search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர்"

    • பழைய கணபதியின் தொப்பை இல்லாத திருஉருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும்
    • மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

    திருமந்திரத்தில் "ஐந்து கரத்தினை" என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல், தற்காலத்தில் தான் திருமூலரின் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது.

    அவர் காலத்தில் சைவ சமயத்தில், சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்தவொரு காரியங்களையும், இலக்கியங்களையும், அல்லது நூல்களையும் தொடங்கியது இல்லை.

    விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற பரஞ்சோசியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியைத் தமிழகத்துக்கு தான் திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு.

    இந்த வரலாற்றுக்கு சான்றாக, பழைய கணபதியின் தொப்பை இல்லாத திருஉருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

    • விநாயகர் விக்னேசுவரர். தன்னை வழிபடுவோரின் விக்னங்களைப் போக்குவார்.
    • ‘‘தனதடி வழிபடும் அவர் இட கடி கணபதி‘‘ எனத் திருஞானசம்பந்தர் போற்றுவார்.

    முன்பு ஒரு காலத்தில் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் பிரம்மதேவரை நோக்கிக் கடுந்தவம் புரிந்தனர்.

    அவர்கள் தவத்துக்கு இரங்கி பிரம்மதேவர் அவர்கள் முன்புதோன்றி, ''உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டார்.

    அதற்கு அவர்கள் முறையே தங்களுக்கு பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆனதும் பறக்கும் திறன் வாய்ந்ததுமான மூன்று கோட்டைகள் வேண்டும்'' என வேண்டினர். அவரும் அவ்விதமே தந்தருளினார்.

    அந்த மூன்று அசுரர்களும் கோட்டைகளுடன் வானத்தில் பறந்து சென்று தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் தந்து வந்தனர்.

    தேவர்கள் துன்பம் பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    சிவபெருமான் சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகவும், கீழ் ஏழு உலகங்களைத் தேருக்குக் கீழ்த்தட்டுகளாகவும்

    எட்டுத்திக்கும் உள்ள மலைகளைத் தூண்களாகவும் மேலேழு உலகங்களைத் தேரின் மேல் தட்டுகளாகவும்

    இமயத்தைக் கொடியாக்கி நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும் பிரம்மாவைத் சாரதியாகவும்,

    மகாமேருமலையை வில்லாகவும் ஆதிசேஷனை அந்த வில்லுக்கு நாணாகவும் திருமாலை அம்பாகவும் அமைத்துக் கொண்டு தேவாம்சம் பொருந்திய தேரை உருவாக்கினார்.

    அந்த தேரில் ஏறி அசுரர்கள் தங்கியிருந்த திரிபுரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

    அப்போது அவர் முழு முதற்கடவுளாகிய விநாயகரை வழிபடாமல் புறப்பட்டார்.

    தேவர்கள் தம்மை மதியாது சென்ற தேவர்களின் செயல்கண்டு கோபம் கொண்ட விநாயகப் பெருமான் தேரின் அச்சை முறித்து தடையை ஏற்படுத்தினார்.

    இதனால் மகேசனின் தேர் தொடர்ந்து செல்ல முடியாமல் புறப்பட்ட இடத்திலேயே நின்றது.

    வினைகளை வேரறுக்கும் விநாயகப் பெருமானின் செயல் இது என்பதை குறிப்பால் உணர்ந்த ஈசன், தன் தனயனை நினைத்து செல்லும் செயல் சிறப்படைய வேண்டும் என திருவுள்ளம் பற்றினான்.

    இதனால் அத்தேரின் அச்சு வழியில் முறிந்துவிட்டது. அப்படித் தேரின் அச்சு இற்ற இடமே 'அச்சிறுப்பாக்கம்' எனப் பெயர் பெற்றது.

    இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் ''முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா'' எனப் பாடுகிறார்.

    எவரும் ஒரு செயலைச் செய்யத் தொடங்குகையில் விநாயகரை வழிபட்டே தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கினால் அவர் செயலை விநாயகர் முன்னின்று முடித்து வைக்க வேண்டும்.

    தன்னை வணங்காமல் தொடங்கினால் இடையூறு செய்ய வேண்டும் என விதித்தவரே சிவ பெருமான்தான்.

    அவ்விதியை உலகிற்கு செயல்படுத்திக்காட்ட அவர் அமைத்துக் கொண்ட திருவிளையாடலே இது.

    சிவபெருமான் தேவம்சம் பொருந்திய தேரில் இருந்து இறங்கி ஸ்ரீவிநாயக பெரு மானை வணங்கி, விநாயக பெருமானுக்கு முக்கண் உடைய தேங்காய் பலியிட்டு (செதூர் தேங்காய் உடைத்து) மீண்டும் அத்தேரில் சென்று முப்பராதிகளை அழிக்க திருவதிகை என்ற தலத்துக்கு சென்றார்.

    யாரின் துணையும் இல்லாமலேயே சிவன் சிரித்தார். அவ்வளவிலேயே முப்புரங்களை எரித்தார்.

    விநாயகர் விக்னேசுவரர். தன்னை வழிபடுவோரின் விக்னங்களைப் போக்குவார்.

    தம்மை வழிபடாதவர்க்கு விக்கினங்களை ஆக்குவார்.

    ''தனதடி வழிபடும் அவர் இட கடி கணபதி'' எனத் திருஞானசம்பந்தர் போற்றுவார்.

    இவ்வரலாற்றை நினைவூட்டும் வகையில் கிழக்கு மாடவீதியில் ''அச்சுமுறி விநாயகர்'' திருக்கோவில் கொண்டு எழுந்தருளி உள்ளார்.

    தேர் அச்சு + இற்ற காரணத்தினால் அச்சிறுபாக்கம் என இவ்வூர் பெயர் பெற காரணம் ஆகும்.

    இவ்வாலயத்தில் அச்சுமுறி விநாயகரை வழிபட்டால் சலக கஷ்டங்களும், சகலவித தோஷங்களும், தொழில் தொடங்குவதற்கு தடங்களும், படிப்பிற்கும் 11, 54, 108, 1008 சதூர் தேங்காய் உடைத்து சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.

    விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.

    அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

    விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார்.

    தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப்போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன்.

    மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

    இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.

    அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.

    சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள்.

    அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

    அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி.

    கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.

    அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.

    ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.

    அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள்.

    அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

    விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான்.

    அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.

    அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது.

    அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.

    • பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி விநாயகரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    • மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

    மணை அல்லது பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி விநாயகரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    வக்ரதுண்ட மஹாகாய கோடி ஸூர்ய ஸமப்ரப !

    அவிக்நம் குரு மே தேவ ஸர் வகார்யேஷு ஸர்வதா!!

    உடைந்த கொம்பையுடைய (ஸ்ரீ விநாயகப் பெருமான், வியாசர் சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் என்பது புராணக் கூற்று) பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரிய பிரகாசமுடைய இறைவனே! என்னுடைய எல்லா காரியங்களிலும் எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள் புரியவேண்டும்.

    அடுத்து ஸ்ரீ விநாயகருக்கு உகந்த அருகம்புல்லால் கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சிப்பது குடும்ப நலனுக்கு உகந்தது..

    ஓம் கம் கணபதயே நமஹ !

    மஞ்சள், குங்குமம், சந்தனம், நீர் சேர்த்த அரிசியில் (அட்சதை) புஷ்பங்களும் (வெள்ளெருக்கு, செவ்வரளி, செம்பருத்தி, வெண் தாமரை) அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும்.

    மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

    • வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம்.
    • மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி அன்று காலையில்தான் களிமண் விநாயகரை வாங்க வேண்டும்.

    முதல் நாள் வாங்கி வைக்கக் கூடாது கிழக்குப் புறமாக தலைவாழை இலை (நுனி இலை) போட்டு அதன்மேல் நெல் பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனி இலை போட்டு பச்சரிசியை நிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்கவேண்டும்.

    வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம்.

    ஆனால், தெற்குப்பக்கம் பார்த்து வைப்பதோ, பூஜிப்பதோ கூடாது.

    மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.

    பிம்பத்துக்கு தொப்புளில் நாணயம் வைத்து மூட வேண்டும்.

    அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து, வெள்ளெருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சார்த்தி பூஜிப்பது சிறப்பானது.

    • திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.
    • கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.

    திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார்.

    இவர் தனது துதிக்கையை உயர்த்தி வாழ்த்துச் சொல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளார்.

    விநாயகர்-கல்விக்கடவுளாக

    மராட்டிய மாநிலத்தில் விநாயக சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.

    அங்கே ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அமைத்து அதில் பெரிய பெரிய விநாயகர் நிலை அமைத்து பூஜை செய்து பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம்.

    கல்விக்கடவுளாக கருதி வணங்குகின்றனர்.

    வாரத்தில் செவ்வாய்க்கிழமையே அவருக்கு உகந்த நாள்.

    கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும்.

    அவரது அம்சத்தில் முகம் விஷ்ணுரூபம்.

    இடபாகத்தில் சக்தி, வலது பாகத்தில் சூரியன், முக்கண்களில் சிவாபெருமான் உள்ளனர்.

    • ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர்.
    • இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை.

    "ஓம் வக்ரதுண்டாய ஹீம்"

    என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.

    முருகன் தாராசுரனை வென்றதும், வாமனன் மகாபலியை வென்றதும், பரசுராமர் அசுரர்களை வீழ்த்தியதும், மது கைடபர்களை திருமால் அழித்ததும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் தான்.

    ராஜராஜ சோழன் வணங்கிய கணபதி

    ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர்.

    இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை.

    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்னச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர்களை தான் அவர் வணங்கி வந்தார்.

    பரிவார ஆலயத்துப்பிள்ளையார் என்று பெயர் வழக்கத்தில் உள்ளது.

    • அவன் கண்களில் கோபம் தெறிக்க அதிலிருந்து ஒரு வீரன் வெளிவந்தான்.
    • அவன்தான் லாபன். அவனை விநாயகர் தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.

    ஒரு சமயம் விநாயகர் கமலாகரன் என்ற அசுரனை அழிக்க போர் செய்து கொண்டிருந்தபோது புத்திதேவி அங்கு வந்து சேர்ந்தாள்.

    அவன் கண்களில் கோபம் தெறிக்க அதிலிருந்து ஒரு வீரன் வெளிவந்தான்.

    அவன்தான் லாபன். அவனை விநாயகர் தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.

    18-அடி ஆழத்தில் கணேசர்

    விருத்தாச்சலத்தில் உள்ள விடுத்த கிரீஸ்வரர் கோவிலில் 18 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கியபடி விக்னேசர் அருள்பாலிக்கிறார்.

    இங்கே ஒரு புறம் பொன்னுக்கு மாற்றுரைத்த கணேசரும் உள்ளார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் சிவன் கோவிலில் சிரசில் மகுடம் தரித்த விநாயகி காட்சி அளிக்கிறாள்.
    • உத்திரபிரதேசத்தில் நதியான் என்ற ஊரில் பரியங்காசன் வடிவத்தில் விநாயகி உருவம் உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்து ஹர்ஷவர்தன் நகரில் சிவன் கோவிலில் சிரசில் மகுடம் தரித்த விநாயகி காட்சி அளிக்கிறாள்.

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மை சன்னதியில் புலிக்கால்களோடு, வீனை வாசித்தப்படி விநாயகி வடிவம் காணப்படுகிறது.

    உத்திரபிரதேசத்தில் நதியான் என்ற ஊரில் பரியங்காசன் வடிவத்தில் விநாயகி உருவம் உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன் மண்டப வாயிலில் முகம் யானை வடிவிலும், உடல் முழுவதும் புலிவடிவுடனும் விநாயகர் சக்தி வடிவினாய் விநாயகி காட்சி தருகிறாள்.

    கணேஸ்வரி கணேசாயினி, கஜானனி, ஜங்கினி, சக்தி கணபதி, விக்னேஸ்வரி, விநாயகி, மூஷிக், சுமுகி, ரேம்பினி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறாள் பெண் வடிவ விநாயகி.

    • விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள்.
    • ஒரிசா மாநிலத்தில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.

    விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள்.

    எத்தனை விநாயகிகள் பாருங்கள்.

    கோவைப்பகுதியில் உள்ள பவானி ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணையை வாசித்தப்படி விநாயகி உள்ளார்.

    ஒரிசா மாநிலத்திலுள்ள ஹராப்பூரில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.

    திருநெல்வேலி வாசுதேவநல்லூரில் இடுப்புக்குக் கீழ் யாளி வடிவம் கொண்ட விநாயகி

    கைகளில் வான், மமு, அதை கேடயம் வைத்தப்படி போர்க்கோலத்தில் காட்சி தருகிறாள்.

    • விநாயகப் பெருமான் தனது உடன் பிறப்பான முருகப்பெருமானுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்துள்ளார்.
    • இவரை வணங்கினால் சகோதர ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

    சென்னை தங்கசாலைத் தெருவில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில்

    விநாயகப் பெருமான் தனது உடன் பிறப்பான முருகப்பெருமானுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்துள்ளார்.

    அவருக்கு பின்புறம் முருகனது தோற்றம் உள்ளது.

    எழு நாகர்தலை உருவின் மேல் ஐந்து முருகங்களுடன் அமர்ந்த கோலத்தில் இவர் காணப்பட,

    பின்புறம் நின்ற கோலத்தில் தம்பி முருகன் இருக்கிறார்.

    இவரை வணங்கினால் சகோதர ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

    • சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர்.
    • இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.

    சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர்.

    தூலம், ராகு, கேது ஞானகாரகன் கேதுவைக் குறிக்கும்.

    இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை.

    சங்கடஹர சதுர்த்தி தோறும் இங்குள்ள நாகர் சன்னதி முன்பு சந்தான கணேச ஓமம் செய்யப்பட்டு புத்திரன் இல்லாதவர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அரங்கன் பள்ளி கொண்ட மாமலைக்கு எதிரில் உள்ள மணிகர்ணிகா புஷ்கரணியில் இந்த விசேஷ விக்னேசர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்கிறார்.

    ×