என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hambantota port"

    • சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும்.
    • ஹம்பன்தோடா துறைமுகம் 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

    சீனாவின் எரிசக்தி நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை ஹம்பன்தோடா துறைமுகத்தில் நிறுவ இலங்கை மந்திரி சபை அனுமதி அளித்துள்ளது. இதை இலங்கை மந்திரி காஞ்சனா விஜே சேகரா தெரிவித்தார்.

    சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும். இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி மையமும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.

    ஹம்பன்தோடா துறைமுகம் இலங்கையின் 2-வது பெரிய துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

    இந்த துறைமுக கட்டுமானத்துக்கு சீனாவின் எக்சிம் வங்கி கடன் அளித்துள்ளது. தற்போது இங்கு சீனா மிகப் பெரிய முதலீட்டை செய்து உள்ளது.

    • உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.
    • எதிர்ப்பையும் மீறி இலங்கை சீன கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தில் பல்வேறு பெயர்களில் உளவுக்கப்பல்கள் இயங்கி வருகின்றன. அந்த கப்பல்களை ஆய்வு கப்பல் என சீன அரசு கூறி வந்தாலும் அவை அபாயகரமான உளவு கப்பல்கள் என அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின்யான் 1,2,3 மற்றும் ஷியாங் யாங் ஹங் 1,3,6,16 உள்ளிட்ட உளவு மற்றும் போர் கப்பல்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அதி நவீன வசதிகள் கொண்ட சீனாவின் 2 உளவு கப்பல்களுக்கு இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இந்த உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

    இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின்நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீனகருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருந்ததால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சீன உளவு கப்பல்களை தங்கள் கடற்பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தியது. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை சீன கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தது.

    இந்த சூழ்நிலையில் இலங்கை கடற்பரப்பில் மற்றொரு அறிவியல் ஆராய்ச்சி கப்பலான சியாஸ் யாஸ் ஹாஸ்-3 என்ற கப்பலை இம்மாதம் நிறுத்துவதற்காக சீனா அனுமதி கோரியது. இம்மாதம் 5-ந்தேதி முதல் மே மாதம் வரை இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஆய்வு நடத்தப்போவதாக சீனா கூறியது.

    ஆனால் இந்த கப்பல் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் இந்திய பாதுகாப்பு கவலைகளுக்கு மதிப்பு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

    இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்று சீன ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய ஒரு ஆண்டு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

    எந்தவொரு ஆராய்ச்சி கப்பலையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது.

    இலங்கை அரசின் இந்த முடிவு சீனாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    • நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது.
    • இலங்கை பிரதமரின் சீன பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    கொழும்பு:

    இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, 6 நாட்கள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு கடந்த 25-ந்தேதி சென்றார்.

    அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் இலங்கையின், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தினேஷ் குணவர்த்தனேவின் சீன பயணம் நேற்று நிறைவு பெற்றது.

    இந்த நிலையில் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு, அம்பாந்தோட்டை துறை முகங்களை அபிவிருத்தி செய்வதில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கையுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தவும், பிற கடனாளிகளுடன் நட்புறவான தொடர்பை பேணவும், சர்வதேச நாணய நிதியத்தில் சாதகமான பங்கை வகிக்கவும், நிதி நிவாரணத்தில் இலங்கைக்கு உதவவும், அதன் நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது.

    கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதற்கும், இதை பெல்ட் அண்ட் ரோடு' கட்டுமானத்தின் முதன்மைத் திட்டங்களாக மாற்றுவதற்கும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன என்று தெரிவித்தது.

    மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா உறுதியளித்து உள்ளது. இலங்கை துறைமுகங்களுக்கு சீன உளவுக் கப்பல்கள் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இலங்கை பிரதமரின் சீன பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    • ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்ட சீனா இலங்கைக்கு 1.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியது.
    • வருடந்தோறும் 100 மில்லியன் டாலர் திரும்பிய வழங்க முடியாததால் 99 வருடத்திற்கு குத்தகை விட்டுள்ளது

    இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக இன்று இந்தியா வந்திருந்தார். அவரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எங்களது நீர்நிலைககள் உள்பட எந்த பகுதியையும் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என இலங்கை உறுதி அளித்துள்ளது.

    இந்தியா- சீனா இடையில் ஏற்கனவே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் இந்தியா அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது.

    இந்தியாவை குறிவைத்து சீனா "Mission Indian Ocean" என்பதை குறிவைத்துள்ளது. இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இந்திய பெருங்கடலில் இலங்கை பகுதியில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது காணப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    இலங்கையுடன் நட்புணர்வை வளர்த்துக் கொள்ள சீனா அதிக அளவில் உடன் கொடுத்தது. குறிப்பிட்ட அளவிலான கடனை பெற்ற இலங்கையால் சீனாவுக்கு கடனை திருப்பி அடைக்க முயடிவில்லை. இதனால் சீனா இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. இதனால் சீனாவின் அதிநவீன கப்பல்கள் வரத் தொடங்கியது.

    இலங்கை இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளதால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

    2022 ஆகஸ்ட் மாதம் இந்தியா இலங்கையிடம் இது தொடர்பாக தனது கவலையை தெரிவித்தது. இதனால் இலங்கை சீனாவிடம் இது போன்ற செயல்களை நிறுத்த வலியுறுத்தியது. என்றபோதிலும் பின்னர் சீன கப்பல்களை நிறுத்துவதற்கு அனுமதி அளித்தது. அதில் இருந்து சீனா இந்திய பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்வதும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் (Hambantota Port) கப்பல்களை நிறுத்தி வருகிறது.

    ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்ட இலங்கைக்கு சீனா 1.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியிருந்தது. அதற்கு வருடம் 100 மில்லியன் டாலர் திரும்ப வழங்க முடியாத நிலையில், 99 வருட ஒப்பந்தத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எடுத்துக் கொண்டது. 2010-ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப்பணிகள் முடிவடைந்தது.

    இந்தியாவுடனான இன்றைய ஒப்பந்தத்தில் இலங்கை அதன் நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளது.

    ஹம்பன்தோடா துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதியளித்துள்ளார். #RanilWickramasinghe #HambantotaPort
    கொழும்பு :

    இலங்கையில் உள்ள ஹம்பன்தோடா துறைமுக பகுதியில் மிகப்பெரிய தொழில் பூங்காவை சீனா அமைக்கிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாகவும், இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், கொழும்பு நகரில் நேற்று தொடங்கிய 3-வது ஆசிய ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 2 நாள் மாநாட்டில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஹம்பன்தோடா துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் இலங்கை நல்லுறவு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், ஹம்பன்தோடா துறைமுகம் சீன ராணுவ தளமாக மாறிவிடும் என்று சிலர் நினைப்பது தவறானது என்றும், அங்கு இலங்கை கடற்படை முகாம்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். #RanilWickramasinghe #HambantotaPort
    இந்தியாவின் நெருக்கடி காரணமாக சீனாவுக்கு குத்தகைக்கு விட்ட துறைமுகத்தில் இலங்கை அரசு தன்நாட்டு கடற்படை ராணுவ தளத்தை அமைத்துள்ளது. #HambantotaPort
    கொழும்பு:

    இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுக்கு அதிபர் ராஜபக்சே அரசு ரூ.70 ஆயிரம் கோடிக்கு சீனா நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டது.

    அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மூலம் சீனா இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என அதிருப்தியை வெளியிட்டது.

    இலங்கை எதிர்க்கட்சியினரும் அரசின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அங்கு சீனா ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என போர்க்கொடி உயர்த்தினர்.

    அதை தொடர்ந்து ஹம்பந்தோடா துறைமுகத்தில் இலங்கை தனது கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அங்கு கடற்படையின் தெற்கு கமாண்டோ பிரிவை நிறுவுகிறது.

    அதற்கான அறிவிப்பை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நேற்று வெளியிட்டார். தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு சீனா எந்தவித ராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்றார். தற்போது இலங்கை கடற்படையின் தென் கமாண்டோ பிரிவு காலே துறைமுகத்தில் உள்ளது. அது விரைவில் ஹம்பந்தோடாவுக்கு மாறுகிறது. #HambantotaPort
    ×