search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiv Lingam"

    • பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம்.
    • பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது.

    பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதால் நல்ல பலன் பெற முடியும். பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையான மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.

    பிரதோஷ தினத்தில் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அவற்றை பார்ப்போம்.


    பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது

    பிரதோஷ விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது. பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம் என்பதால் பிரதோஷ நாளில் பெண்கள் சிவலிங்கத்தை தொடக் கூடாது.

    மஞ்சள் கூடாது

    பிரதோச தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது. சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக்கூடாது. அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.

    இவற்றையெல்லாம் படைக்கக் கூடாது

    சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியனவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.

    பிரதோசத்தன்று இதை சாப்பிட கூடாது

    பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது. பெண்கள் பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும். நிச்சயமாக மது அருந்தக் கூடாது.

    • ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.
    • திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும்.

    தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு வருடம் தோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமாக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.

    ஆனால் அந்த பேரூழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டை ஸ்தலம். கைலாசம் கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி. சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களில் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது.

    மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிந்தும், இருந்த இந்தப் பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர். அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளாள் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவுள்ள ஒரு மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர்.

    அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தரிசனம் அளித்தது. அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும். இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

    இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

    • பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
    • 650 கிராம் எடை கொண்ட சிவலிங்கம் மீட்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை அடுத்த இரு ணாப்பட்டுகிராமத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில், சுற்றி திரிந்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக் கள் அவரை பிடித்து விசா ரணை செய்தனர். அப்போது அவர் போதையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித் தார். இதனால் திருடன் என சந்தேகம் அடைந்த அவரை சோதனை செய்து பார்த்த போது பாக்கெட்டில் சுமார் 650 கிராம் எடை கொண்ட சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது.

    வெள்ளியில் செய்யப்பட் டதை போன்று இருந்த லிங்கத் தின் மீது 5 தலை நாகம் இருந்தது. மேலும் மஞ்சள், குங்குமம் வைக் கப்பட்டிருந்தது. இத னால் லிங்கத்தை எங்கிருந்து கொண்டு வந்தாய் என்று மக்கள் கேட்டதற்கு, அந்த வாலிபர் மவுனமாகவே இருந்தார். உடன டியாக குரிசிலாபட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

    இதில் அவர் திருப்பத்தூர் சிவராஜ் பேட்டையை சேர்ந்த பிரதாப் (28) என்பது தெரியவந்தது. அவர் போதையில் இருந்த தால், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்க ளுடன் அனுப்பி வைக் கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×