என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மணமகள் செல்வி வேலைக்காக ஜப்பான் சென்றபோது ஷூன்யா யாஷிமாக் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.
- சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.
சென்னையில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பான் மாப்பிள்ளைக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் நடைபெற்ற சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது.
மணமகள் செல்வி வேலைக்காக ஜப்பான் சென்றபோது ஷூன்யா யாஷிமாக் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் மதங்களைக் கடந்து சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.
- வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கவனித்துள்ளோம்.
- சில நடவடிக்கை அமெரிக்கா நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வரி விதிப்பை அமல்படுத்தினார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதித்தார். இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று, அமெரிக்கா உச்சநீதிமன்றம் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு செல்லாது. அவ்வாறு உத்தரவிட அவருக்கு அதிகாரமில்லை என அதிரடி தீர்ப்பை வழங்கியது.
இதனால் 150 நாட்களுக்கு தற்காலிகமாக 10 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இது 24-ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில் மோடி சமரசம் செய்து விட்டதாக சாடியுள்ளது.
இந்த நிலையில் இந்திய வர்த்தக அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் "வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கவனித்துள்ளோம். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சில நடவடிக்கை அமெரிக்கா நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து விசயங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
- விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
- நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் தற்போது காதலித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் தற்போது காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.
அண்மைய காலமாக விஷால் ஜிம்மில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- படத்தின் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை.
தன்னுடன் படிக்கும் கல்லூரி தோழியான வடமாநில பெண் சிம்ரன் அத்வானியை ஆதவ் கிருஷ்ணா காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கின்றனர். சிம்ரனின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காசியில் இருக்கும் தனது அம்மாவிடம் ஆதவை அறிமுகம் செய்ய அங்கு அழைத்துச் செல்கிறார்.
ஆனால், செல்லும் வழியிலேயே சிம்ரன் காணாமல்போய் விடுகிறார். இது வீட்டிற்கு தெரியவர சிம்ரனின் தந்தை ஆதவை சந்தேகப்படுகிறார். மிரட்டுகிறார். இறுதியில், ஹீரோயினுக்கு என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா ? என்பது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஹீரோவின் கதாப்பாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோயினை காதல் செய்கிறார். போலீசிடம் அடி வாங்குகிறார். ஹீரோயிசம் இல்லை. அழகாக வந்து செல்லும் ஹீரோயினின் கதாப்பாத்திரம் முற்பகுதியில் காட்சிகள் இருந்தாலும் பிற்பகுதியில் பெரிதாக வேலை இல்லை. ஹீரோயின் அம்மாக வரும் வினோதினி சில சீன்கள் ஓரளவு ரசிக்க முடிகிறது.
இயக்கம்
காதல்- கடத்தல்- அடிதடி- முடிவு என்கிற அடிப்படையில் படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மகாலட்சுமி முருகன். படத்தின் முதல் பாதி நல்ல காதல் கதை உள்ள படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை தருகிறது. ஒரு நல்ல காதல் கதையை கையில் எடுத்து கொண்டு, முடிக்க தெரியாமல் முடித்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல்
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார் காசியை வண்ணமயமாக காண்பித்திருக்கிறார்.
இசை
படத்தின் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை.
ரேட்டிங்-2/5
- அயர்ன் அச்சு படிந்தது போன்ற டிசைனில் வெள்ளை சட்டையை வடிவமைத்துள்ளது.
- ப்ராண்ட் என்றாலும் தற்போது தவறுகளை எல்லாம் ஃபேஷன் என கூறுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்
பிரபல ஆடம்பர ஃபேஷன் ப்ராண்டான VETEMENTS நிறுவனம் அயர்ன் அச்சு படிந்தது போன்ற டிசைனில் வெள்ளை சட்டையை வடிவமைத்து அதற்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் விலையை நிர்ணயம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தவறுதலாக நாம் அயர்ன் பாக்ஸ் கொண்டு சட்டையில் சூடு வைத்து கொண்டால் என்ன டிசைன் கிடைக்குமோ அதை வைத்து வெள்ளை சட்டையை வடிவமைத்து அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ப்ராண்ட் என்றாலும் தற்போது தவறுகளை எல்லாம் ஃபேஷன் என கூறுவதாக இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- புர்ஹானின் வடகிழக்கில் 11 கி.மீ. தூரத்திலும், 14 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
- இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உணரப்பட்டுள்ளது.
வடக்கு பாகிஸ்தானில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4. ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
புர்ஹானின் வடகிழக்கில் 11 கி.மீ. தூரத்திலும், 14 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உணரப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மாநிலத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியத்தில் 101 கி.மீ. ஆழத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
2005-ம் ஆண்டு நடைபெற்ற மோசமான நிலநடுக்கத்தால் 74 பேர் மக்கள் பலியாகினர்.
பலுசிஸ்தானில் கடந்த 13-ந்தேதி 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏறு்பட்டது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. அதேநாள் மற்றொரு இடத்திலும் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இமயமலையில் வடக்கு பாகிஸ்தான் அமைந்திருப்பதால் அங்கு பூகம்பங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.
- ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
- மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்-க்கு தொடர்பு இருப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
மகாராஷ்டிராவின் பிவாண்டியின் ஆர்எஸ்எஸ் அலுலகப் பொறுப்பாளராக இருந்த ராஜேஷ் குந்தே என்பவர் தொடர்ந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்க உத்தரவாத கடிதம் கொடுத்திருந்தார்.
அவர் காலமான நிலையில், வேறு ஒருவர் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை காரணமாக, ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் நீதிமன்றத்தில் இன்று உத்தரவாத கடிதத்தை அளித்தார். நீதிமன்றம் அதை ஏற்று ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
முன்னதாக இந்த விஷயத்தில் உண்மையை முன்வைப்பதாவும், மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஒரு கொலை குற்றவாளி பாஜக தலைவராக உள்ளார் என அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேற்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
- ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இந்திய உணவு வகைகளில் உப்பு மிக முக்கியமான ஒன்றாகும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற நிலையில் நாம் அதனை அளவுக்கு மீறி சில சமயங்களில் எடுக்கிறோம். அதிகமாக உப்பு சாப்பிடுவது எலும்புகளை பலவீனப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உடலில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. உணவில் அதிக உப்பு உட்கொள்வது உங்கள் சிறுநீரகங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
சிறுநீரகங்கள் சோடியத்தை வடிகட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உப்பு அதிகமாக சேர்த்தால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு உடலில் உள்ள நீர் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் முகத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றும்.
அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் பக்கோடா, சமோசா, சாட் போன்ற வறுத்த உணவுகள் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது.
- கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும்.
நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. பல வகையான நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நார் பொதுவாக கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
இந்த 2 வகைகளிலும் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் இருந்து செரிக்கப்படாமல் உங்கள் பெருங்குடலுக்குச் சென்று வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். அவை பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சில நோய்களைத் தடுக்க உதவுகின்றன. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எடையை கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்றன.
கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது. கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும். நார்ச்சத்து உணவுகள் குடலில் நீரை இழுத்து செரிமானத்தை எளிதாக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும், குடல் சுத்தமாக இருக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து அளவைக் குறைக்கிறது. இதனால் இதய நோய்களின் ஆபத்து குறைகிறது. சில ஆய்வுகள் கூறியபடி நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன என்கின்றனர் டாக்டர்கள்.
- டிராகன் படம் வெளியாகி 1 ஆண்டு ஆகிறது.
- கயாடு லோஹர், இளம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.
'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய கயாடு லோஹர், இளம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.
அதர்வா ஜோடியாக 'இதயம் முரளி, ஜி.வி.பிரகாஷ் உடன் 'இம்மார்டல்' படங்களில் நடிக்கும் கயாடு லோஹர், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பின்போது எடுத்த BTS புகைப்படங்களை நடிகை கயாடு லோஹர் வெளியிட்டுள்ளார்.
டிராகன் படம் வெளியாகி 1 ஆண்டு ஆகிறது. இங்கு தான் என் பயணம் தொடங்கியது. உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்ததற்கும், என்னை மிகவும் அன்பாக வரவேற்றதற்கும் நன்றி. பல்லவி எப்போதும் சிறப்பு வாய்ந்தவள்" என்று பதிவிட்டுள்ளார்.
- காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.
- மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்.
டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள குடிசை வாசிகள் மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை பகுதி, டெல்லியின் மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறது.
எனவே அங்கு அமைந்துள்ள பாய் ராம் முகாம், மஸ்ஜித் முகாம், டி.ஐ.டி முகாம் ஆகியவற்றில் உள்ள குடிசைவாசிகள் காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் அவழங்கியுள்ளது.
மார்ச் 6-க்குள் காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.
வெளியேற்றப்படும் குடும்பங்களுக்குப் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ், வடமேற்கு டெல்லியில் உள்ள சாவ்தா கெவ்ரா பகுதியில் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
டெல்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், தகுதியுள்ள 717 குடும்பங்களுக்கு ஏற்கனவே பிளாட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக 2025 அக்டோபரில் நோட்டீஸ் அளிக்கப்பட்டபோது, இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது.
சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றி வெளியேற்றத்தை மேற்கொள்ளுமாறு நவம்பர் 13, 2025 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மாற்று இடமாக வழங்கியுள்ள 'சாவ்தா கெவ்ரா' பகுதி, தற்போதைய ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது.
இதனால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
- நீதிமன்றமே, தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை.
- விசாரணையின் குளறுபடி, தலைவர்கள் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தந்திரி கண்டவரரு ராஜீவரு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.
தந்திரி கைது தொடர்பான விவகாரத்தில் கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றம், தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை என தெரிவித்தது.
இந்த விவகாரத்தை பாஜக தற்போது கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:-
முன்னாள் தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தொடர்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப தந்திரி கைது செய்யப்பட்டார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீதிமன்றமே, தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
சுரேந்திரன் அல்லது தற்போது தேவசம் மந்திரியாக இருக்கும் வி.என். வாசவன் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை.
விசாரணையின் குளறுபடி, தலைவர்கள் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இந்த விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் சட்டசபையில் "தந்திரி கைதுக்கு பின்னால் உள்ள காரணம் மற்றும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இவர் செய்த குற்றம் என்ன? என்பதை சிறப்பு விசாரணைக் குழு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.






