search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    முதல் முறையாக இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா
    X

    முதல் முறையாக இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா

    • கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், பொங்கல் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது
    • 1500 பரத கலைஞர்கள் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

    இலங்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஜன.6-ம் தேதி பொங்கல் விழா தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ம் தேதி காலை 10 மணிக்கு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீமுருகன் சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் இலங்கை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, பொங்கல் கலாச்சாரா விழா இன்று(ஜன.8) கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் இந்த விழாவானது நடைபெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், பொங்கல் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது

    இந்நிகழ்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 1,008 பானையில் பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து, 1500 பரத கலைஞர்கள் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்சி நடைபெற்றது. வண்ண கோலமிட்டு ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட இந்த பொங்கல் கலாச்சார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    Next Story
    ×