search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை மரம்"

    • கத்தரி சீனிவாசராவ் இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார்.
    • அதிசயமாக ஒரு சில இடங்களில் 2 கிளைகளுடன் தென்னை மரங்களை காணலாம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், உன்ராயுடு பேட்டையை சேர்ந்தவர் கத்தரி சீனிவாசராவ். இவர் அதே பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார்.

    இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் மற்ற மரங்களைப் போல் வளர்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரத்தில் மற்றொரு கிளை உருவானது. நாளாக நாளாக மேலும் 4 கிளைகள் வந்தன. சாதாரணமாக தென்னை மரங்கள் ஒரே கிளையுடன் வளர்வது வழக்கம்.

    அதிசயமாக ஒரு சில இடங்களில் 2 கிளைகளுடன் தென்னை மரங்களை காணலாம். ஆனால் அதிசயமாக இந்த மரத்தில் 6 கிளைகள் ஏற்பட்டது.

    இதேபோல் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள குளக்கரையில் பனை மரம் ஒன்று 5 கிளைகளுடன் உள்ளது.

    ஒரே ஊரில் 6 கிளைகளுடன் தென்னை மரமும், 5 கிளைகளுடன் பனை மரமும் உள்ளது.

    இதனை அக்கம்பக்கம் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

    • குடியிருப்பு பகுதியில் உள்ள பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன
    • அந்த வழியாக சென்ற மாணவர்களை கடித்து வந்தன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், பெரிய மடப்புரம், கீழத்தெரு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன.

    இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் பொறையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

    • சமபந்திக்காக போடப்பட்டி ருந்த பந்தலுக்குள் ஊர்மக்கள் 15 பேர் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தனர்.
    • பந்தல் அருகே நின்ற சுமார் 40 அடி உயர பனை மரம் ஒன்று முறிந்து பந்தல் மீது விழுந்தது.

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி அருகே வெள்ளிமலை பேரூராட்சி வண்ணான் விளையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வரு கிறது. நேற்று மண்டல பூஜையின் 46-வது நாளாகும். இதனை முன்னிட்டு கோவில் அருகே சமபந்திக்காக போடப்பட்டி ருந்த பந்தலுக்குள் ஊர்மக்கள் 15 பேர் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தனர். மதியம் வேளையில் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது.

    அப்போது பந்தல் அருகே நின்ற சுமார் 40 அடி உயர பனை மரம் ஒன்று முறிந்து பந்தல் மீது விழுந்தது. பனை மரத்தின் மூட்டுப்பகுதி முறிந்து சரியும்போது லேசான சப்தம் கேட்டது. சப்தம் கேட்டு பந்தலுக்குள் காய்கறி நறுக்கிக் கொண்டி ருந்தவர்கள் பந்தலை விட்டு வெளியே ஓடினர். அதற்குள் பனைமரம் முறிந்து பந்தல் மீது விழுந்து விட்டது.

    இதில் தகரத்திலான பந்தல் கூரை சரிந்தது. தகர இடிபாடில் அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பெருமாள் (40), ஓய்வு பெற்ற அரசு விரைவு பேருந்து கழக மெக்கானிக் திரவியம் (61), தொழிலதிபர் ராஜ பிரபு (34) மற்றும் கூலித்தொழிலாளி தங்கப்பன் (74) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த 4 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    மேலும் இந்த சம்பவத்தில் பந்தலில் போடப்பட்டிருந்த 14 மேஜை, 52 நாற்காலிகள் மற்றும் 6 டியூப் லைட்டுகள் உடைந்து சேதமானது.

    தகவல் அறிந்ததும் வெள்ளிமலை பேரூராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், பேரூராட்சி ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மணவாளக்குறிச்சி போலீசார் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். வண்ணான்விளை கோவில் பந்தல் மீது பனைமரம் முறிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏழு குளங்கள் வாயிலாக 2 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனம் கிடைக்கிறது.
    • பனை மரங்களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே அடுக்குத்தொடராக அமைந்துள்ள ஏழு குளங்கள் வாயிலாக 2 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனமும், மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமும் கிடைக்கிறது. உடுமலை பகுதியிலுள்ள பழமையான பாசன திட்டங்களில் ஏழு குள பாசன திட்டமும் ஒன்றாகும்.இதில் 404 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரியகுளம் உள்ளிட்ட குளங்களில் நீர் மேலாண்மைக்காக முன்பே பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர்.

    அவ்வகையில் குளங்களின் கரைகள், மண் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க, பனைமரங்களை பராமரித்து வந்துள்ளனர்.இவ்வாறு ஏழு குளங்களிலும் 1,700க்கும் அதிகமான பனைமரங்கள் இருந்துள்ளன. பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது 700க்கும் குறைவான மரங்களே உள்ளன.பனை மரங்களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது. குப்பையை குவித்து மரங்களின் வேர் பாதிக்கும்படி தீ வைத்து எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான பனை மரங்கள் கருகி விட்டன.

    தற்போதுள்ள மரங்களில் நுங்கு அறுவடை செய்ய, பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டு 27,900 ரூபாய்க்கு பனை மரங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், தற்போதுள்ள 600 பனைமரங்களில் 100 மரங்களில் மட்டுமே காய்ப்பு திறன் உள்ளது. இம்மரங்களிலும், இரவு நேரங்களில் மர்மநபர்கள் நுங்கை வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்றனர்.பல்வேறு பலன்களை தரும் கற்பக தரு எனப்படும் பனைமரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும் குளங்களின் கரைகளில் பனை விதை நடவுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • பார்வதி தேவி மேல்மலைனூருக்கு வரும் போது மூன்று காவல் தெய்வங்களை உடன் வந்தன.
    • தண்ணீர் அல்லது கள்ளாவது கொஞ்சம் தாருங்கள் என்று சானர்களிடம் பார்வதி தேவி கேட்டாள்.

    சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் நிர்வத்தியாகும் பொருட்டு பார்வதி தேவி மேல்மலையனூருக்கு நடந்து தாழனூரை(தற்போது தாயனூர் என்று அழைக்கப்படுகிறது) வந்தடைந்தாள். இரவு பொழுது நெருங்கியது பார்வதி தேவி தாழனூரில் உள்ள ஒரு வட்ட பாறையில் இரவு பொழுதை கழித்தால். தாழனூரில் தங்கியதால் இன்று தங்கினால் தாயனூர் என்றும் அழைக்கின்றனர். மேலும் பார்வதி தேவி தங்கிய இடத்தில் பார்வதி தேவின் முத்து அங்கு விழுந்ததால் அங்கு முத்தாலம்மன் என பெயர் பெற்று முத்தாலம்மன் ஆலயம் அங்கு வழிபாட்டுக்கு உள்ளது.

    பார்வதி தேவி மேல்மலைனூருக்கு வரும் போது மூன்று காவல் தெய்வங்கள் உடன் வந்தன. அவர்கள் பாவடைராயன், மதுரைவீரன், காத்தவராயன் இவர்கள் பார்வதி தேவிக்கு காவலாக வந்தனர்.

    பார்வதி தேவி மலையனூருக்கு வரும்போது அழகான ஒரு பொன்னேரி அதில் பனந்தோப்பு பனமரத்தில் சானார்கள் கள் இறக்கிக் கொண்டிருந்தனர் அப்போது பார்வதி தேவியின் காவல் தெய்வங்காளான பாவடைராயன், மதுரைவீரன், காத்தவராயன், பார்வதி தேவிடம் தாகமாக இருப்பதாக கூறினர்.

    அதற்கு பார்வதி தேவி சரி வாருங்கள் சானர்கள் கள் இறக்கிகொண்டிருக்கிறார்கள் நான் சென்று உங்களுக்கு கள் வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு சானர்கள் அருகில் சென்றாள் பார்வதி தேவி....

    பார்வதி தேவி சானர்களிடம் என் குழந்தைகளுக்கு தாகமாக இருப்தாகவும் என் குழந்தைக்கு தண்ணீர் அல்லது கள்ளாவது கொஞ்சம் தாருங்கள் என்று சானர்களிடம் பார்வதி தேவி கேட்டாள்..

    கள்ளா கிடையாது.. பொன் பொருள் இருந்தால் கொடு கள் தருகிறோம் இல்லையெனில் நகரு என்று ஏளனம் செய்தனர் சாணர்கள் இதனால் கோபம் அடைந்த பார்வதி தேவி மேல்மலையனூர் ஏரியில் பனை மரம் எதுவும் இருக்ககூடாது என சாபம்மிட்டதால் இன்றும் ஏரியில் பனை மரங்கள் ஏதும் கிடையாது.

    • பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம் :

    பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன் தரக்கூடியது. நாளுக்கு நாள் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனை மரங்களை வெட்ட தடை விதித்துள்ளது. மிகவும் அத்தியாவசிய தேவை கருதி வெட்ட கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு அனுமதி பெற்ற பின்பு பனை மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிலையில் பல்லடம் அருகே கண்டியன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நீரோடையில் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது. அருகில் இருந்த காட்டுப் பகுதியில் சுமார் 15 பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உரிய அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • பனை மரம் பொதுவாக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனாலும் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது.
    • பனை ஓலை விசிறிகள் உடல் நலத்துக்கு சிறப்பானது என்று மருத்துவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.

    பனை மரத்தை நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். பனை மரத்தின் வேர் முதல் உச்சி வரை அனைத்து பாகங்களும் பயன்படும். இது தொடர்பாக நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் ஒரு பனை மரம் மனிதருக்கு 200-க்கும் மேற்பட்ட பலன்களை தருவதாக கண்டுபிடித்துள்ளனர்.

    பனை மரத்தில் இருந்து ஒருவருக்கு தேவையான அத்தனை அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதால் தான் அதை கற்பக விருட்சம் என்று நம் முன்னோர்கள் அழைத்தனர். பனம் பழம், நுங்கு, பதனி, பனங்கிழங்கு, பனை ஓலை, கற்கண்டு, கருப்பட்டி, உத்திரகட்டை, முகூர்த்தகால் கட்டை, பாளை என்று பனை மரம் தரும் பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    பனை மரம் பொதுவாக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனாலும் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது. ஒரு வலுவான பனை மரத்தை அடியோடு சாய்க்க வேண்டும் என்றால் ஒரு வாரம் புயல் வீசினால்தான் முடியும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    இப்படி எந்த அளவுக்கு பனை மரம் வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது பலன்களை தந்துகொண்டே இருக்கும். எவ்வளவு பெரிய வறட்சியையும் தாங்கும் பனை மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

    உலகில் 108 நாடுகளில் பனைமரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தான் பனை மரங்கள் அதிகம் இருக்கின்றன. அதிலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக பனை மரங்களை காண முடியும்.

    ஒரு காலத்தில் 50 கோடிக்கும் மேல் பனை மரங்கள் இருந்தன. தற்போது 5 கோடி பனை மரங்கள் கூட இல்லை.

    கோடை காலத்தில் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலை மூலம் செய்யப்படும் விசிறிகள் மிகுந்த வரவேற்பை பெறும். பனை ஓலை விசிறிகள் உடல் நலத்துக்கு சிறப்பானது என்று மருத்துவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.

    பனை ஓலை விசிறி மூலம் விசிறினால் சொக்க வைக்கும் சுகமான குளிர்ந்த காற்று கிடைக்கும். ஆதி காலத்தில் பனை ஓலை விசிறிகளை வைத்திருப்பதை அரசர்களும், பணக்காரர்களும் கவுரவமாக கருதினார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது அவர்கள் பனை ஓலை விசிறிகளை அதிகளவு பயன்படுத்தியது பல்வேறு வரலாற்று பதிவுகளில் உள்ளது.

    மின் விசிறிகள் புழக்கத்துக்கு வந்தபிறகு பனை ஓலை விசிறி பயன்பாடு 90 சதவீதம் குறைந்து போனது. என்றாலும், இன்றும் பனை ஓலை விசிறியை விரும்பி பயன்படுத்துபவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    தமிழகத்தில் திருத்தணி அருகே குறுமணி கிராமத்திலும், கடலூர் அருகே அண்ணவல்லி கிராமத்திலும் பனை ஓலை விசிறிகள் செய்வதை 5 தலைமுறையாக இன்றும் செய்து வருகிறார்கள். இத்தகைய கிராமத்தினர் மூலம் பனை ஓலை விசிறி நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை ஆகிறது.

    பனை ஓலை விசிறி தயாரிப்பவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4 மாதங்கள்தான் அதிகமான ஓலை விசிறி செய்யும் மாதங்களாக இருக்கும். அந்த வகையில் தற்போது சென்னைக்கு பனை ஓலை விசிறி மிக அதிக அளவில் வந்துவிட்டது. கோயம்பேடு, அம்பத்தூர், மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்களத்தூர், திருவொற்றியூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை விசிறி விற்பனை அமோகமாக நடக்கிறது.

    ஒரு பனை ஓலை விசிறி 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை ஆகிறது. வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்ட விசிறிகள் அதிக விலைக்கு விற்பனை ஆகின்றன.

    • தாமிரபரணி ஆற்றோரங்களில் பனை மர விதைகள் நடும் பணி நடைபெற்றது.
    • டாக்டர் கென்னடி பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தாமிரபரணி ஆற்றோரங்களில் பனை மர விதைகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தலைமை தாங்கினார். சேர்ந்தபூமங்கலம் ஊராட்சி மன்ற செயலர் ரூபஸ்டா முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் கென்னடி கலந்து கொண்டு பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    மதர் சமூக சேவை நிறுவன சட்ட ஆலோசகர் வக்கீல் ரமேஷ், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளரும் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல் மற்றும் சேர்ந்தபூமங்களம் ஊராட்சி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணித்தள பொறுப்பாளர் லட்சுமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் செய்தனர்.

    • பனையோலை பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
    • பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது.

    சென்னை:

    வேளாண்மை உற்பத்தி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் 10 லட்சம் பனை விதைகளை வினியோகம் செய்வதற்கும், பனையேறும் சிறந்த எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப்பதற்கும் 50 சதவிகித மானியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும், 50 சதவீத மானியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும், தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பு தொடர்பாக 250 பனை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், இப்பயிற்சியினை பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உபகரணங்கள் வினியோகிப்பதற்கும், பனையோலை பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினை கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொள்ளலாம். பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது.

    இக்குழுவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து தோட்டக்கலைத்துறையின் பேராசிரியர், வேளாண் பொறியியல் துறையின் பேராசிரியர், தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் அலுவலர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

    இத்தகைய கருவியினை கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவினம், கருவியின் செயல்திறன், இதற்கான விலையின் உண்மைத்தன்மை, எந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான நபர் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ளவிரும்பும் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகின்றனர்.
    • ஆய்வு பணியை மதர் சமூக சேவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் பாலன் தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 18 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மர விதைகளை தொடர்ந்து கடற்கரை, தீவு பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தன்னார்வத்துடன் பனை மர விதைகளை கடந்த 18 ஆண்டுகளாக விதைத்து வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகின்றனர். தற்போது வரை 69 லட்சத்து 93 ஆயிரத்து 493 பனை மர விதைகளை விதைத்துள்ளனர்.

    இந்நிலையில் விதைக்கப்பட்ட பனைமர விதைகள் எத்தகைய அளவிற்கு முளைத்துள்ளது என்பது பற்றி கள ஆய்வு செய்யும் பணி பேய்குளம் பகுதிகளில் நடைபெற்றது. கள ஆய்வு செய்யும் பணியை மதர் சமூக சேவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் பாலன் தொடங்கி வைத்தார்.

    மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவனம் மாநில தலைவருமான கென்னடி தலைமையில் குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனைத் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில செயலாளர் டேனியல் மோசஸ், துணைத்தலைவர் லிங்கராஜ், மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் பானுமதி உள்பட பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், உழவர் ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், இளைஞர் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆய்வுப்பணி பேய்குளம் பகுதிகளில் தொடங்கி பழனியப்பபுரம், மீரான் குளம், கருங்கடல், பனைக்குளம் ஆகிய பகுதிகளிலும் திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கந்தசாமிபுரம், கணேச புரம், ஆலந்தலை, குல சேகரபட்டினம், மணப்பாடு, கடற்கரை பகுதிக ளிலும், சாத்தான்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியதாழை, புத்தன் தருவை, செட்டி விளை, படுக்கப்பத்து, சங்கரன் குடியிருப்பு, ஞானியார் குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை, தட்டார்மடம், முதலூர், உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர் காட்சி, தண்டபத்து, செட்டியாபத்து, லட்சுமிபுரம், மெஞ்ஞான புரம், சத்யா நகர், கல்விளை பகுதிகளிலும், கருங்குளம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளிலும், மேலும் கடற்கரை, ஆற்றங்கரை, வாய்க்கால்கரை, குளத்தங்கரை, சாலை ஓரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், தனியார் கல்லூரி வளாகங்களிலும் கள ஆய்வு பணி நடைபெற்றது.

    ×