search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், கள் இறக்கி விற்ற 3 பேர் கைது
    X

    தஞ்சையில், கள் இறக்கி விற்ற 3 பேர் கைது

    • தமிழகத்தில் கள் இறக்கி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
    • ஒருவர் கள் இறக்கி விற்பனை செய்வதாக தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கள் இறக்கி விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை மேலவஸ்தாசாவடி பகுதியில் ஒருவர் கள் இறக்கி விற்பனை செய்வதாக தமிழ் பல்கலை–கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தஞ்சை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்

    (வயது 38) என்பதும், கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதேபோல் வெவ்வேறு இடங்களில் கள் விற்பனை செய்த துலுக்கம்பட்டியை சேர்ந்த குணசேகரன் (36), ராகவன் (55) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×