என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.
உடல் ஆரோக்கியத்துக்கு 3 வேளையும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதில் குறிப்பாக இரவு உணவை மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
முன்னதாகவே சாப்பிடும் பழக்கம் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. எனவே இந்த நேரத்திற்குள் உங்களது இரவு உணவை முடித்துவிட வேண்டியது அவசியம்.
இரவில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கோதுமை ரவை கிச்சடி அல்லது இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கோதுமை ரவை கிச்சடி, சப்பாத்தி, சிறுதானியங்களால் செய்யப்பட்ட அடை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
40 வயதைக் கடந்தவர்கள் சிறுதானியங்களை முழுமையாகப் பயன்படுத்தி பொங்கல், உப்புமா அல்லது பிரியாணி வடிவில் சமைத்து உண்பது சிறந்தது. ஆரம்பத்தில் இதுபோன்ற உணவு பழக்கத்தை கொண்டு வரும்போது பசி எடுக்கலாம்.
அவ்வாறு இரவு 10 மணிக்கு மேல் பசி எடுத்தால், கனமான உணவுகளைத் தவிர்த்துவிட்டுப் பழங்களைச் சாப்பிடலாம். குறிப்பாக கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.
இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் டாக்டர்கள்.
நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான ஆனந்த் நாக், சர்ச்சை காரணமாக புதிய காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அப்பகுதியில் ஒரு சந்தேக மரணம், அதனைத் தொடர்ந்து கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு கொலை – இரண்டு சம்பவங்களிலும் ஒரே கார் தொடர்பு இருப்பது விசாரணையை தீவிரப்படுத்துகிறது.
இந்த வழியில் ஒரு பாலியல் தொழிலாளி முக்கிய இணைப்பாக மாறுகிறார். ஆனால், காவல் நிலையத்திலேயே அவர் கொலை செய்யப்படுவதால் வழக்கு மேலும் சிக்கலாகிறது. குற்றவியல் நிருபரான ஜனனியின் உதவியுடன், தொடர் கொலைகளின் பின்னணியையும் கொலையாளியையும் ஆனந்த் நாக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
போலீஸ் வேடத்தில் ஆனந்த் நாக் தோற்றத்தில் பொருந்தினாலும், நடிப்பில் கம்பீரம் முழுமையாக வெளிப்படவில்லை. விசாரணையின் தீவிரத்தை விட இடைக்கிடை நகைச்சுவைத் தொனி மேலோங்குவது, கதையின் எடையை சற்றே குறைக்கிறது. நாயகி ஜனனி நிருபர் கதாபாத்திரம் முக்கியமாக அமையும் போல தோன்றினாலும், திரைக்கதையில் தொடர்ந்து வலுவாக பயன்படுத்தப்படவில்லை. குறைந்த பரப்பில் அவர் அளவான நடிப்பை வழங்குகிறார்.
பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த இடத்தில் இயல்பாக தோன்றினாலும், கதையின் ஓட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.
இயக்கம்
தொடர் கொலை – விசாரணை என்ற அடிப்படையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். "எப்படி? எதற்காக? யார்?" என்ற மூன்று கேள்விகளை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் எஸ். அருண் பிரசாதின் முயற்சி கவனிக்கத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் பரபரப்பை உருவாக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
கொலையாளியின் அடையாளம் வெளிப்படும் பின்னர், சமூக பின்னணியுடன் நகரும் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸுக்கு முந்தைய பகுதிகள் சுவாரஸ்யத்தை உயர்த்துகின்றன. அந்த கட்டத்தில் படம் எதிர்பார்த்த விறுவிறுப்பை தருகிறது. மொத்தத்தில், நல்ல கருவுடன் தொடங்கும் 'அறிவான்', நடிப்பு மற்றும் திரைக்கதை சீர்மையில் கூடுதல் கவனம் பெற்றிருந்தால் மேலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். இறுதிக்கட்ட சஸ்பென்ஸ் மற்றும் பின்னணி கருத்து படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் காட்சியமைப்புகள் தரமாக இருந்தாலும், நினைவில் நிற்கும் தனித்துவம் குறைவு.
இசை
கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசை கதைக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது.
ரேட்டிங்-2/5
- சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அவ்வாறாக அடையாறு மண்டலத்தில் சாஸ்திரி நகரில் மாநகராட்சியின் மூலதன நிதியில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களால் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து, உடற்பயிற்சி மேற்கொண்டார்.
முன்னதாக, இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், மண்டல அலுவலர் செந்தில் குமரன், கண்காணிப்பு பொறியாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகியுள்ளது. இது காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.
இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
23ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே நேற்று முதல் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.
- இந்தியா வளரும்போது, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கவலைப்படுகிறார்கள்.
ஏ.ஐ. மாநாடு நடைபெற்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மேலாடையின்றி போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 தலைவர்களை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
* காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி.
* நாட்டை அவமானப்படுத்த காங்கிரஸ் இளைஞர்களை பயன்படுத்துகிறது. இஐது விட பெரிய அவமானம் இருக்க முடியுமா?.
* இளைஞர்கள் பிரிவு மூலம் ஏ.ஐ. மாநாட்டில் போராட்டம் நடத்தியம் காங்கிரஸ் நாட்டிற்கு எதிராக மிகப்பெரிய பாவம் செய்துள்ளது.
* ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தியா வளரும்போது, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கவலைப்படுகிறார்கள்.
* தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதை எப்போது நிறுத்துவீர்கள்?.
இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
- திடீரென்று, லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்குகின்றன
- சிறுமி லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் நின்று கதவுகளை மூட விடாமல் தடுக்கிறாள்
லிஃப்டில் சிக்கி கொள்ளவிருந்த இரண்டு குழந்தைகளை சிறுமி ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், "2 குழந்தைகள் லிஃப்டுக்குள் நிற்கின்றனர். ஒரு சிறுமி வெளியே நின்று அவர்களுடன் பேசுகிறார். அப்போது திடீரென்று, லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்குகின்றன. அப்போது அந்த சிறுமி லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் நின்று கதவுகளை மூட விடாமல் தடுக்கிறாள். இதை கவனித்த மற்றவர்கள் உடனடியாக இவர்களுக்கு உதவி செய்து குழந்தைகளை மீட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் துணிச்சலாக செயல்ப்ட்ட சிறுமியை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் இந்த வீடியோ லிஃப்ட் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இணையத்தில் எழுப்பியுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் நாயகன் வி.ஜே.பப்பு. அதே அலுவலகத்தில் பணிபுரியும் நாயகி அனுபமா மீது ஒருதலையாக வி.ஜே.பப்பு காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அனுபமா வேறு நிறுவனத்திற்கு மாற்றம் ஆகிவிடுகிறார். காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்த பப்புவின் வாழ்க்கை அப்படியே நின்று போகிறது.
இந்நிலையில் திருமணத்திற்காக பெண் பார்க்க பெற்றோருடன் செல்லும் வி.ஜே. பப்பு, மணமகளாக அனுபமா நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பப்புவை பார்த்தவுடன் அனுபமா திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் அனுபமா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, 6 மாதம் சேர்ந்து வாழலாம், ஒத்துவரவில்லை என்றால் பிரிந்துவிடலாம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.
இறுதியில் பப்புவும், அனுபமாவும் சேர்ந்து வாழ்ந்தார்களா? திருமண வாழ்க்கை என்ன ஆனது? 6 மாதம் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வி.ஜே.பப்பு, முதல் படத்திலேயே ஒரு கனமான கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து இருக்கிறார். விரும்பிய பெண்ணுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து, உள்ளுக்குள் உருகும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா மாறுபட்ட மனநிலையுடன் இருக்கும் பெண்ணாக சிறப்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் 'பொம்மையாக' மாறும் அவரது மென்மையான வெளிப்பாடு, கதைக்கு புதிய உயிர் ஊட்டுகிறது. மற்ற நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த்ராஜ். காதல் என்பது வெறும் 'ஐ லவ் யூ' அல்ல... பொறுமை, புரிதல், தியாகம் என்பதையும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். திரைக்கதையில் சுவாரசியம் கூட்டியிருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
பாலாஜி சேகர் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
இசை
பாசில் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
ரேட்டிங்-2.5/5
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.
- அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி உள்ளார். தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சேர்த்து அம்பத்தூரில் இன்று மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாதவரத்தில் நாளை (22-ந்தேதி) மாலை 4 மணியளவில் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணி அளவில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசுகிறார்.
அதன்பிறகு வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
25-ந்தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து மதுரவாயல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மாலை 4.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
- தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை.
- வர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.
இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் அரசு விதித்த கூடுதல் இறக்குதி வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் இந்தியா - அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் சிக்கலை சந்தித்துள்ளது.
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் அடங்கிய அமர்வு, வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபரால் மீற முடியாது.
1974ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் கீழ் அவசர சூழலை பயன்படுத்தி இந்த வரிகளை விதிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று தெரிவித்தது.
மேலும், வரி விதிப்பானது தேசிய பாதுகாப்பு தொடர்பான அவசர நடவடிக்கை என்ற டிரம்ப் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்தார்.
டிரம்ப் பேசியதாவது, நாட்டிற்கு நன்மையான முடிவை எடுக்க துணிச்சல் இல்லாத இந்த நீதிபதிகள் ஒரு அவமானம். அவர்கள் தங்களின் குடும்பத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர்.
தீர்ப்பளித்த நீதிபதிகள் பெயரளிவில் தான் குடியரசுவாதிகள், ஆனால் தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரின் வளர்ப்பு நாய்களாக மாறிவிட்டனர். அவர்களுக்கு தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை.
நான் கோடிக்கணக்கான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன். ஆனால் இந்த நீதிபதிகள் முட்டாள்கள். அவர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.
அதேநேரம் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் எனது கொள்கைக்கு ஆதரவாக நின்ற நீதிபதிகள் தாமஸ், அலிட்டோ மற்றும் கவனோ ஆகியோரை வலிமையும் துணிச்சலும் மிக்கவர்கள்" என்று தெரிவித்தார்.
தீர்ப்பளித்த நீதிபதிகள் பலர் முன்னர் டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டிருந்ததும் அவர்கள் தற்போது டிரம்ப்புக்கு எதிராக தீர்பளித்துள்ளதே டிரம்ப் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும், தான் விதித்த வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று டிரம்ப் பிடிவாதமாகக் கூறியுள்ளார்.
அதேநேரம் அனைத்து நாடுகளுக்கும் தாற்காலிகளமாக 10 சதவீத கூடுதல் வரியையும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- இங்கிலாந்தில் The Hundred தொடர் நடத்தப்படுகிறது.
- இதில் பங்கேற்கும் அணிகளை இந்திய உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் 100 பந்துகள் (The Hundred) கொண்ட கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் மன்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ், எம்.ஐ. லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளராக இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர்பாக மனக்கசப்பு இருப்பதால், The Hundred தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பதை தவிர்க்கலாம் என்ற வகையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக இங்கிலாந்து டி20 அணி கேப்டன் ஹாரி ப்ரூக் கூறியதாவது:-
எங்களது முழுக் கவனம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றிதான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஏலம் தொடர்பானது எங்களுடைய வேலை அல்ல.
எனினும், நான் என்ன சொல்கிறேன் என்றால், கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் நாடாக இருந்து வருகிறது. 50 முதல் 60 வீரர்கள விளையாடுவதற்கான ஏலத்தில் பங்கேற்ற விண்ணப்பிப்பார்கள். அவர்களை The Hundred தொடரில் பார்க்க முடியவில்லை என்றால் அது அவமானம்.
இவ்வாறு ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
ஹாரி ப்ரூக்கை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2008-ம ஆண்டு 26/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை.
2023-ல் இருந்து தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA20 தொடரிலும் அவர்கள் இடம் பெறவில்லை. இதில் 6 அணிகளின் உரிமையாளர்களும் இந்திய உரிமையாளர்களுடன் தொடர்புடையவர்கள்.
- திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல.
- திருவள்ளுவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர்.
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர். திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரேசில் அதிபர் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
- டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபர் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.
புதுடெல்லி:
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பிரேசில் அதிபரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் பாரம்பரிய வரவேற்பை லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஏற்றுக்கொண்டார்.






