அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர், அழகுராஜாப்பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர், அழகுராஜாப்பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

திருப்பூர்:

அவினாசி அருகே மேற்குபதி அபிஷேகபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அபிஷேகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜாப்பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவில்களின் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடந்தது. முன்னதாக இந்த விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், 108 சங்க பூஜை, மகாவிஷ்ணு ஹோமம், யாக பூஜை வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் 5 கிராமபொதுமக்கள் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com