search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே கள் விற்பனை செய்த 4 பேர் கைது -10 லிட்டர் பறிமுதல்
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே கள் விற்பனை செய்த 4 பேர் கைது -10 லிட்டர் பறிமுதல்

    • கள் விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 பேரிடம் இருந்து மொத்தம் 5 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் மற்றும் நாதேகவுண்டம்பாளையம் பகுதியில் கள் விற்பனை செய்வதாக காமநாயக்க ன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் நேற்று போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் வி.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மகன் கங்கை அமரன் (வயது 44 ) என்பவரிடம் இருந்து 2 லிட்டர் கள் பறிமுதல் செய்ய ப்பட்டது. அது போல் நாதே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் பழனிசாமி (58 ), ராஜாமணி என்பவரது மகன் கார்த்திகேயன் (43) ஆகிய 2 பேரிடம் இருந்து மொத்தம் 5 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.மேலும் காட்டூரை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் சங்கர் (35) என்பவரிடம் இருந்து 3 லிட்டர் கள் என மொத்தம் 10 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×