search icon
என் மலர்tooltip icon

    இலங்கை

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை 381 ரன்களைக் குவித்தது.

    பல்லேகலே:

    ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது.

    அவிஷ்கா 88 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்னில் வெளியேறினார்.

    3வது விக்கெட்டுக்கு நிசங்கா, சமரவிக்ரமா ஜோடி 120 ரன்களை சேர்த்தது. சமர விக்ரமா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக ஆடிய நிசங்கா இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • இலங்கை, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கொழும்பு,

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார்.

    இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்திருந்தது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. திமுத் கருணரத்னே 77 ரன்னும் எடுத்தனர். மேத்யூஸ், சண்டிமால் ஜோடி சிறப்பாக விளையாடி சதமடித்தனர். மேத்யூஸ் 141 ரன்னும், சண்டிமால் 107 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை 212 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் சத்ரன், கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    • இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.
    • இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்து உத்தரவிட்டது.

    இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தடை செய்யப்பட்டது.

    மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதனால், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

    இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்த பின் அதன் மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

    • கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
    • இந்திய, இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.

     கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழா பிப்.23 ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முதல் நாள் கொடியேற்றம் மற்றும் தேர்பவனி நடைபெறும். இரண்டாவது நாளான பிப்.24 அன்று சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும்.

    இந்த இரண்டு நாள் திருவிழாவில், இந்திய, இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவு செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சத்யதாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்.6க்குள் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது" எனத் தெரிவித்தார்

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 96 ரன்களில் சுருண்டது.
    • இலங்கையின் ஹசரங்கா 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    கொழும்பு:

    இலங்கையில் பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இலங்கை போராடி வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. மழையால் இருதரப்புக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே இலங்கை பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. குறிப்பாக, இலங்கை வீரர் ஹசரங்காவின் அபாரமாக பந்து வீசினார். இதனால் ஜிம்பாப்வே அணி 22.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 5.5 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 19 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டு எடுத்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவரில் 7 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    அடுத்து ஆடிய இலங்கை 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து வென்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை கோப்பையை வென்று அசத்தியது. கேப்டன் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார்.

    • கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், பொங்கல் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது
    • 1500 பரத கலைஞர்கள் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

    இலங்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஜன.6-ம் தேதி பொங்கல் விழா தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ம் தேதி காலை 10 மணிக்கு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீமுருகன் சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் இலங்கை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, பொங்கல் கலாச்சாரா விழா இன்று(ஜன.8) கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் இந்த விழாவானது நடைபெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், பொங்கல் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது

     இந்நிகழ்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 1,008 பானையில் பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து, 1500 பரத கலைஞர்கள் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்சி நடைபெற்றது. வண்ண கோலமிட்டு ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட இந்த பொங்கல் கலாச்சார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 200 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்தி விடப்படுகிறது.
    • செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய எம்.பி. சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலமானது. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு அமைந்துள்ளதாக கருதப்படும்.

    உலகமெங்கும் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இலங்கையில் ஜல்லிக்கட்டு போன்றவை இதுவரை நடத்தப்பட்டது இல்லை.

    இந்த நிலையில் திருகோணமலையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் வழிகாட்டுதலில் போட்டியை நடத்த முயற்சி மேற்கொண்டனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது. வாடிவாசல் வழியாக காளைகளை சீறிப்பாய, மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர்.

    சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

    இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    200 காளைகள் வாடிவாசல் வழியாக சீறப்பாய இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போட்டியை செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய எம்.பி. சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.
    • எதிர்ப்பையும் மீறி இலங்கை சீன கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தில் பல்வேறு பெயர்களில் உளவுக்கப்பல்கள் இயங்கி வருகின்றன. அந்த கப்பல்களை ஆய்வு கப்பல் என சீன அரசு கூறி வந்தாலும் அவை அபாயகரமான உளவு கப்பல்கள் என அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின்யான் 1,2,3 மற்றும் ஷியாங் யாங் ஹங் 1,3,6,16 உள்ளிட்ட உளவு மற்றும் போர் கப்பல்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அதி நவீன வசதிகள் கொண்ட சீனாவின் 2 உளவு கப்பல்களுக்கு இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இந்த உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

    இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின்நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீனகருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருந்ததால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சீன உளவு கப்பல்களை தங்கள் கடற்பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தியது. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை சீன கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தது.

    இந்த சூழ்நிலையில் இலங்கை கடற்பரப்பில் மற்றொரு அறிவியல் ஆராய்ச்சி கப்பலான சியாஸ் யாஸ் ஹாஸ்-3 என்ற கப்பலை இம்மாதம் நிறுத்துவதற்காக சீனா அனுமதி கோரியது. இம்மாதம் 5-ந்தேதி முதல் மே மாதம் வரை இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஆய்வு நடத்தப்போவதாக சீனா கூறியது.

    ஆனால் இந்த கப்பல் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் இந்திய பாதுகாப்பு கவலைகளுக்கு மதிப்பு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

    இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்று சீன ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய ஒரு ஆண்டு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

    எந்தவொரு ஆராய்ச்சி கப்பலையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது.

    இலங்கை அரசின் இந்த முடிவு சீனாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    • இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார்.
    • இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

    கொழும்பு:

    இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று அவர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

    மேலும் எரிசக்தி துறையில் இந்தியாவின் அதிக முதலீடுகள், திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், ரெயில்வே மற்றும் பிற துறைகளில் முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்தனர்.

    • உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார்.
    • இவரது உடல் அஞ்சலிக்காக தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவருக்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலதரப்பட்டோரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், விஜயகாந்த் மறைவுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பன முகநூல் பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

    விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு போற்றப்படக் வேண்டிய தலைவர் என்பதை தான் அறிந்தேன்.

    எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையை செய்யும் அரசியல் தலைவர்.

    மேலும் இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இவர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார்.

    பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர்

    இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும்.

    நடிகர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையும் மாற்றி அமைத்தது. பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அவர் நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இலங்கையில் வசித்து வரும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் கட்சி தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகள் வழங்குதல், நல்லிணக்கம், மீன்பிடி தொடர்பாக சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ×