என் மலர்
தலைப்புச்செய்திகள்
- திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல.
- திருவள்ளுவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர்.
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர். திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரேசில் அதிபர் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
- டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபர் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.
புதுடெல்லி:
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பிரேசில் அதிபரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் பாரம்பரிய வரவேற்பை லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஏற்றுக்கொண்டார்.
- டேங்கர் லாரி கவிழ்ந்ததில் திரவ வாயு வெளியேறி புகை மண்டலமாக மாறியது.
- பின்னர் திடீரென தீப்பெடித்து எரிந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர்.
தென் அமெரிக்கா நாடான சிலியின் தலைநகர் சான்டியாகோவில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் திரவு வாயு டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் புகை சாலையெங்கும் பரவியது. பல மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. திடீரென புகை மண்டலம் தீயாக பரவியது. இதில் பல கார்கள் சிக்கிக் கொண்டன.
4 பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் காயம் அடைதுள்ளது. இந்த விபத்து டேங்கர் லாரி டிரைவரும் உயிரழந்தார். 150 முதல் 200 மீட்டர் வரை பரவிய புகையால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமாகின.
- சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
- செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காரை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த சம்பவத்தில் உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பேட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டாக்டர்கள் அரியானாவின் பரிதாபாத்தில் செயல்படும் அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
செங்கோட்டை அருகே உள்ள பகுதிகள், சாந்தினி சவுக்கின் சில பகுதிகள் மற்றும் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், பாரம்பரிய கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்பு அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
சாந்தினி சவுக்கில் உள்ள ஒரு கோவிலும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருப்பதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
இதை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர தீவிரவாதிகள் இலக்காக நிர்ணயித்த இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து போலீசாருக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பீதி அடைய வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 6-ந்தேதி மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 160 பேர் காயம் அடைந்தார்கள். இதற்கு பழி வாங்கவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தலாம் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- அதிகாலை வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர்.
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜகமண்டி தாலுகா பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மணீஷ் பாண்டே (23), லட்சுமிசிராமதி (27), ரேகா பூகே மற்றும் 2 வயது குழந்தை ஹலகி பாண்டே ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள்.
இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் ஜகமண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
- இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், 'அரசன்' படத்தில் இருந்து தான் விலகுவதாக வெளியான தகவலுக்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,
அப்படி ஒண்ணும் கிடையாது. எனக்கே தெரியாது இப்படியான செய்திகள். வதந்திகள் மிக வேகமாக பரவுகின்றன. யாரு பரப்புறதுன்னு தெரியல. இதையெல்லாம் நம்பாதீர்கள் என்றார்.
- பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது.
- இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி உடை தரித்த வள்ளுவர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.
- அறிவும், முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ள எவரும் இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள்.
- நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தில்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று போராட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவையும், உலகையும் அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வது எவ்வாறு? என்பது குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்படும் மாநாட்டில், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்வது போன்ற செயலில் ஈடுபட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறது என்பதை உலகுக்கு காட்டியிருக்கிறது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த எதிர்ப்பு நாகரிகமாக முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்களும் பங்கேற்ற இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒரு நிகழ்வில் காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். அறிவும், முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ள எவரும் இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள்.
உலகின் போற்றத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தில்லி செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கில் இப்படி ஒரு நாகரீகமற்ற செயலை அரங்கேற்றியதன் மூலம் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவப்பெயர் தேடித் தந்திருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுப்பதுடன், இதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது.
- தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது.
திருச்சி:
திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்ச் 11-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பது தொடர் பான இறுதி முடிவை அறிவிப்போம்.
200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க.வினர் கூறி வருவதாக சொல்கிறீர்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்பதை அக்கட்சி தலைவர்கள் மாற்றி மாற்றி ஆளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அரசு கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணி வலுவிழந்து உள்ளது.
அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓ.பி.எஸ். மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக் கொண்டு நிதி கொடுக்கவில்லை தமிழக அரசு கூறுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரம் கோடி பேரிடருக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு கொண்டு தான் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கொடுக்கும் நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், மார்ச் 11-ந் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கான இடங்களை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன், கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார்.
- திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
- அந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய புகை மண்டலம் எழும்பியது.
சிலி நாட்டு தலைநகர் சாண்டியாகோவில் ரென்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் லாரி வெடித்து சிதறியது. இதனால் நெடுஞ்சாலையில் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய புகை மண்டலம் எழும்பியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 4 பேர் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. சில இடிபாடுகள் அங்குள்ள கட்டிடங்கள் மீது விழுந்தன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
- அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
- டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.
நெல்லை:
ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.
எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.
திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.
வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.
நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.
வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.
அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார்.
- பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- வேறு ஒரு அதிகாரம் செயல்படுத்தப்படும் வரை இந்த புதிய வரி அமலில் இருக்கும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார். சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இதில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் டிரம்ப் அமல்படுத்திய வரி விதிப்பு செல்லாது என்று தெரிவித்தனர். 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க பாராளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை.
எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என்று அறிவித்தனர். 3 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான் என்று தெரிவித்தனா்.
பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பின்னடைவை சமாளிக்க உலகளாவிய 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். அரசியலமைப்பு சட்டம் 122-ன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியலமைப்பு சட்டம் 232 மற்றும் 301 ஆகிய பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட வரிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தற்போது கூடுதலாக பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத உலகளாவிய கட்டணத்தை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன். இந்த சட்ட பிரிவு அனைத்து நாடுகளுக்கும் 150 நாட்கள் வரை 15 சதவீதம் வரி விதிக்க அனுமதிக்கிறது. அமெரிக்க அரசு விதித்து உள்ள வரிகள் தொடரும். எதுவும் ரத்தாகாது.
அமெரிக்காவுக்கு எதிராக நியாயமற்ற முறையில் வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். வரி விதிப்புகளை செயல்படுத்த மாற்று வழிகள் உள்ளன என்றார்.
இதற்கிடையே கூடுதல் 10 சதவீத வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
புதிய வரி உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு, டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த வரி உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த உத்தரவில், சில குறிப்பிட்ட கனிமங்கள், இயற்கை வளங்கள் மற்றும் உரங்கள், ஆரஞ்சு மற்றும் மாட்டிறைச்சி போன்ற சில வேளாண் பொருட்கள், மருந்துகள் சில மின்னணு பொருட்கள் மற்றும் சில வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பரஸ்பர வரிக்கு பதிலாக அரசியலமைப்பு சட்டம் 122 சட்டத்தை தற்காலிகமாக டிரம்ப் பயன்படுத்தி உள்ளார். இந்த சட்ட பிரிவு மூலம் விதிக்கப்படும் வரி 150 நாட்கள் வரைதான் அமலில் இருக்கும். அதன் பின்னரும் வரி தொடர வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிரம்ப் மற்ற விதிகளை பயன்படுத்தியும் சில வரிகளை விதித்தார். இதில் வர்த்தக விரிவாக்க சட்டம் 1962 பிரிவு 232-யை பயன்படுத்தி பல்வேறு வரிகளை விதித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள். இந்த தற்காலிக வரி விதிப்பு வருகிற 24-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வேறு ஒரு அதிகாரம் செயல்படுத்தப்படும் வரை இந்த புதிய வரி அமலில் இருக்கும். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் இதற்கு கட்டுப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டிரம்ப் தற்போது அறிவித்துள்ள உலகளாவிய 10 சதவீத வரி விதிப்பு அறிவிப்பால் இந்தியா மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 10 சதவீத பரஸ்பர வரி மட்டுமே விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அது தற்காலிகமானதுதான். வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவு செய்யப்பட்ட வரி விகிதங்களை செயல்படுத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் 10 சதவீத வரி தற்காலிகமானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. இதன்மூலம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே விதித்த வரிகளை அமல்படுத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.






