது.

    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    அரியானாவில் வருகிற 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கியுள்ளது. குரு ஷேத்ரா தொகுதியில் மட்டும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது மற்ற 9 தொகுதியிலும் காங்கிரஸ் நிற்கிறது.

    பா.ஜனதா 10 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த முறை பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஜனநாயக ஜனதா காட்சி மற்றும் இந்திய தேசிய லோக்தளமும் களத்தில் உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பா.ஜனதா, காங்கிரசார் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 10 தொகுதிகளையும் பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் இந்த தேர்தலிலும் அங்குள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜனதா புதிய வியூகம் அமைத்துள்ளது.

    பிரதமர் மோடி நேற்று அரியானாவின் அம்பாலா, சோனிபட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அரியானாவின் மறுபெயர் துணிச்சல், நான் அரியானா கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை சாப்பிடுகிறேன். அதனால்தான் நான் வலுவாக இருக்கிறேன்.

    கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். மத்தியில் வலுவான அரசு பதவியேற்றது. அதேபோல் இந்த முறையும் பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

    பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு பின்னர் அங்கு பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நயாப் சிங் சைனியை முதல்-அமைச்சராக நியமித்ததன் மூலம் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் இருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் மத்தியில் பா.ஜனதா மிகுந்த ஆதரவை பெற்றுள்ளது.

    பா.ஜனதாவினர் ராமர் கோவில் கட்டியது, 370-வது சட்டபிரிவு நீக்கப்பட்டு காஷ்மீர் தற்போது வளர்ச்சி பாதையில் செல்வது, நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்தியது, மத்தியில் வலுவான அரசு அமைவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    விவசாயிகளுக்கு எதிரான நிலைபாட்டை பா.ஜனதா கடைபிடிப்பதாகவும் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்துள்ளது.

    விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினர்களையும் காயப்படுத்தும் கொள்கை களை பா.ஜனதா பின்பற்றுவதாக காங்கிரஸ் மற்றும் ஐ.என்.எல்.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    ஐ.என்.எல்.டி. மற்றும் ஜே.ஜே.பி. ஜாட் இன மக்கள் வாக்குகளை பிரிப்பதால் காங்கிரசுக்கு சில தொகுதிகளில் இது சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 58 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 28 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.

    மே 25-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் கர்னால் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்-மந்திரியாக பதவியேற்ற சைனி போட்டியிடுகிறார். அங்கு பா.ஜனதா வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறது.

    வருகிற அக்டோபர் மாதம் அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுமோ அந்த கட்சியின் ஆதிக்கமே சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.

    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    மும்பை:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். ஜூன் 4-ம் தேதி ஆட்சி மாறப்போகிறது. இன்றும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது டெல்லியில் மட்டுமல்ல, மும்பையிலும் நடக்கிறது என தெரிவித்தார்.

    • கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
    • ஆம் ஆத்மி எம்.பி. தாக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பிபவ் குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியிட்டு இது பா.ஜ.க. சதி என குற்றம்சாட்டியது.
    • ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பிபவ் குமார் புகார் கொடுத்தார்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாக் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று செய்தனர்.

    • டெல்லி முதல் மந்திரியின் தனிச்செயலர் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜ.க.வை குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    அந்தப் புகாரில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. தவறான அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியில் என்னை சிக்கவைக்க முயன்றார். மே 13 அன்று டெல்லி முதல் மந்திரி இல்லத்திற்குள் பலவந்தமாகவும், அங்கீகரிக்கப்படாமலும் நுழைந்துள்ளார். ஒரு குழப்பத்தை உருவாக்கி என்னை தாக்க முயன்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
    • வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களமிறங்குகிறார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதில் பா.ஜ.க. சார்பில் இரு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான

    வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

    அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பின் அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் திவாரி இருக்கிறார். தனது புகழ் அதிகரித்து வருவதால் விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்துள்ளார் என தெரிவித்தார்.

    • அரவிந்த் கெஜ்ரிவால் தனிச் செயலாளர் தாக்கியதாக மாநிலங்களவை பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜனதாவை குற்றம்சாட்டியுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார்.

    அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது.

    இந்த வீடியோவை பார்க்கும்போது, டெல்லி மாநிலத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜனதாவல் நடத்தப்பட்ட திட்டம் தற்போது வெளியாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜனதா கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ந்தேதி அனுப்பி பா.ஜனதா சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால், அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜனதாவின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என அதிஷி தெரிவித்துள்ளார்.

    மேலும், போலீஸ் புகாரில் அவர் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், வீடியோ காட்சியில் அவர் வசதியாக உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலும், பிபவ் குமாரை மிரட்டுவதையும் பார்க்க முடிகிறது என அதிஷி தெரிவித்துள்ளார்.

    • அமலாக்கத்துறை இதுவரை எட்டு முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் இடைக்கால ஜாமின் பெற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் இன்று ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் தேசிய அரசியல் கட்சியான ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டப்பட்டவராக அமலாக்கத்துறை இணைத்துள்ளது. அதேபோல் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரையும் இணைத்துள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் பணமோசடி என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை அமலாக்கத்துறை எட்டு முறை இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தற்போது முதன்முறையாக அரவிந்த கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    குற்றம்சாட்டப்பட்டவராக ஆம் ஆத்மி கட்சியை பெயரை இணைத்துள்ளதால் அந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

    ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத முடியும். கட்சியின் சொத்துகளை முடக்க முடியும். டெல்லியில் உள்ள தலைமைக் கழகம் உள்ளிட்ட சொத்துகளை முடக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் வாங்கினர்.
    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசில் முறையிட்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் கூறியதாவது:

    முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்தபோது பிபவ் குமார் அறைக்குள் வந்து ஸ்வாதி மாலிவாலை திட்டினார். மேலும், பலமுறை அறைந்துள்ளார். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கியுள்ளார். மாலிவால் தன்னை விடும்படி கெஞ்சியுள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார் ஸ்வாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்தபின் ஸ்வாதி மாலிவால் நேற்று இரவு வீடு திரும்பினார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×