search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri lanka economic crisis"

    • பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையும் மாற்றி அமைத்தது. பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அவர் நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இலங்கையில் வசித்து வரும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் கட்சி தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகள் வழங்குதல், நல்லிணக்கம், மீன்பிடி தொடர்பாக சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
    • பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    • பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
    • தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறான நிலையில் வாழ்வாதாரம் தேடி ஏராளமானோர் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக யாழ்ப்பாணம், தலைமன்னார் பகுதியில் இருந்து குடும்பம், குடும்பமாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து படகுகளில் தனுஷ்கோடி, அரிச்சல் முனை கடற்கரை பகுதிக்கு வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று அதிகாலை அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். முன்னதாக ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கை அகதிகள் வந்துள்ளதாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் 7 அகதிகளையும் மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். இதில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் தொல்புறத்தை சேர்ந்த நாகராஜ் (43), இவரது மனைவி வந்தினி (38) மற்றும் அனோ ஜன்ண (13), கஜிவன் (9), தனுஷ்கா (4), அஜந்தன் (18), கிசாலினி (17) ஆகியோர் படகுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தாக தெரிவித்தனர்.

    மேலும் அங்கு வாழ்வதற்கான உகந்த சூழல் இல்லை என்றும், பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர்.

    விசாரணைக்கு பின்னர் 7 அகதிகளையும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது வரை குறையாததால் அகதிகள் வருகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது.
    • பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம்.

    கொழும்பு:

    அண்டை நாடான இலங்கை, சுதந்திரத்துக்குப் பின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை கடந்த ஆண்டு சந்தித்தது. அன்னியச் செலாவணி இருப்பு முற்றிலுமாக காலியான நிலையில், விலைவாசி விண்ணைத் தாண்டிச் சென்றது. உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுமை இழந்து கொந்தளித்த பொதுமக்கள், தெருவில் இறங்கிப் போராடினர். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் அதிபர் பதவியில் இருந்து கீழிறங்கிய கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

    பின்னர் அவர் நாடு திரும்பிவிட்டார். இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது. ஆனால் 46.9 பில்லியன் டாலர்கள் என்ற மிகப் பெரிய கடன் மலையில் இலங்கை உட்கார்ந்திருக்கிறது. அதில் சுமார் பாதி அளவு, சீனாவுக்கு கொடுக்க வேண்டிய கடன் ஆகும்.

    இந்த நிலையில், இலங்கை சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் (டிரான்பரன்சி இன்டர்நேசனல்) மற்றும் 4 செயல்பாட்டாளர்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில் 4 நீதிபதிகள், இலங்கையில் 2019-2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகிய ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதாரத்தை தவறாக கையாண்டதே காரணம் என்று அதிரடியாக தீர்ப்பு கூறினர். மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவார்டு கப்ரால், லக்ஷ்மண், கருவூலத்துறை முன்னாள் செயலாளர்கள் ஜெயசுந்தரா, அட்டிகலே உள்ளிட்ட உயர்பொறுப்பு வகித்த 13 பேரும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கில் ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம் எதையும் விதிக்கவில்லை என்றாலும், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கு தலா ரூ.1½ லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகளாக மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வரும் நிலை தொடர்ந்து வருகிறது.
    • படகோட்டிகளுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததோடு, சில தங்க நகைகளையும் கொடுத்து அங்கிருத்து தப்பி வந்ததாக அகதிகள் தெரிவித்தனர்.

    தனுஷ்கோடி:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு சமானிய மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாடு இயல்பு நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

    பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகளாக மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வரும் நிலை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 199 பேர் அகதிகளாக வந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தனர்.

    இலங்கையில் தலைமன்னார் பேசாலை பகுதியில் இருந்து படகு ஒன்றின் மூலமாக 3 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 10 பேர் வந்தனர்.

    தனுஷ்கோடி அருகே உள்ள எம்.ஆர்.சத்திரம் கடற்கரைக்கு வந்து அவர்களை இறக்கிவிட்டு, அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் இலங்கையை நோக்கி திரும்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நேற்று அதிகாலை தகவல் கிடைத்ததும் ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் 10 பேரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    படகோட்டிகளுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததோடு, சில தங்க நகைகளையும் கொடுத்து அங்கிருத்து தப்பி வந்ததாக அகதிகள் தெரிவித்தனர். போலீசார் விசாரணைக்கு பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

      ராமேசுவரம்:

      இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் தமிழகத்திற்கு 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.

      இந்த நிலையில் தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு படகில் குழந்தைகள் உள்பட சிலர் புறப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் வந்து இறங்கினர். பின்னர் அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

      இதுகுறித்த தகவல் கிடைத்து ராமேசுவரம் கடலோர போலீசார் விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 10 அகதிகளையும் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

      விசாரணையில் அவர்கள், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 3 குடும்பங்களை சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் எனவும் தெரிய வந்தது.

      மேலும் விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், எனவே தமிழகத்தில் குழந்தைகளுடன் வாழ்வதற்காக இங்கு தப்பி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

      மேலும் அவர்கள் கூறியபோது, இலங்கையில் தற்போதும் ஒரு கிலோ சீனி ரூ.200, அரிசி ரூ.450, பால் பவுடர் ரூ.200, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1,200, ஒரு லிட்டர் மண்எண்ணெய் மற்றும் டீசல் ரூ.500, காய்கறிகள் ஒரு கிலோ ரூ.400 என விலைவாசி உள்ளதாக தெரிவித்தனர். விசாரணைக்கு, பின்னர் 10 அகதிகளும் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

      • படகில் அகதிகளை அழைத்து வந்தவர்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரையில் அவர்களை இறக்கிவிட்டு திரும்பி சென்று விட்டனர்.
      • இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளியேறி அகதிகளாக தமிழகத்திற்கு வந்ததாக ஜனார்த்தன் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர்.

      ராமேசுவரம்:

      இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் அங்கு வாழ வழியில்லாமல் தவித்து வரும் அப்பாவி மக்கள் அங்கிருந்து தஞ்சம் தேடி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு அகதிகளாக வருவது தொடர்கிறது.

      இந்த நிலையில் இலங்கை திருகோணமலை திருக்கடலூர் கோவிந்தன் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜனார்த்தன்(வயது 29), தனது மனைவி பிரவீனா (26), மகன்கள் சுதர்சன் (9), சுதிசன் (5) ஆகியோருடன் தமிழகத்திற்கு அகதியாக வர புறப்பட்டனர்.

      அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் கள்ளப்பாடு என்ற இடத்தில் இருந்து படகுக்கு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி நேற்று முன் தினம் இரவு ராமேசுவரம் வந்தனர். இந்த படகில் அகதிகளை அழைத்து வந்தவர்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரையில் அவர்களை இறக்கிவிட்டு திரும்பி சென்று விட்டனர்.

      இதுகுறித்து அந்தப்பகுதியில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் அங்கு போலீசார் விரைந்து சென்று, அகதிகளாக வந்தவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

      பின்பு அவர்களை மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளியேறி அகதிகளாக தமிழகத்திற்கு வந்ததாக ஜனார்த்தன் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர்.

      இதையடுத்து அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

      • தனுஷ்கோடி அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அகதிகள் தங்களது குழந்தைகளுடன் தவித்துக் கொண்டிருந்தனர்.
      • மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

      ராமேசுவரம்:

      இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அங்கு வசிக்கும் இலங்கை தமிழர்கள் இடம் பெயர்ந்து தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

      இந்த நிலையில் ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அகதிகள் தங்களது 3 குழந்தைகளுடன் இன்று தவித்துக் கொண்டிருந்தனர்.

      இதனை கண்ட மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் படை போலீசார் 5 பேரையும் மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

      அப்போது அவர்கள் கடந்த 5-ந் தேதி தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில் இறக்கிவிடப்பட்டோம் என்றும், படகில் வந்தபோது தங்களுடன் வந்த ஒருவர் கடலில் குதித்து விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், படகில் வந்தபோது இலங்கை கடற்படையினர் தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர்களிடம் இருந்து தப்பி இங்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

      மேலும் விசாரணையில் அவர்கள் இலங்கை தலைமன்னார் மாவட்டம் தாழ்வு பாடியைச் சேர்ந்த சபரி (வயது 33)அவரது மனைவி ரதிகா (31) மகன் சதீஷ்(7) மகள் சல்மா(4) அகின் (6 மாத குழந்தை) என்பது தெரியவந்தது.

      அவர்கள் 5 பேரும் பிளாஸ்டிக் படகு மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தமிழகம் வந்ததாகவும், கடந்த 2 நாட்களாக மணல் திட்டுபகுதியில் தவித்ததாகவும் தெரிவித்தனர்.

      • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வந்தது.
      • இலங்கையில் தற்போது வரை பொருளாதார நிலைமை சீராகவில்லை.

      ராமேசுவரம்:

      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வந்தது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில்களும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து போதிய வருமானமின்றி தவிக்கின்றனர்.

      பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து வாழ்வாதாத்தை தேடி இலங்கை தமிழர்கள் கடல் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் அடைவது அதிகரித்துள்ளது.

      இந்த நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடி அருகே உள்ள அரிசல்முனை கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் இலங்கையில் இருந்து வந்திருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

      அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 65), சசிக்குமார் (30) இவரது மகன் மோகித் (7), சுபிஸ்கா (9), யாழ்பாணத்தை சேர்ந்த வசந்தகுமார் மனைவி ஜெயந்தினி (30), இவரது மகள் இனியா (10), மகன்கள் ஹரிஹரன் (9), தனுசன் (4) என தெரிய வந்தது.

      8 பேரையும் கடலோர காவல் படையினர் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

      முன்னதாக அவர்கள் கூறுகையில், இலங்கையில் தற்போது வரை பொருளாதார நிலைமை சீராகவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அங்கு பிழைப்பதற்கு வழியில்லாததால் தலா ரூ.1 லட்சம் கொடுத்து கள்ளத்தோணி மூலம் தலைமன்னாரில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்தோம் என்று தெரிவித்தனர்.


      • அதிபர் மாளிகையில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருள்கள் மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
      • அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

      கொழும்பு:

      இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் கடந்த 9-ந்தேதி அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அவற்றை ஆக்கிரமித்தனர். எனினும் பின்னர் அவர்கள் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக வெளியேறினர். எஞ்சியிருந்த ஒரு சிலரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீசார் சேத விவரங்களை ஆய்வு செய்தனர். இதில் அதிபர் மாளிகையில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைபொருள்கள் மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

      இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

      போதை ஆசாமிகளாக அவர்கள் 3 பேரும் அதிபர் மாளிகையில் திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட 40 பித்தளை கொக்கிகளை திருடி சென்றதாகவும், ராஜகிரியா நகரில் உள்ள கடையில் அவற்றை விற்க முயன்றபோது போலீசில் பிடிப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது.

      கொழும்பு:

      இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

      இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

      இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது.

      அதன்படி மதிப்பு கூட்டு வரி (வாட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், தொலைத் தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

      பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு விலக்குகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

      இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் குறைந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு வரி சலுகைகள் அறிவித்ததையடுத்து ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரி வருவாயில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

      2020-21-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், வரி சீர்திருத்தங்கள் அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழி வகுத்த கொள்கைகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2021-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக குறைந்து மோசமடைந்துள்ளது.

      இந்த நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே வருவாயை மேம்படுத்துதல், நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றுவதில் வரி உயர்வை செயல்படுத்துவது அவசியம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தேனீர் கடையில் மொய் விருந்து நடத்திய உரிமையாளர் ரூ.16 ஆயிரம் வசூல் செய்தார்.
      புதுக்கோட்டை:

      மொய் விருந்து என்றவுடன் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது புதுக்கோட்டை மாவட்டம் தான். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மொய் விருந்து நடத்தப்படுவது வழக்கம். கடன், தொழில் நஷ்டத்தால் தவிப்பவர்களை கைதூக்கி விடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

      காலப்போக்கில் அதுவே பிரபலமாகி கோடிக்கணக்கில் வசூலாகி சாதனை படைத்து வருகிறது. தங்களின் தகுதிக்கேற்ப சாப்பிட்டுவிட்டு மொய் வைப்பதன் மூலம் விருந்து வைத்த குடும்பத்தினர் மீண்டெழுந்த வரலாறும் உண்டு. அந்த வகையில் தன்னலம் கருதாமல் இலங்கை தமிழர்களின் நலன் கருதி டீக்கடைக்காரர் ஒருவர் மொய் விருந்து வைத்து அசத்தியுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

      இலங்கையில் தற்கபோது கடும் பொருளாதார நெருக்கடியில் வாழும் அங்குள்ள மக்களுக்கு இந்திய அரசு, தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் நிதி, நிவாரண உதவி வழங்க தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.

      இந்தநிலையில், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி இந்திரா நகரில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தனது கடையில், தேனீர் மொய் விருந்து நடத்தினார். இதில் வாடிக்கையாளர்கள் டீ அருந்தி விட்டு அந்த டீக்கு உரிய பணம் அல்லது தங்களால் முடிந்த நிதியை அங்கு வைத்திருந்த அண்டா வடிவிலான உண்டியலில் செலுத்தினர்.

      காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அந்த டீக்கடைக்கு வந்து தங்களால் முடிந்த நிதிகளை உண்டியலில் செலுத்தினர்.

      இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் சிவக்குமார் கூறுகையில், காலையில் இருந்து மாலை வரை 44 லிட்டர் பாலில் டீ வினியோகம் செய்யப்பட்டது. இந்த மொய் விருந்தில் மொத்தம் ரூ.16 ஆயிரத்து 202-ஐ நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிதியை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து தமிழக அரசு மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும்.

      தனக்கு வாய்ப்பு கிடைத்தால் தமிழக முதல்வரை சந்தித்து அளிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

      இவர் கடந்த 2018-ம் ஆண்டில் கஜா புயலால் இந்தப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டபோது, தனது கடையில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் கடன் பாக்கி வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை தள்ளுபடி செய்தார்.

      அதன்பிறகு கொரோனா பரவல் தொடக்கத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது டீ கடையில் மொய் விருந்து நடத்தி சேகரித்த ரூ.14,452 மற்றும் அவரது வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.5 ஆயிரத்தை சேர்த்து கலெக்டர் வழியாக அரசுக்கு அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
      ×