search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை பொருளாதார நெருக்கடி"

    இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    கொழும்பு :

    இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனா். இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடா்பான 21-வது சட்ட திருத்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என மூத்த அரசியல் தலைவா்கள் முடிவு செய்துள்ளனா்.

    சட்ட திருத்த மசோதா குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. இதில் 21-வது சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது.

    அதன் பின் வெளியான அறிக்கையில், 21-வது சட்ட திருத்த மசோதா கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒருமித்த கருத்து கூட்டத்தில் எட்டப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    எனவே அடுத்த மாதம் 3-ந் தேதி மீண்டும் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "அரசியலமைப்பின் 21-வது திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டதில் மகிழ்ச்சி" என்று பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தனது டுவிட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    21-வது திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கூறி உள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

    புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கூறி உள்ளது. எரிபொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் ரூ.3,250 கோடி கடனை இலங்கை நாடி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கே பணம் இன்றி இலங்கை தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், ஆசியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் 27-வது சர்வதேச மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே காணொலிக்காட்சி வழியாக பேசியபோது கூறியதாவது:-

    இலங்கையின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய பங்காளி ஆகும். இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை களைகிற வகையில் தேவையான நிதி உதவியை ஜப்பான் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் இலங்கையின் சுற்றுலா துறை முடங்கியது.

    கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் உள்நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைந்து விட்டது. வெளிநாட்டு கடன்கள் ஒருபுறம், பண வீக்கம் மறுபுறம் என்று இலங்கை நெருக்கடியில் இருக்கிறது. நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக உழைக்கிறோம். நாங்கள் சர்வதேச நண்பர்களிடம் அவசர உதவியை எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அத்தியாவசிய மருந்துகள், உணவு பொருட்கள், எரிபொருட்கள் தேவையை சந்திப்பதற்கு இந்த நிதி உதவி வேண்டும்.

    இலங்கைக்கு சர்வதேச நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். கடினமான இந்த தருணத்தில் நாட்டிற்கு ஆதரவை வழங்க வேண்டுகிறோம் என்று அவர் கூறினார்.
    மகிந்த ராஜபக்சே, தனக்கும் தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
    கொழும்பு :

    இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்சே, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

    ஆனால் மாலத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது' என்று கூறினார்.

    இலங்கை பயணத்தின்போது மகிந்த ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.
    கிட்டத்தட்ட திவாலான நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ரணில் விக்ரம சிங்கே எப்படி தூக்கி நிறுத்தப்போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
    கொழும்பு:

    அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி தொடர் போராட்டத்தில் குதித்தனர்.

    இதில் வன்முறை தாண்டவமாடியது. அதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே (வயது 73) கடந்த 12-ந் தேதி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றாலும், நிதி மந்திரி நியமிக்கப்படாத நிலை நீடித்தது. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயை நாட்டின் நிதி மந்திரியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நியமித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

    கிட்டத்தட்ட திவாலான நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ரணில் விக்ரம சிங்கே எப்படி தூக்கி நிறுத்தப்போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. ஏறத்தாழ 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.52,500 கோடி) திருப்பி செலுத்த வேண்டிய கடன் தவணையை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. நாட்டின் மொத்த கடன் 51 பில்லியன் டாலராக (சுமார் ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 500 கோடி) உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர 5 பில்லியன் டாலர் (ரூ.37,500 கோடி) நிதி தேவைப்படுகிறது.

    இலங்கை போதுமான பெரும்பொருளாதார கொள்கை கட்டமைப்பை ஏற்படுத்தாதவரையில், புதிய நிதி உதவியோ, கடன்களோ வழங்க வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கைவிரித்துவிட்டது. இலங்கையில் நிலவுகிற எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு, எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,250 கோடி) கடன் கோருவது என மந்திரிசபை கூட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி இந்தியாவிடம் கடன் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பிரச்சினைகளை நிதி மந்திரி பதவியை ஏற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரம சிங்கே சமாளிப்பது மிகப்பெரிய சவால்களாக இருக்கும். இதற்கிடையே அதிபருக்கான கட்டுப்பாடற்ற அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் 21-வது அரசியல் சாசன திருத்த வரைவு மசோதா, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிற அரசியல் கட்சி தலைவர்களுக்கு 27-ந் தேதி வழங்கப்படும் என அதை தயாரித்துள்ள நீதித்துறை மந்திரி விஜேதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    இதையும் படிக்கலாம்...ஜம்மு காஷ்மீரில் கொடூரம் - வீடு புகுந்து டிவி நடிகையை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்
    கொழும்பு புறநகரில் 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளை பதுக்குவதற்கு சில்லரை விற்பனை நிலையம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420, டீசல் ரூ.400 என்ற விலையில் விற்பனையாகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம் விலை உயர்வு என இரு முனை தாக்குதலால் மக்கள் கோபம் கொண்டுள்ளனர்.

    அதுமட்டுமின்றி மணிக்கணக்கில் காத்துக்கிடக்கவும் வேண்டியதிருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சில்லரை விற்பனை பெட்ரோல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்ததால் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களில் 40 சில்லரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் வினியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்த சாந்தா சில்வா தெரிவித்தார்.

    கொழும்பு புறநகரில் 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளை பதுக்குவதற்கு சில்லரை விற்பனை நிலையம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி, ஒட்டுமொத்த இருப்பையும் விலை உயர்வுக்கு முந்தைய பழைய விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டனர்.
    போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை.
    கொழும்பு:

    இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா, உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது.

    இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான தகவல் வெளியாகியுள்ளன.

    “இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவோம். அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை.

    சில அத்தியாவசிய மருந்துகள், வருமானமற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப்பரிமாற்றம் உதவி, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் பிள்ளைகளின் பாடசாலை தேவைகள், உணவு, விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக போன்ற விஷயங்களில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வளங்களை நாங்கள் தற்போது மீண்டும் உருவாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளது.

    இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்க கூறும்போது, “வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது.

    இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்க

    அந்நிய செலாவணியை செலவழிப்பதை விட அந்நிய செலாவணியை ஈட்டும் நாடாக இலங்கையை மாற்றுவதே தற்போதைய நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாகும்.

    இதன்படி இலங்கையின் அந்நிய செலாவணி ஈட்டும் திறனை நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் மேம்படுத்த வேண்டும்.

    அப்படி இல்லாவிட்டால் இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடரும்.

    தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.

    மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொழும்பு:

    இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். அதனால் சில நாட்கள், கடற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்த அவர், வெளியே தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
    இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாலத்தீவு பத்திரிகையில் வெளியான தகவலை மேற்கோள் காட்டி, இலங்கை பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ராஜினாமா செய்தவுடன், மகிந்த ராஜபக்சே, முகமது நஷீத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இலங்கையில் சுமூகநிலை திரும்பும்வரை மாலத்தீவில், தானும், தன் குடும்பமும் தஞ்சம் அடைய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் தங்கி இருக்க ராஜபக்சே விருப்பம் தெரிவித்தார்.

    அதை நிராகரித்த முகமது நஷீத், மாலத்தீவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கிக்கொள்ளுமாறு கூறினார். பின்னர், முகமது நஷீத், இலங்கைக்கு சென்றார்.

    கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சே, குடும்பத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி மாலத்தீவுக்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

    இத்தகவல்களை மாலத்தீவு அரசு உயர் அதிகாரி ஒருவர் சொன்னதாக இலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
    இலங்கையில் கடந்த மாதம் ஏப்ரல் 19-ந் தேதிக்கு பிறகு 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது.

    இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது.

    இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் இலங்கை சென்றடைந்தது

    தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

    பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையானது.

    இதே போல் டீசல் விலையில் 38.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் டீசல் ரூ.400 ஆக உள்ளது.

    கடந்த மாதம் ஏப்ரல் 19-ந் தேதிக்கு பிறகு 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

    இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறியில் உள்ளது. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    கொழும்பு :

    இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தநிலையில், கடந்த 9-ந் தேதி, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

    புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, கடந்த 12-ந் தேதி பதவி ஏற்றார். இலங்கையில் 19-வது அரசியல் சட்ட திருத்தம் மூலம், அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டு இருந்தன. கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனவுடன், அதை ரத்து செய்து, 20ஏ அரசியல் சட்ட திருத்தம் மூலம் நாடாளுமன்றத்தை விட அதிபருக்கு அளவற்ற அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.

    அதிபருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில், அவரது அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. இதற்காக 21-வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கான மசோதா, நேற்று இலங்கை மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுவதாக இருந்தது.

    ஆனால், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி எம்.பி.க்கள் திடீரென அம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். மசோதாவை அதே வடிவத்தில் ஏற்க முடியாது என்றும், முதலில் அட்டார்னி ஜெனரலின் ஒப்புதலை பெற்ற பிறகு மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

    இதனால், நேற்று இந்த மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு வரவில்லை. அதிபரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சேவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பேரில்தான் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றார். இதனால், இது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்த மசோதா, அதிபரின் அதிகாரத்தை குறைப்பதுடன், பல்வேறு ஆணையங்களை சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கக்கூடியது. ரணில் விக்ரமசிங்கே மந்திரிசபையில், கடந்த 20-ந் தேதி 9 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்தநிலையில், நேற்று மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.

    இவர்கள் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா, இலங்கை சுதந்திரா கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகியவற்றை சேர்ந்தவர்கள். ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மீன்வளத்துறை மந்திரியாக பதவி ஏற்றார். இவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், நிதி மந்திரியாக யாரையும் நியமிக்கவில்லை. பொருளாதார சிக்கலை கையாள வேண்டிய அப்பதவி இன்னும் காலியாகவே உள்ளது.

    இதற்கிடையே, கடந்த 9-ந் தேதி, மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை போலீஸ் செய்தித்தொடர்பாளர் நிஹல் தால்டுவா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 152 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

    இந்த வன்முறையில் 10 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு, 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21-ந் தேதி, போலீஸ் ஐ.ஜி. சாந்தன விக்ரமரத்னேவிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தச் சென்ற ராஜபக்சே ஆதரவாளர்களை தடுக்க வேண்டாம் என்று இவர் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிடமும் விசாரணை நடந்துள்ளது. இதற்கிடையே, ரணஜெயபுராவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளரது வீட்டை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. நீண்ட வரிசையில் நின்ற பிறகு பெட்ரோல் தீர்ந்து போன ஆத்திரத்தில், அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த உரிமையாளரின் மனைவியும், 2 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    இலங்கைக்கு ஏற்கனவே பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பிவைத்தது. கடந்த 21-ம் தேதி 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா வழங்கியுள்ளது.
    கொழும்பு:

    இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. 

    இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.

    இதற்கிடையே, கடந்த 18-ம் தேதி முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அரிசி, பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன. அவை இலங்கையை சென்றடைந்தன. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. 

    பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த மக்கள் பெட்ரோல் நிலையங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் மூலம் அனுப்பிவைத்தது. அந்த கப்பல், நேற்று கொழும்பு சென்றடைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்தியாவசியம் அல்லாத பணியாளர்கள் வீட்டிலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தேனீர் கடையில் மொய் விருந்து நடத்திய உரிமையாளர் ரூ.16 ஆயிரம் வசூல் செய்தார்.
    புதுக்கோட்டை:

    மொய் விருந்து என்றவுடன் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது புதுக்கோட்டை மாவட்டம் தான். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மொய் விருந்து நடத்தப்படுவது வழக்கம். கடன், தொழில் நஷ்டத்தால் தவிப்பவர்களை கைதூக்கி விடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    காலப்போக்கில் அதுவே பிரபலமாகி கோடிக்கணக்கில் வசூலாகி சாதனை படைத்து வருகிறது. தங்களின் தகுதிக்கேற்ப சாப்பிட்டுவிட்டு மொய் வைப்பதன் மூலம் விருந்து வைத்த குடும்பத்தினர் மீண்டெழுந்த வரலாறும் உண்டு. அந்த வகையில் தன்னலம் கருதாமல் இலங்கை தமிழர்களின் நலன் கருதி டீக்கடைக்காரர் ஒருவர் மொய் விருந்து வைத்து அசத்தியுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    இலங்கையில் தற்கபோது கடும் பொருளாதார நெருக்கடியில் வாழும் அங்குள்ள மக்களுக்கு இந்திய அரசு, தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் நிதி, நிவாரண உதவி வழங்க தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.

    இந்தநிலையில், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி இந்திரா நகரில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தனது கடையில், தேனீர் மொய் விருந்து நடத்தினார். இதில் வாடிக்கையாளர்கள் டீ அருந்தி விட்டு அந்த டீக்கு உரிய பணம் அல்லது தங்களால் முடிந்த நிதியை அங்கு வைத்திருந்த அண்டா வடிவிலான உண்டியலில் செலுத்தினர்.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அந்த டீக்கடைக்கு வந்து தங்களால் முடிந்த நிதிகளை உண்டியலில் செலுத்தினர்.

    இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் சிவக்குமார் கூறுகையில், காலையில் இருந்து மாலை வரை 44 லிட்டர் பாலில் டீ வினியோகம் செய்யப்பட்டது. இந்த மொய் விருந்தில் மொத்தம் ரூ.16 ஆயிரத்து 202-ஐ நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிதியை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து தமிழக அரசு மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும்.

    தனக்கு வாய்ப்பு கிடைத்தால் தமிழக முதல்வரை சந்தித்து அளிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டில் கஜா புயலால் இந்தப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டபோது, தனது கடையில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் கடன் பாக்கி வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை தள்ளுபடி செய்தார்.

    அதன்பிறகு கொரோனா பரவல் தொடக்கத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது டீ கடையில் மொய் விருந்து நடத்தி சேகரித்த ரூ.14,452 மற்றும் அவரது வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.5 ஆயிரத்தை சேர்த்து கலெக்டர் வழியாக அரசுக்கு அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால், எரிபொருள் லாரி டிரைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எரிபொருள் வினியோகத்தை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இருக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கும், சமையல் கியாசுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், சமையல் கியாஸ் நிலையங்கள் முன் நாள்கணக்கில் காத்திருத்தும் அவற்றைப் பெற முடியாத பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

    இந்நிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'எரிபொருள் லாரிகளை சில குழுக்கள் தடுத்து நிறுத்துவதாகவும், தாங்கள் சொல்லும் இடத்தில் எரிபொருளை இறக்க வேண்டும், இல்லாவிட்டால் தீ வைப்போம் என்று மிரட்டுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால், எரிபொருள் லாரி டிரைவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எரிபொருள் வினியோகத்தை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், எரிபொருள் பதுக்கல் தொடர்பாக நேற்று இலங்கை போலீசார் நாடளாவிய சோதனையை தொடங்கினர்.
    ×