search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்"

    • தவறான செய்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.
    • டெல்லி வரை சென்று மத்திய விவசாய அமைச்சரை சந்தித்து கள் இறக்க அனுமதி கிடைக்க போராடுவோம்.

    பல்லடம்:

    கள் இறக்கும் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் கலந்து கொள்வோம். இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பல்லடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கள் இறக்குவது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறிய கருத்து தவறாக பரவியுள்ளது.அவர் அப்படி கூறவில்லை .இருந்த போதிலும் அந்த தவறான செய்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.

    மேலும் கள் இறக்க அனுமதி வேண்டும் என்று போராடி வருகிற விவசாய சங்க தலைவர்கள் மனதும் வேதனைப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். விவசாய சங்கங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட தவறான செய்தி காரணமாக அமைந்து விட்டபடியால், நடந்துவிட்ட தவறுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் படுகின்ற கஷ்டத்தை கருத்தில் கொண்டு டெல்லி வரை சென்று மத்திய விவசாய அமைச்சரை சந்தித்து கள் இறக்க அனுமதி கிடைக்க போராடுவோம்.

    தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணமான பாமாயிலை தடை செய்ய வேண்டும், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். தமிழக முழுவதும் உள்ள தேங்காய்களை மத்திய அரசு நேபிட் மூலமாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியது.

    மேலும் தமிழக அரசின் உணவுதுறை அமைச்சரை சந்தித்து ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வலியுறுத்தியுள்ளோம். அவரும் கொள்கை அளவில் அதனை ஏற்று பரிட்சார்த்தமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    வெளி சந்தையில் தேங்காய் எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 200க்கு விற்கப்படுகிறது ரேசன் கடையில் என்ன விலைக்கு விநியோகிப்பீர்கள் என்று அவரை கேட்ட பொழுது, அரை லிட்டர் ரூ.25 க்கு விநியோகம் செய்யப்படும். மேற்கொண்டு அதிகப்படியான தொகையை அரசு மானியமாக ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தென்னை விவசாயின் கஷ்டம் நீக்கப்பட்டு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் உழவர் உழைப்பாளர் கட்சியின் நோக்கம்.

    இதில் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேறுபாட்ைட உண்டாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.மேலும் 2024 ஜனவரி 21ஆம் தேதி தமிழக முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று கள் இயக்க தலைவர் நல்லசாமி அறிவித்திருக்கிறார். இந்தப் போராட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவித்து அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக அரசு பெண்களின் வாக்கு வங்கியை கவர்வதற்காக கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 அறிவித்தது.தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் வங்கிகளுக்கு சென்று பார்த்த போது பாதி பேருக்கு பதிவும் வரவில்லை, பணமும் வரவில்லை. இதனால் வங்கிகள் முன்பும், இ. சேவை மையங்கள் முன்பும் பெண்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

    அரசு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து தேர்தல் அறிவிப்பில் கூறியதை போல் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், ஊடக பிரிவு செயலாளர் காடம்பாடி ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கள் போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.
    • கள்ளுக்கான தடையை நீக்கினால் சுமார் 60 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

    பல்லடம்:

    தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பல்லடத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்க தடை தொடர்ந்து இருந்து வருகின்றது. கள் தடையை நீக்கக் கோரி கடந்த 17 ஆண்டுகளாக கள் இயக்கம் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.

    கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளோ, மதுவோ அல்ல. அது ஒரு உணவு. அதை இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு. கள் போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இதுவரை யாரும் முன் வரவில்லை. கள்ளுக்கான தடையை நீக்கினால் சுமார் 60 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

    தமிழ்நாட்டில் கள்ளுகடை திறக்கச் சொல்லவில்லை. எங்களுக்கு கள்ளுக்கான தடையும் வேண்டாம் கள்ளுகடையும் வேண்டாம். இதனை வலியுறுத்தி வரும் ஜனவரி 21ந்தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்.காவிரி பிரச்சனையை பொறுத்த வரையில் கர்நாடகா மீண்டும், மீண்டும் தவறு செய்கின்றது. தமிழகத்தின் பங்கீட்டு தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு மரத்தின் கள்ளை 48 நாள்கள் பருகி வந்தால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
    • ஜனவரி 21 ந் தேதிமுதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

    அவிநாசி:

    தமிழகம் முழுவதும் ஜனவரி 21 ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி அவிநாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு மரத்தின் கள்ளை 48 நாள்கள் பருகி வந்தால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்டது. ஏலம், கடைகள் என்று இருந்தால், ஒரு மரத்துக்கு கள் கிடைக்காது. ஆகவே கள்ளு கடை வேண்டாம். கள்ளுக்கான தடை நீக்க வேண்டும். இதை முன்வைத்து, அரசியல் அமைப்புச் சட்டப்படி, ஜனவரி 21 ந் தேதிமுதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

    காவிரி நீா் பிரச்னையில், நாள்தோறும் நீா் பங்கீடு என்ற அம்சம் தீா்ப்பில் இடம் பெற்றிருந்தால் தீா்வு எளிதாக இருந்திருக்கும். மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்றாா்.

    • சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன.

    கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனையில் ஏராளமான உடலுக்கு பயன் அளிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.

    ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மென்மையானது என்பதால் தாய்ப்பாலுக்கு இணையான பானம் என்று அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்களும் உள்ளன. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி, நுங்கு ஆகியவை கிடைக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    மேலும் கள் இயக்கம் சார்பில் கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி வழங்கப்படும் என்றும் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்குவதற்கான ஆதரவு குரல்கள் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கள் இறக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கள் இயக்க ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    'கள்' தமிழ் மண்ணின் அடையாளம். சங்க காலத்தில் அரசர்களும், புலவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆண்களும், பெண்களும் உடன் அமர்ந்து உண்ட உணவின் ஒரு பகுதி கள். அதியமான், அவ்வையார் ஆகியோரும் கள் குடித்ததற்கான சான்று புறநானூற்று பாடலில் உள்ளது. அதியமான் இறந்த பின்பு அவரது நடுக்கல்லுக்கு கள் படையல் வைத்து வழிபட்டுள்ளனர். இதன் மூலம் கள் உணவுப் பொருளாகவும், படையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    பாரி வள்ளல் பரம்பு மலை மீது புலவர்களுக்கு அதிக அளவில் கள் கொடுத்துள்ளார். அந்த கள் பரம்பு மலை பாறைகள் மீது வழிந்தோடியதாக கூறப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி கள் இறக்குவதும், பருகுவதும் உணவு தேடும் உரிமையாகும். 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

    இதில் 47-வது பிரிவு மது விலக்கு மற்றும் மது கொள்கையில் கள்ளுக்கு தடை விதிக்கக் கூடாது, அரு மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் 01.01.1987-ம் ஆண்டு கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரே கள் ஆதரவாளர்தான். அவர் எழுதிய புத்தகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட நோயிலிருந்து தப்பிக்க கள் பருகினேன். இதனால் அந்த நோயிலிருந்து மீண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 18 ஆண்டுகளாக கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி நாங்கள் போராடி வருகிறோம். கள் உணவின் ஒரு பகுதி. கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி தருவதாக கூறினோம். ஆனால் யாரும் எங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை.

    இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக ஆங்கிலேயர் காலத்து புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கள் தடை காரணமாக தற்போது பனை மரங்கள் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்து விட்டது. 45 கோடி பனை மரங்கள் செங்கல் சூளைக்கும் சுண்ணாம்பு காலவாய்க்கும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு விட்டது.

    தென்னை மரத்தை 3 முதல் 4 ஆண்டுகளில் வளர்த்து விடலாம். ஆனால் பனை மரத்தை நினைத்த உடன் உருவாக்க முடியாது. பனை மரம் வளர 13 முதல் 14 ஆண்டுகள் ஆகும். கள்ளில் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ளன. கள் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பாலில் உள்ள லோரிக் ஆக்சிட் கள்ளில் அதிக அளவில் உள்ளன.

    கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் 10 லட்சம் பனை தொழிலாளர்கள் குடும்பங்களும், 50 லட்சம் விவசாய குடும்பங்களும் பயன் அடைவார்கள். மேலும் 8 கோடி மக்களுக்கும் சத்தான இயற்கையான மென்பானம் கிடைக்கும். பனை மரத்தில் கள் இறக்குவதற்கு மின்சாரம் தேவையில்லை. சுற்றுச்சூழலும் பாதிக்காது. படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து பன்னாட்டு விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவாய் ஈட்டலாம்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன. கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினாலே தமிழகம் தலை நிமிரும். முதன்மை மாநிலமாக மாறும்.

    மேலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கினால் 60 லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.

    கள் இறக்குவதற்கான தடையை அரசு நீக்கினால் வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘கள்’ விற்பனை செய்யப்படுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
    • 5 லிட்டா் ‘கள்ளை’ பறிமுதல் செய்ததுடன், மரங்களில் கட்டப்பட்டிருந்த மண் கலயங்களையும் அழித்தனா்.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே உள்ள சடையபாளையம் பகுதியில் 'கள்' விற்பனை செய்யப்படுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனா்.

    அப்போது அங்கு கள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது.அங்கிருந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவா் சடையபாளையம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி (வயது57) என்பதும், கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து ஈஸ்வரமூா்த்தியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 5 லிட்டா் 'கள்ளை' பறிமுதல் செய்ததுடன், மரங்களில் கட்டப்பட்டிருந்த கள் இறக்கப்பயன்படும் மண் கலயங்களையும் அழித்தனா். 

    • இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் போலி மதுபான கடைகளையும் அடைத்து கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் தென்மண்டல தலைவர் கார்த்திசன், மாநில துணைத்தலைவர் உடையார் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பாட்டில்களில் கள் கொண்டு வந்து குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அவர்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
    • சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது.

    கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    கண்காட்சியில் 25 க்கும் மேற்படட் அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு, கேழ்வரகு, ராகி, திணை உள்ளிட்ட பயிர் வகைகள், நவதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடப்பெற்று இருந்தன.

    இந்த கருத்தரங்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விஞ்ஞானிகள் இளம் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் பேங்கேற்க உள்ளன.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதானியங்களை கண்டுபிடிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. அதே போல் சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் வேளாண்மைத்துறை சார்பில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிர்செய்யப்பட்டுள்ளது. 2.7 மெட்ரிக் டன் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம்.

    வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய சிறுதானிய ரகங்கள் உருவாக்கப்பட உள்ளது.

    சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழக அரசு 82 கோடி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களது நிலதத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு தரமான விதைகளையும் கொடுக்கும்.

    பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் புதிய பயிற்சி மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். இதற்காக இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் முனைவர் சி.சமயமூர்த்தி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்னை விவசாயிகளுக்கு பயனளிக்கும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.
    • உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஏழைகளின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மதுப்பழக்க த்திற்கு ஒட்டுமொத்த சமுதா யமே அடிமையாகியுள்ளது. முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏன் பள்ளி மாணவ, மாணவியர் கூட மதுவிற்கு அடிமையாகிய மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஏகபோக மது விற்பனையால் சுமார் ரூ.50 விற்க வேண்டிய மதுபானப்பாட்டில் ரூ.150 க்கு விற்கப்படுகிறது. இதனால் ஏழை கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள், போன்ற உடல் உழைப்பாளிகள், அதிக விலை கொடுத்து மதுபானம் வாங்க முடியாமல், போதை க்காக கள்ளச்சாராயம், விஷ சாராயம் போன்றவற்றை நாடி செல்கின்றனர்.

    இதனால் மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலி போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. மேலும் மதுபானங்கள் குடிப்பதால் உடல்நல கேடு மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்க உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஏழைகளின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    இதனால் நஷ்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். மக்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம், சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கள் அருந்துவதின் மூலம் உடலுக்கு தீங்கு இல்லை என்பது ஏற்கனவே நிரூபிக்கப்ப ட்டுள்ளது. உலகில் வேறு எங்கும் கள்ளிற்கு தடை இல்லை, மற்றதற்கெல்லாம் முன்னோடி அரசு என்று சொல்கின்றவர்கள் இதற்கும் முன்னோடியாக இருக்கலாமே.

    எனவே தென்னை விவசா யிகளுக்கு பயனளிக்கும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது மாநில செயலாளர் சின்னக்காளி பாளையம் ஈஸ்வரன்,மாநில பொருளாளர் பாலசுப்பி ரமணி, ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கள் விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 பேரிடம் இருந்து மொத்தம் 5 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் மற்றும் நாதேகவுண்டம்பாளையம் பகுதியில் கள் விற்பனை செய்வதாக காமநாயக்க ன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் நேற்று போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் வி.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மகன் கங்கை அமரன் (வயது 44 ) என்பவரிடம் இருந்து 2 லிட்டர் கள் பறிமுதல் செய்ய ப்பட்டது. அது போல் நாதே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் பழனிசாமி (58 ), ராஜாமணி என்பவரது மகன் கார்த்திகேயன் (43) ஆகிய 2 பேரிடம் இருந்து மொத்தம் 5 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.மேலும் காட்டூரை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் சங்கர் (35) என்பவரிடம் இருந்து 3 லிட்டர் கள் என மொத்தம் 10 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தமிழகத்தில் கள் இறக்கி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
    • ஒருவர் கள் இறக்கி விற்பனை செய்வதாக தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கள் இறக்கி விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை மேலவஸ்தாசாவடி பகுதியில் ஒருவர் கள் இறக்கி விற்பனை செய்வதாக தமிழ் பல்கலை–கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தஞ்சை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்

    (வயது 38) என்பதும், கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதேபோல் வெவ்வேறு இடங்களில் கள் விற்பனை செய்த துலுக்கம்பட்டியை சேர்ந்த குணசேகரன் (36), ராகவன் (55) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×