search icon
என் மலர்tooltip icon
    • குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
    • பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும்.

    ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாக்கினார்.

    பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.

    பிரகஸ்பதி குருவானது எப்படி?

    வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்று லட்சியம் கொண்ட பிரகஸ்பதி நான்கு வகை வேதங்களையும் கற்று, பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார். அஸ்வமேத யாகம் போன்ற சிறந்த யாகங்களை நூற்றுக்கும்மேல் செய்தார். இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர்தான் தேவர்களுக்கு குருவாக முடியும். அதன்படி தேர்வு பெற்று பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவானார்.

    அத்துடன் அவர் திருப்தி அடைந்துவிடவில்லை. தேவ குருவைவிட சிறப்பான இடத்தை அடைய மேலும் பல அரிய ஹோமங்களும் யாகங்களும் செய்ததுடன், திட்டை தலத்துக்கு வந்து, அங்கு கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவர் தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவருக்கு நவகிரக பதவியை வழங்கினார்.

    அதன்படி நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவானாக ஏற்றம் பெற்றார். அது முதற்கொண்டு திட்டையில் சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் குரு பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

    சிவபெருமானின் ஞானவடிவமான தட்சிணாமூர்த்தி ஆதிகுரு என அழைக்கப்படுகிறார்.

    இவரை வழிபடுபவர்களுக்கு அருளையும், ஞானத்தையும் வழங்கக்கூடியவர். எல்லா சிவன் கோவில்களிலும் தென் கோஷ்டத்தில் இவர் எழுந்தருளியிருப்பார். குரு பகவான் இல்லாத திருக்கோவில்களில் தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடுகின்றனர். ஆனால் குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குருவுக்கு செய்யும் பரிகாரங்களை குருவுக்கே செய்யவேண்டும்.

    குருவால் ஏற்படும் தோஷங்களுக்கு குருவையே வழிபடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள பணம், பொன் விஷயங்களுக்கு குருவே அதிபதி. எனவே பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும். உங்களுக்கு பொருள் வந்துவிட்டது. அடுத்தது என்ன, திருமணம்தானே? அதற்கும் குருவின் அருள் வேண்டும்.

    குரு பலம்

    ஒருமுறை பார்வதி தேவியானவர் பூவுலகில் பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்துகொள்ள கடுந்தவம் புரிந்தார். நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று தேவியை மணந்து கொள்ளவேண்டுமென்று முறையிட்டனர். அப்போது சிவன், "தேவியைத் திருமணம் செய்துகொள்ள நானும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்ன செய்வது? தேவிக்கு இன்னும் குரு பலம் வரவில்லையே' என்றார். உலக அன்னையான தேவிக்கே குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் எனும்போது சாமான்யர்களான நம் நிலை என்ன? எனவே திருமணம் தடைப்படுபவர்கள் அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திட்டைக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து, குரு பகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கினால், திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.

    சரி; பொருள் சேர்ந்துவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. குழந்தை வரம் கிடைக்க வில்லை. அப்போதும் குரு பகவானையே வழிபடவேண்டும். ஏனென்றால் குரு பகவான் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகின்றார்.

    அவர் அருள் இருந்தால்தான் குழந்தை பிறக்கும்.

    நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இதையே கூறுகின்றன. வியாழகிரகத்திலிருந்து வரும் மஞ்சள் நிறமான மீத்தேன் கதிர்கள்தான் உயிரினங்கள் உண்டாகக் காரணமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வித்யாகாரகன் குரு பகவான்

    குருவருளால் பொருள், திருமணம், குழந்தைச் செல்வம் என எல்லாம் பெற்று விட்டீர்கள். அந்தக் குழந்தை நல்லபடியாகப் படித்து முன்னேற வேண்டும் அல்லவா? அதற்கும் குரு பகவான்தான் அருளவேண்டும். கல்வியில் முன்னேற்றம், வேத வேதாந்த சாஸ்திர அறிவு, நல்ல புத்தி, ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குரு பகவான்தான். அப்படி நல்லபடியாகப் படித்துத் தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குரு பகவான் தான். அவர் அருளால்தான் அரசியல் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகிய பதவிகள் கிடைக்கும். அதுபோலவே நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் முக்கியமான நிர்வாகத் துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் குரு அருள் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

    குரு பார்க்க கோடி நன்மை

    நவகிரகங்களில் முழுமையான சுப கிரகம் குரு பகவான் ஒருவரே. சந்திரன் சுபரானாலும் இவர் வளர்பிறையில் மட்டுமே சுபராகக் கருதப்படுவார். புதன் சுபகிரகங்களோடு சேரும்போது மட்டுமே சுபர். அசுப கிரகங்களோடு சேரும்போது பாபத் தன்மை அடைந்துவிடுவார். சுக்கிரன் சுப கிரகமானாலும் அவர் அசுர இனத்தில் பிறந்ததால் அவரை முழு சுபராக ஏற்பதில்லை. எனவே, தேவகுருவான குரு பகவானே முழுச்சுபராக கருதப்படுகின்றார்.

    சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து கிரகங்களையும் முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து கிரகங்களினால் வரும் தோஷங்களைக் கட்டுப்படுத்துகிற சக்தி முழு சுபகிரகமான குரு பகவானுக்கு உண்டு. குருவின் 5, 7, 9-ஆம் பார்வைகள் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. எனவேதான் "குரு பார்க்க கோடி தோஷம் விலகும்', "குரு பார்க்க கோடி நன்மை' என்று பழமொழிகள் உருவாகின.

    • காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
    • மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.

    சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

    ரயில் நிலையம் : திட்டை

    பஸ் வசதி : உண்டு

    தங்கும் வசதி : இல்லை

    உணவு வசதி : இல்லை

    • ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.
    • திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும்.

    தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு வருடம் தோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமாக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.

    ஆனால் அந்த பேரூழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டை ஸ்தலம். கைலாசம் கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி. சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களில் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது.

    மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிந்தும், இருந்த இந்தப் பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர். அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளாள் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவுள்ள ஒரு மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர்.

    அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தரிசனம் அளித்தது. அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும். இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

    இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

    • சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
    • நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச’ யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

    குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:

    1) கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் ``கஜகேசரி யோகம்'' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.

    2) குருச்சந்திரயோகம் : சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் `குருச்சந்திரயோகம்' உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

    3) குரு மங்களயோகம் : குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் `குரு மங்கள யோகம்' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

    4) ஹம்சயோகம் : சந்தினுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

    5) சகடயோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், ``சகடயோகம்'' ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும். பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

    சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும். குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்". 

    • எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!
    • ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும்.

    "தீபாவளி வருது! அந்த பழைய வெள்ளி விளக்கத்தொடச்சு வெய்ங்களேன்! நான் தான் காலையிலேர்ந்து பட்சணம் செய்திட்டு இருக்கேன்ல?"

    "அட என்னம்மா! மாலை மலரை முழுசாப்படிக்க விட மாட்டேங்கற! இரு வரேன்!"

    புகை எங்கும் புகை!

    "அய்யோ! யார் நீ? பூதமா?"

    "எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!"

    "நெஜம்மாவே நீ பூதமா? சரி, எனக்கு ஆபீஸ் போய் வர ஒரு கார் தாயேன்!"

    "அடசே! என்னய்யா மனுஷன் நீ? அங்க உள்ள உன் ஒய்ப் வீட்டு வேல செஞ்சு கஷ்டப்படறா! வீட்டுக்குத்தேவையான பொருளா எதுனா கேளு!"

    "அப்படி என்ன பொருள் இருக்கு ஸ்பெஷலா?"

    நானே சொல்றேன் கேட்டுட்டு முடிவு பண்ணு!"

    பாண்டல்லிஜெண்ட் (Pantelligent) ன்னு ஒரு வாணலி இருக்கு. அத அடுப்புல வெச்சு புளூ டூத்ங்கற டெக்னாலஜி கொண்டு உன் மொபைல் போனிலேர்ந்து வித விதமா சமையல் பண்ண உதவும்!"

    "என்னது புளூ டூத் வாணலியா?'

    "ஆமா! ஒரு செயலி மூலம் வேணுங்கற ரெஸிப்பிய உன் மொபைலில டவுன்லோட் பண்ணிட்டா, அத வெச்சு அந்த ரெஸிப்பி சொல்லும் ஒவ்வொரு ஸ்டெப்பையும் தானா செயல்படுத்தி உனக்கு வேணுங்கற பதார்த்தத்தை அமர்க்களமா சமைச்சுக்கொடுத்துடும்! எப்போ சூடு அதிகரிக்கணும் எப்ப குறைக்கணுமெல்லாம் அந்த செயலியே பாத்துக்கும்!"

    "அடேயப்பா!"

    "அடுத்து இன்னொரு ஐட்டம் இருக்கு! வீட்டம்மா கடுமையா வேலை செஞ்சுட்டு நிம்மதியா டீவியில் சீரியல் சினிமான்னு பாக்கறாங்க இல்ல? அந்த அனுபவத்தை அவங்களுக்கு மேம்படுத்திக்கொடுத்தா எத்தன சந்தோஷப்படுவாங்க!"

    "ஆமா கரெக்டுதான்! சொல்லு சொல்லு!"

    " சாம்சங் கம்பெனியில வளைந்த திரையுடன் ஒரு 4K Ultra HD smart LED TV கொண்டு வந்திருக்காங்க! சும்மா இல்லை, 88 இஞ்ச் ஸ்கிரீன், அப்படியே சினிமா தியேட்டர் கணக்கா இருக்கும் பார்க்கும் அனுபவம்! படம் பார்க்கும்போது ரஜினி அப்படியே நம்ம வீட்லயே வந்து வசனம் பேசறாமாதிரி நெருக்கமான எக்ஸ்பீரியன்ஸ்!" கிடைக்கும்.

    "அப்ப அது ஒண்ணு நோட் பண்ணிக்க!" வேறேன்ன?"

    "புராண்டோ (Pronto) என்னும் செயலிக்கம்பெனி Peel Smart Remote என்னும் கம்பெனியோடு ஜோடி போட்டுத்தயாரித்துள்ள ரிமோட் ஒண்ணு வந்திருக்கு."

    "ரிமோட்ட வெச்சுக்கிட்டு…?"

    "முழுசா கேளு! இந்த ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும். அவ்வளவுதான்! உன்னோட மொபைல் ஒண்ணை வெச்சுண்டு எதையும் இயக்கலாம். அமெரிக்காவுல செய்வது போல நீயும் இதை வாங்கினதோட ஒரு ரோபோவையும் வாங்கி வெச்சுடு. மொபைல் போன் மூலமா என்ன டி.வி. புரோகிராம் இருக்குன்னு தெரிஞ்சு, அப்படியே அந்த டைமுக்கு டி.வி. ஆன் பண்றாமாதிரி செட் பண்ணிட்டு, கூடவே உனக்கு ஞாபகப்படுத்த அலாரமும் வெச்சுட்டா போதும், அந்த டைமுக்கு அலாரம் அடிக்க, நீ வந்து சோபாவுல உட்கார்ந்தா, டி.வி. தானா ஆன் ஆகி அந்த புரொகிராம் ஓட ஆரம்பிக்கும். மொபைல் அழுத்தி ரோபோவைக்கூப்பிட்டு பிரிட்ஜ்ஜிலேர்ந்து ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் கோலா பாட்டிலும் கொண்டு வரச்சொல்லிட்டா, நீ பாட்டுக்கு ஹாய்யா உட்கார்ந்துண்டு டி.வி. பார்க்கலாம்!"

    "அடடா கேட்கவே சொகம்மா இருக்கே! அப்புறம்?"

    "போன மாசம் ஏதோ டாகுமெண்ட்டைக்காணும்னு ஒய்ப்கிட்ட சத்தம் போட்டுண்டு இருந்தியே?"

    ஆமா! உனக்கெப்படி தெரியும்?'

    "நான் இந்த விளக்குலதானே இருந்தேன், ஏன் தெரியாம! இன்னமே அந்த கஷ்டமெல்லாம் இல்லாம இருக்க ஒரு சேப் லாக்கர் வந்திருக்கு. பூட்டு எங்க சாவி எங்கன்னு அல்லாட வேண்டாம். (Wi Fi) ஒய் பை இணையம் மூலம் தொடர்பு கொண்டு உன் குரலை வெச்சே லாக்கரைத்திறக்கலாம், மூடலாம்! First Alertன்னு ஒரு கம்பெனி இந்த மாதிரி ஒய் பை அலமாரி செய்யறாங்க!"

    "டெக்னாலஜி என்னவெல்லாம் பண்ணுது!"

    "இதையும் கேளு! நம்ம பிலிப்ஸ் கம்பெனி இருக்கு பாரு அவங்க கூட நுண்ணறிவு கொண்ட லைட்டெல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சாச்சு!"

    "என்னது நுண்ணறிவு கொண்ட விளக்கா?"

    "ஆமா! இந்த லைட்டை ரிமோட் வெச்சு பிரைட்டாகவோ இல்லை டிம்மாகவோ ஆக்கலாம். நீ ஆபீஸ்லேர்ந்து ஒரு ஜாலி மூடுல வரும்போது உன்னோட மொபைல் போன்லயே மூடை செட் பண்ணிட்டா, ஸ்விட்ச் போட்டவுடனே லைட் உன் மூடுக்கேத்தா மாதிரி எரியும்!"

    "இந்த ஒரு டெக்னாலஜி எனக்கு சரிப்பட்டு வராதே பூதமே!"

    "அது ஏன்?"

    "இப்படிதான் போன வாரம் வந்து ஆரஞ்சு பல்பைப்பொருத்தி ரொமாண்டிக்கான மூடுக்காக போட்டு வெச்சேன்!"

    "என்னது ஆரஞ்சு பல்பு ரொமாண்டிக்காவா? அடக்கஷ்டமே!

    "அதேதான்! என்ன அழுது வடிஞ்சுண்டுன்னு ஒரு விளக்குன்னு அவ உடனே ஆப் பண்ணிட்டா!"

    " உன்னையும் சேர்த்தா?'

    " ஏய் பூதமே! என்ன கேலியாபண்றே? இப்ப நீ சொன்ன ஐட்டம் எல்லாத்தையும் இங்க வீட்ல பொருத்து! ம் க்விக்!"

    "முடியாது எஜமானனே! நீ வெளக்கை தேய்ச்ச தேய்ப்புக்கு ஒரு வரம்தான் அனுமதி!"

    "சரி அந்த ஒரு வரத்தை தா!"

    "கொடுத்தாச்சே!

    "எப்பய்யா கொடுத்தே? அழுகுணி ஆட்டமா இருக்கே! பூதங்கள்ள கூட இந்த தப்பாட்டம் உண்டா?"

    "இல்லை எஜமான்னே! இந்த டெக்னாலஜி விஷயங்கள்ளாம் உனக்கு தெரிவித்து உன் பொது அறிவை மேம்படுத்தியதுதான் நான் அளித்த வரம்!. உங்க சான்ஸ் ஓவர்! வர்ட்டா!"

    "ஒரு வெளக்க துடைச்சு வெக்கச்சொன்னா என்ன வெட்டியா உட்கார்ந்துண்டு இருக்கீங்க?"

    "இல்ல பூதம்…?"

    "என்னது என்னைப்பார்த்தா பூதம் மாதிரி இருக்கா? இருக்காதா பின்னே? உங்க வீட்டு வேலையெல்லாம் மாஞ்சு மாஞ்சு இடுப்பொடிய செய்யறேனே! அதுக்கு எனக்கு பூதம்னு பேர் வெச்சுறதா?''

    லொட்!

    கடைசிச்செய்தியின் படி அரை மணிக்குப்பிறகு அந்த வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்ததாக அறிகிறோம்!

    • சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர்.
    • இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார்.

    மனிதனின் ஆறாம் விரலாய் செல்போன் மாறிவிட்டது. சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர். இதனால் குடும்பத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போதும், சமையலறையில் செல்போன், லேப்டாப்பிற்கும் இடம் ஒதுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது எனலாம்.

    இந்நிலையில் ஒரு தாய் தனது குடும்பத்தினரை செல்போன், லேப்டாப் இல்லாமல் நிம்மதியாக சாப்பிட வைப்பதற்காக மேற்கொண்ட புது 'டெக்னிக்' இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார். ஒவ்வொருவராக வந்ததும் அவர்கள் தங்களிடம் உள்ள செல்போன், லேப்டாப்பை அவரிடம் ஒப்படைத்த பிறகே அவர்களுக்கு தட்டில் சாப்பாடு போடுகிறார். அதன் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிம்மதியாக சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தாயின் டெக்னிக்கை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
    • கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவிப்பார்கள்.

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நடை பெறும். கோவிலில் இருந்து, விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் அங்காளம்மன் எழுந்தருளிய இருப்பார். அங்கு மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மயானக்கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவிப்பார்கள். கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வரும் போது, சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடு பக்தர்கள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுப்பார்கள்.

    அம்மன் வேடமிட்ட அரவாணிகள் தங்கள் மீது நடந்துச் சென்றால், தோஷம் நீங்கும் என கருதி, பக்தர்கள் பலர் நீண்ட வரிசையில் படுப்பார்கள். அவர்கள் மீது அரவாணிகள் நடந்துச் செல்வார்கள். இதில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    • பார்வதி தேவி மேல்மலைனூருக்கு வரும் போது மூன்று காவல் தெய்வங்களை உடன் வந்தன.
    • தண்ணீர் அல்லது கள்ளாவது கொஞ்சம் தாருங்கள் என்று சானர்களிடம் பார்வதி தேவி கேட்டாள்.

    சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் நிர்வத்தியாகும் பொருட்டு பார்வதி தேவி மேல்மலையனூருக்கு நடந்து தாழனூரை(தற்போது தாயனூர் என்று அழைக்கப்படுகிறது) வந்தடைந்தாள். இரவு பொழுது நெருங்கியது பார்வதி தேவி தாழனூரில் உள்ள ஒரு வட்ட பாறையில் இரவு பொழுதை கழித்தால். தாழனூரில் தங்கியதால் இன்று தங்கினால் தாயனூர் என்றும் அழைக்கின்றனர். மேலும் பார்வதி தேவி தங்கிய இடத்தில் பார்வதி தேவின் முத்து அங்கு விழுந்ததால் அங்கு முத்தாலம்மன் என பெயர் பெற்று முத்தாலம்மன் ஆலயம் அங்கு வழிபாட்டுக்கு உள்ளது.

    பார்வதி தேவி மேல்மலைனூருக்கு வரும் போது மூன்று காவல் தெய்வங்கள் உடன் வந்தன. அவர்கள் பாவடைராயன், மதுரைவீரன், காத்தவராயன் இவர்கள் பார்வதி தேவிக்கு காவலாக வந்தனர்.

    பார்வதி தேவி மலையனூருக்கு வரும்போது அழகான ஒரு பொன்னேரி அதில் பனந்தோப்பு பனமரத்தில் சானார்கள் கள் இறக்கிக் கொண்டிருந்தனர் அப்போது பார்வதி தேவியின் காவல் தெய்வங்காளான பாவடைராயன், மதுரைவீரன், காத்தவராயன், பார்வதி தேவிடம் தாகமாக இருப்பதாக கூறினர்.

    அதற்கு பார்வதி தேவி சரி வாருங்கள் சானர்கள் கள் இறக்கிகொண்டிருக்கிறார்கள் நான் சென்று உங்களுக்கு கள் வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு சானர்கள் அருகில் சென்றாள் பார்வதி தேவி....

    பார்வதி தேவி சானர்களிடம் என் குழந்தைகளுக்கு தாகமாக இருப்தாகவும் என் குழந்தைக்கு தண்ணீர் அல்லது கள்ளாவது கொஞ்சம் தாருங்கள் என்று சானர்களிடம் பார்வதி தேவி கேட்டாள்..

    கள்ளா கிடையாது.. பொன் பொருள் இருந்தால் கொடு கள் தருகிறோம் இல்லையெனில் நகரு என்று ஏளனம் செய்தனர் சாணர்கள் இதனால் கோபம் அடைந்த பார்வதி தேவி மேல்மலையனூர் ஏரியில் பனை மரம் எதுவும் இருக்ககூடாது என சாபம்மிட்டதால் இன்றும் ஏரியில் பனை மரங்கள் ஏதும் கிடையாது.

    • சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது.
    • சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது.

    ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரியின் ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மயைனூர் அக்னி குலக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருள்ளாட்டம் ஆடி வருவார்.

    பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஷ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடிசாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின.

    சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கிரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்லமாட்டார்.

    • மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே. ரமேஷ் தலைமை தாங்கினார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி, தண்டலம், பெரியபாளையம், கன்னிகைப்பேர், தாமரைப்பாக்கம், கன்னிகாபுரம், இலட்சிவாக்கம், ஆத்துப்பாக்கம், காக்கவாக்கம், ஏனம்பாக்கம் உள்ளிட்ட பத்து ஊராட்சிகளுக்கு தலா ரூ.26,500 தொகையில் 15-ம் நிதி குழு மானியம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் தொகையில் மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே. ரமேஷ் தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி, துணைப்பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பத்து ஊராட்சிகளுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

    இந்நிகழ்ச்சியில், கே.வி.லோகேஷ், ஆ.சத்தியவேலு, வக்கீல்கள் எ.சீனிவாசன், முனுசாமி, வடமதுரை அப்புன், வெங்கல் வி.ஜே.சீனிவாசன், கோடுவெளி குமார், தாமரைப்பாக்கம் கீதா துளசிராமன், கன்னிகைப்பேர் காயத்ரி உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் உதயசங்கர் நன்றி கூறினார்.

    • சென்னையை சேர்ந்த பெண் வீராங்கனை ஐஸ்வர்யா கணேஷ் முதலிடம் பெற்று ஆசிய போட்டிக்கு தேர்வானார்.
    • அடுத்த மாதம் தூத்துக்குடி கடற்கரையில் இதே போல் சர்பிங் போட்டிகள் நடைபெறுகிறது.

    மாமல்லபுரம்:

    சென்னை அடுத்த கோவளம் கடற்கரையில் தமிழ்நாடு பாய்மர படகு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட பாய்மரப் படகு சங்கம் இணைந்து 4நாட்களாக அகில இந்திய அளவிலான "விண்ட் சர்பிங்" போட்டியை நடத்தி வந்தது.

    இதில் சென்னையை சேர்ந்த பெண் வீராங்கனை ஐஸ்வர்யா கணேஷ் முதலிடம் பெற்று ஆசிய போட்டிக்கு தேர்வானார்.

    அவருக்கு பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கபட்டது. கோவா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட அனைத்து பிரிவு வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் தூத்துக்குடி கடற்கரையில் இதே போல் சர்பிங் போட்டிகள் நடைபெறுகிறது.

    • 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.
    • சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    "தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆப் இந்தியா

    என்னும் நிறுவனம் வழங்கும் படிப்பு தான் "ஆடிட்டர்" என சமூகத்தில் அந்தஸ்து பெற்ற பதவியை வழங்கும் ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    இந்த நிறுவனம் மத்திய அரசின் "மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேட் அப்பையர்ஸ்" என்னும் துறையின் கீழ் இயங்குகிறது. 1949 -ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "தி சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆக்ட்" என்னும் சட்டத்தின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இயங்குகிறது.

    இந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, கான்பூர் மற்றும் புதுடெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் உள்ளன. இவை தவிர 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.

    அபுதாபி, மெல்போர்ன், சிட்னி, பக்ரைன், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா, தோகா, துபாய், இந்தோனேசியா, ஜெட்டா, கென்யா, குவைத், நியூசிலாந்து, நைஜீரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, உகாண்டா, லண்டன், நியூயார்க், யு .எஸ். ஏ, சாம்பியா உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் ஆடிட்டர் படிப்பை நடத்துவதற்கு உதவியாய் இயங்குகின்றன.

    இந்த நிறுவனம் மூன்று வகையான முக்கிய படிப்புகளை நடத்துகிறது.

    அவை:

    1. சார்ட்ர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ்.

    2. போஸ்ட் குவாலிபிகேஷன் கோர்சஸ் பார் மெம்பர்ஸ்

    3. சர்டிபிகேட் கோர்சஸ் பார் மெம்பர்ஸ் என்பன ஆகும்.

    இவற்றுள் சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    ஆடிட்டர் படிப்பை படிப்பவர்களுக்கு தேவையான அனுபவ அறிவும் ஆழ்ந்த நூல் அறிவும் பெறுவதற்கு வசதியாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சி .ஏ (ஆடிட்டர் ) படிப்பில் சேர்வது எப்படி?

    சி.ஏ படிப்பில் நேரடியாக சேர்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

    அவை,

    1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட்

    2. டைரக்ட் என்ட்ரி ரூட்.

    1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட் ( FOUNDATION COURSE ROUTE)

    பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் அடிப்படை படிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

    இருந்தபோதும், இவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்ற பொழுதே தங்களது பெயரை இந்நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும், ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

    இப்படி பத்தாம் வகுப்பு தகுதியை வைத்து முன்கூட்டியே பெயரை பதிவு செய்தவர்கள்,பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடன் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுதலாம். அதாவது, மே /ஜூன் மாதம் அல்லது நவம்பர் /டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு எழுதலாம்.

    பிளஸ் டூ மற்றும் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், அடுத்த கட்ட தேர்வான இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இருந்தபோதும், இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் அவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும்.

    பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் கோர்ஸ்களில் வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பாக நான்கு வாரங்கள் "கிரியேடிவ் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் படிப்பை முடித்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    ஆடிட்டர் படிப்பில் தேவையான அனுபவ அறிவு பெறுவதற்கு கண்டிப்பாக மூன்று வருடங்கள் "பிராக்டிகல் டிரெனிங்" என்னும் பயிற்சியை பெற வேண்டும். இந்த பயிற்சியை ஆடிட்டர்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சி பெறுவதற்கு முன்பே, இந்த நான்கு வார "இன்டர்கிரேட்டட் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் பயிற்சியை தனியாக பெற்று சான்றிதழ் பெறுவது நல்லது.

    ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சியை பெறுவதற்கு, இன்டர்மீடியட் கோர்ஸ் படிக்கும்போதே சேர்ந்து கொள்ளலாம் அல்லது இன்டர்மீடியட் கோர்ஸ் மற்றும் பைனல் கோர்ஸ் இரண்டிலும் வெற்றி பெற்ற பின்பும் சேர்ந்து கொள்ளலாம்.

    பொதுவாக, ஆடிட்டர் படிப்பில் இறுதித் தேர்வு எனப்படும் பைனல் எக்சாம் எழுதுவதற்கு முன்பே ஆடிட்டரிடம் அனுபவப் பயிற்சி பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.

    போதுமான அனுபவ பயிற்சி பெற்ற பின்பு இரு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பின்பு ஆடிட்டராக பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    2. டைரக்ட் என்ட்ரி ரூட்.

    "டைரக்ட் என்ட்ரி ரூட்"என்னும் முறையில் சி. ஏ படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    வணிகவியல் பாடம் அல்லாத மற்ற பாடங்களில் படிப்பை பட்டப் முடித்தவர்கள், கண்டிப்பாக பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல், வணிகவியல் பாடம் அல்லாத பட்டப் மேற்படிப்பை முடித்தவர்களும் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.

    "இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா" நடத்துகின்ற "இன்டர்மீடியட் லெவல் "தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

    தேர்வு திட்டம்.

    பவுண்டேஷன் கோர்ஸ்.

    பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் தேர்வில்,

    1. பிரின்ஸ்பில்ஸ் அண்ட் பிராக்டிஸ் ஆப் அக்கவுண்டிங்

    2. பிசினஸ் லாஸ் & கரஸ்பாண்டன்ஸ் பிசினஸ் அண்ட் ரிப்போர்ட்டிங் .

    3. பிசினஸ் மேத்தமேடிக்ஸ் & லாஜிக்கல் ரீசனிங் மற்றும் ஸ்டாடிஸ்டிக்ஸ்,

    4. பிசினஸ் எக்கனாமிக்ஸ் & பிசினஸ் அண்ட் கமர்சியல் நாலெட்ஜ் ஆகிய பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.

    இன்டர்மீடியட் கோர்ஸ்.

    இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வில் குரூப் 1 குரூப் 2 ஆகிய பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன

    குரூப்-1 தேர்வில்,

    1. அக்கவுண்டிங்

    2. கார்ப்பரேட் அண்ட் அதர் லாஸ்

    3. காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்

    4. டேக்ஸ்சேசன்

    பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    குரூப் 2 தேர்வில்,

    1. அட்வான்ஸ் அக்கவுண்டிங்

    2. ஆடிட்டிங் அண்ட் அசுரன்ஸ்

    3. என்டர்பிரைஸ் இன்பர்மேஷன் சிஸ்டம் அண்ட் ஸ்ட்ராட்டஜிக் மேனேஜ்மென்ட்,

    4. பைனான்சியல் மேனேஜ்மென்ட் அண்ட் எகனாமிக்ஸ் பார் பைனான்ஸ் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    பைனல் கோர்ஸ்

    பைனல் கோர்ஸ் எனப்படும் இறுதி தேர்வில் குரூப் -1 மற்றும் குரூப் -2 ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    குரூப் -1 தேர்வில்,

    1. பைனான்சியல் ரிப்போர்ட்டிங்

    2. ஸ்ட்ராட்டஜிக் பைனான்சியல் மேனேஜ்மென்ட்

    3. அட்வான்ஸ் ஆடிட்டிங் அண்ட் புரொபஷனல் எத்திக்ஸ்,

    4. கார்ப்பரேட் அண்ட் எகனாமிக் லாஸ்

    ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    குரூப் 2 பிரிவில்

    1. ஸ்ட்ராட்டஜி காஸ்ட் மேனேஜ்மென்ட் அண்ட் பெர்பார்மன்ஸ் எவாலுவேசன்,

    2. விருப்ப பாடம் (கீழே குறிப்பிட்டுள்ள பாடங்களில் ஏதேனும் ஒரு விருப்ப பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)

    a) ரிஸ்க் மேனேஜ்மென்ட்

    b) பைனான்சியல் சர்வீசஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்,

    c) இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்,

    d) எக்கனாமிக் லாஸ்

    e) குளோபல் பைனான்சியல் ரிப்போர்ட்டிங் ஸ்டாண்டர்ட்ஸ்

    f) மல்டி டிசிப்ளினரி கேஸ் ஸ்டடி

    3. டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்

    4. இன்டைரக்ட் லாஸ்

    ஆகிய பாடங்களில் தேர்வுகள் இடம் பெறும்.

    ஏராளமான வேலை வாய்ப்புகள்

    "சார்ட்டட் அக்கவுண்டன்ட்" படிப்பை முடித்தவர்கள் மிகச்சிறந்த திறமைகளை கொண்டவர்களாக இருப்பதால், இவர்களுக்கு பைனான்சியல் ரிப்போர்ட்டிங், நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ், பைனான்ஸ் அண்ட் கார்ப்பரேட் லா போன்ற துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.

    இவர்கள் ஆடிட்டராகவும் சொந்தமாக தொழில் செய்யலாம். மேலும், அரசுத்துறை கூட்டுறவு சங்கங்கள் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் அதிக வேலை வாய்ப்புகள் இவர்களுக்கு உள்ளன.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி எனப்படும் "கூட்ஸ் அண்ட் சர்வீசஸ் டேக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சேவை அமைப்புகள் போன்றவற்றில் வரிகளின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்கு ஆடிட்டர்களின் உதவி கண்டிப்பாக தேவை.

    பல நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை சட்டபூர்வமாக செலுத்துவதற்கு, ஆடிட்டர்களின் உதவியை நாடுகிறார்கள். இவை தவிர, ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும், தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கவும், துறை தணிக்கைகளுக்கு துணை நிற்கவும் ஆடிட்டர்களின் சேவை பெருமளவில் உதவியாய் அமைகிறது.

    மேலும் விவரங்களுக்கு,

    1. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 29, செக்டார் 62 நொய்டா-201 309.

    இணையதள முகவரி : www.icai.org.

    2. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்க வுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 122 மகாத்மா காந்தி ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034.

    தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com

    ×