search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேமுதிக தலைமைக் கழகம்"

    • அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரையும் நினைத்தோம்.
    • அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.45 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

    சினிமா பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினி காந்த் நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்த் காலமான செய்தி அறிந்து, படப்பிடிப்பை ரத்து செய்து சென்னை திரும்புகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம். அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரையும் நினைத்தோம். பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது சற்று நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

    • மதியம் ஒரு மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
    • மாலை 4.45 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

    தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவரது உடல் கேயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் கூடியாதால் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி தேமுதிக தலைமையகத்தில் இருந்து அவரது உடல் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடியிருந்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை 6 மணியளவில் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டு, விஜயகாந்த் உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெறும். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இறுதி ஊர்வலம் தேமுதிக தலைமையகம் சென்றடைந்து, அங்கு மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

    • தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
    • மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.

    தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார்.

    மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்த்-இன் இறுதி ஊர்வலம் துவங்கும் என்றும் மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது.

    • தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.
    • மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 28) காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். இவரது மறைவை அறிந்து பலர் சமூக வலைதளங்களிலும், நேரிலும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவிலும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்த் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணி அளவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விஜயகாந்த்-க்கு நேரில் அஞ்சலி செலுத்த வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் பொது மக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட இருக்கிறது. பிறகு, அங்கிருந்து மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகம் கொண்டுவரப்படுகிறது. இன்று மாலை 4.45 மணிக்கு இறுதி சடங்கு தொடங்க இருக்கிறது. 

    • உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார்.
    • இவரது உடல் அஞ்சலிக்காக தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவருக்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலதரப்பட்டோரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், விஜயகாந்த் மறைவுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பன முகநூல் பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

    விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு போற்றப்படக் வேண்டிய தலைவர் என்பதை தான் அறிந்தேன்.

    எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையை செய்யும் அரசியல் தலைவர்.

    மேலும் இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இவர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார்.

    பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர்

    இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும்.

    நடிகர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.
    • மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.

    தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார்.

    மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இன்று (டிசம்பர் 29) அதிகாலை விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.

    பிறகு, மதியம் 1 மணிக்கு விஜயகாந்த்-இன் இறுதி ஊர்வலம் துவங்க உள்ளது. தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. தே.மு.தி.த. அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளதை அடுத்து, அங்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்பாடு பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். விஜயகாந்த்-க்கு மத்திய அரசு சார்பில் மரியாதை செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.
    • இயக்குனர், நடிகர் பார்த்திபன் இரங்கல்.

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் உயிரிழந்த விஜயகாந்த்-க்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பான பதிவில், "ஒரு எளிமையான, யதார்த்தமான,தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால்,ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்….

    என் தந்தை கேன்ஸரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி ஆஸ்பத்திரியில் மிகவும் சிரம்ப்பட்ட போது,வாசலில் இருந்த பிள்ளையார் கோவிலில் வேண்டிக்கொண்டேன்.

    மீண்டு வருவாரேயானால் சரி,அல்லது சிறிதே காலம் அதுவும் இப்படித்தான் கஷ்டப் பட்டபடி வாழ்வாரேயானால் அவரை நிம்மதியாக உன்னிடம் அழைத்துச்செல் என்று துக்கத்தின் உச்சத்தில் வேண்டிக்கொண்டேன்.அப்படி விஜயகாந்த் சாரை

    சிரமப்படும் மனிதராக எனக்கு பார்க்கப் பிடித்ததில்லை.நான் யாரென உலகம் ஒப்புக்கொள்ளுமுன்,என் முதல் படத்தைத் துவக்கி வைத்தவர்,நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர்.வாழ்வு விரைந்து முடிந்து விட்டாலும்,கோடானுக்கோடி உள்ளங்களை ஆட்கொண்ட அருமை மனிதர்.கோடீஸ்வரன் மறைவுக்கு தெரு வரை கூட கேட்டம் இருக்காது. கட்டுக்கடங்கா கூட்டத்தால் தீவுத்திடலுக்கு மாற்றலும்,மத்திய மாநில அரசு மரியாதையும் சும்மா வந்து விடாது.அவர் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது.அது சினிமாவில் வந்ததோ அரசியலில் வந்ததோ அல்ல.அவர் வளர்த்த மனிதநேய மாண்பிற்கு கிடைத்த மரியாதை.

    மரியாதைமிகுந்தவரின் பிரிவு தரும் துயரத்தை விட,

    அவரது உள்ளத்தின் உயர்வு ஒரு பாடமும் கற்றுத் தருகிறது.வேதனைத் தீர எழுதிக் கொண்டே போகலாம்…. எதுவும் ஓரிடத்தில் முடியும் அது எவ்வாறு சிறப்பாக முடிகிறது என்பதே முக்கியம்.

    அவரைப்போல சிறந்த மனிதனாக வாழ்வதே அவருக்கான நெஞ்சார்ந்த அஞ்சலி!," என்று குறிப்பிட்டுள்ளர். 



    • உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார்.
    • இவரது உடல் அஞ்சலிக்காக தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமாக இருந்து வந்த நிலையில், நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். இவரது மறைவை அறிந்து பலர் சமூக வலைதளங்களிலும், நேரிலும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    காலை முதலே திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலதரப்பட்டோரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    • ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
    • ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமாக இருந்து வந்த நிலையில், நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். இவரது மறைவை அறிந்து பலர் சமூக வலைதளங்களிலும், நேரிலும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சூர்யா விஜயகாந்த்-க்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

     


    அதில், "அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நம்ம கூட இல்லை என்ற செய்தி கேட்டு, மனசுக்கு அவ்வளவு வருத்தமா இருக்கு. ஒரு கண்ணில் துணிச்சல், ஒரு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞர் அவர். கடைக்கோடி மக்கள் வரைக்கும் எல்லாருக்கும் எல்லா உதவிகளும் செய்து, புரட்சி கலைஞனாக, கேப்டனாக நம் மனங்களில் இடம் பிடித்தவர். அண்ணன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
    • அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகரும் தே.மு.தி.க. கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உயிரிழப்புக்கு இயக்குனர் எஸ் .ஏ. சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அதில், "எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி ,கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதற்காக நான் இரண்டு ஆண்டுகள் முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை."

    "அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்."

    "திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை."

    "அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.
    • பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    உயிரிழந்த விஜயகாந்த் உடல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வரை பலத்தரப்பட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை, விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு செய்தியாளர்களிடையே பேசிய அவர், "ஒரு மனிதர் அவர் இருந்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து, நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சினிமா துறையில் யாரெல்லாம் முடியாது என சொன்னார்களோ, மாநிறம் கொண்டவர்களுக்கு இடமில்லை என்பதை உடைத்துக் காட்டி சினிமா துறையில் முத்திரை பதித்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய புள்ளியாக இருந்து, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்து துறைகளிலும் கோலோச்சி, அரசியலில் இரு பெரும் துருவங்கள் இருந்த போது மூன்றாவது ஒரு நபருக்கு இடம் இருக்கிறது என்பதை நமக்கு காட்டி ஏழைகளின் குரலாக இருந்த விஜயகாந்த் இன்று நம்மோடு இல்லை."

    "பா.ஜ.க. சார்பில் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை முகநூல் மூலம் பதிவு செய்திருக்கிறார். உள்துறை மந்திரி அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மூத்த அமைச்சர்கள் அனைவரும் 2014 தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் உடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தோம் என்பதை நினைவு கூர்ந்திருக்கிறார்கள்."

    "தமிழ்நாடு அரசுக்கு பா.ஜ.க. இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறது. இந்த அலுவலகத்தில் இருக்கும் முக்கிய புள்ளிக்கு அரசும், நாமும் செலுத்த வேண்டிய மரியாதையில் கடமை தவறி இருக்கிறது. அலுவலகத்திலும், வெளியிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருக்கின்றனர். கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த கஷ்டப்படுகின்றார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்."

    "பொது மக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக தமிழக அரசு கேப்டன் விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். நாளை பெரிய அளவில் கூட்டம் வரலாம். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பெரிய தவறாகி விடும். முதலமைச்சர் அவர்கள் இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து ராஜாஜி அரங்கத்தில் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்."

    "விஜயகாந்த் அவர்கள் நடிகர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என்பதை தாண்டி பொது மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ள தலைவர். அவருக்கு அரசு மரியாதையோடு மணி மண்டம் கட்டப்பட வேண்டும். இதற்கு அரசு உடனடியாக பொதுமக்கள் வந்து பார்த்து செல்லும் வகையில் நிலத்தை ஒதுக்கீடு செய்து, அதில் மணி மண்டபம் கட்டுவதற்கு முன்வர வேண்டும் என்பது பா.ஜ.க.-வின் கோரிக்கை," என்று தெரிவித்தார். 

    • மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது.
    • பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜயகாந்த்-க்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..,

     


    "தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது.

    எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்,

    அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்.

    அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு.

    புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்."



    ×