என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "moviereview"

    இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பின்னணி இசை மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார்.

    நாயகன் ஹரிஷ் ஓரி குடும்ப சூழ்நிலை காரணமாக மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார்.

    இந்நிலையில், அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, நிலத்தை அபகரித்து, மக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகிறார் ஊர் தலைவர். இதை அறிந்த ஹரிஷ் ஓரி மற்றும் அவரது மனைவி அபிராமி போஸ் இருவரும் ஊர் தலைவர் திட்டத்தை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.

    இறுதியில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் இருவரது முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். மலை கிராம மக்கள் பலர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

    இயக்கம்

    அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார். மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வடிவங்களில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் வகையில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பின்னணி இசை மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ராம் தேவ், சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.

    ரேட்டிங்- 3/5

    • படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
    • அனுபவ நடிப்பால் மனதில் பதிந்து இருக்கிறார் லால்.

    கதைக்களம்

    நாயகன் தர்ஷன் பயிற்சி எஸ்.ஐ.ஆக புறநகர் காவல் நிலையமான திருமழிசை ஸ்டேஷனில் பணிக்கு சேர்கிறார். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்க 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனது கைத்துப்பாக்கியை போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் லாலிடம் கொடுத்து வைக்கிறார். அந்த கைத்துப்பாக்கி ஸ்டேஷனில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போகிறது.

    அதே சமயம் தாதாவான சுஜித்சங்கரிடம் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யும்படி பல கோடிகள் கொடுக்கப்படுகிறது. அந்தப் பணத்தை அவருடைய ஆட்கள் தொலைத்துவிடுகிறார்கள். துப்பாக்கியைத் தேடி தர்ஷனின் குழுவும் பணத்தைத் தேடி தாதா குழுவும் செல்லும் போது ஒரு புள்ளியில் சந்தித்து மோதிக்கொள்கிறார்கள்.

    இறுதியில் காணாமல் போன துப்பாக்கி தர்ஷனுக்கு கிடைத்ததா? தாதாவுக்கு பணம் கிடைத்ததா? தர்ஷனும், தாதா சுஜித்தும் எதற்காக மோதிக் கொண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படம் முழுவதும் மிடுக்கான தோற்றத்தால் கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லனாக நடித்து இருக்கும் சுஜித், மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அனுபவ நடிப்பால் மனதில் பதிந்து இருக்கிறார் லால். குறிப்பாக வில்லன் குடோனில் இவரை அடைத்து வைக்கும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.

    கதாநாயகியாக நடித்து இருக்கும் பாடினி குமார், போலீசாக வரும் ரம்யா ராமகிருஷ்ணன், அருள் டி சங்கர், முனீஸ் காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் கணபதி. தேர்தல் சமயத்தில் பணம் பட்டுவாடா, துப்பாக்கி காணாமல் போவதை திரைக்கதையாக வைத்து இயக்கி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முனீஸ் காந்த் காமெடி டிராக்கை கொஞ்சம் சுவாரசியமாக கொடுத்து இருக்கலாம்.

    இசை

    இசையமைப்பாளர் விகாஸ் படிஷாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை இவருடைய இசை தாங்கி பிடித்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    தயாரிப்பு

    Upbeat Pictures தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது

    ரேட்டிங் - 3/5

    • இன்றைய ஜெனரேஷன் எப்படி எல்லாம் காதல், நட்பு என்ற பெயரில் லூட்டி அடிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

    கதைக்களம்

    ராஜுவும், மைக்கேலும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ராஜுக்கு பெண்கள் என்றாலே பயம். நாயகி பவ்யாவை கல்லூரியில் பார்த்து பேசியதும் ராஜுக்கு பயம் பறந்து போய் விடுகிறது. இதிலிருந்து பவ்யாவும் ராஜுவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். பவ்யாவை ஒருதலையாக காதலிக்கும் மைக்கேல், ராஜுவிடம் சண்டை போட்டு பிரிகிறார். இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு புறம் ராஜுவின் தாய் சரண்யா, பக்கத்துவீட்டு பெண் ஆதியாவை ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆதியாவோ விஜே பப்புவை காதலித்து வருகிறார்.

    இறுதியில் ராஜுவின் காதல் என்ன ஆனது? சண்டை போட்டு சென்ற நண்பர் மைக்கேல் மீண்டும் ராஜுவுடன் சேர்ந்தாரா? பக்கத்துவீட்டு பெண் ஆதியாவை திருமணம் செய்யும் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராஜு, ஒரு சில இடங்களில் எதார்த்தமாகவும் ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காகவும் நடித்திருக்கிறார். நண்பனுக்காக ஏங்குவது, காதலியை நினைத்து உருகுவது, வாழ்க்கையில் வெற்றி பெறப் போராடுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நண்பனாக நடித்திருக்கும் மைக்கேல், நண்பனா காதலியா என்று தவிக்கும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். வி ஜே பப்பு ஆங்காங்கே வந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் பவ்யா, தான் யாரை காதலிக்க வேண்டும், தனக்கு ஏற்றவர் யார் என்பதை தீர்மானிக்கும் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துறுதுறு பெண்ணாக நடித்த மனதில் பதிந்து இருக்கிறார் ஆதியா. சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நட்புக்காக வரும் விக்ராந்தின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

    இயக்கம்

    இன்றைய ஜெனரேஷன் எப்படி எல்லாம் காதல், நட்பு என்ற பெயரில் லூட்டி அடிக்கிறார்கள் என்பதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத். உண்மை காதல், உண்மை நட்பு, காதல் திருமணம், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம், காதலித்து பிளஸ் பெற்றோர் நிச்சயம் செய்து நடத்தும் திருமணம் என்று பல்வேறு விஷயங்களை சொல்லி இருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் நடக்கும் காதல் என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளும்படி திரைக்கதை அமைக்காதது வருத்தம் அளிக்கிறது. நிறைய லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.

    இசை

    நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஒரு சில இடங்களில் சம்பந்தமில்லாமல் ஒலிக்கிறது.

    ஒளிப்பதிவு

    பாபு குமாரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.

    தயாரிப்பு

    Rain Of arrows Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    மொத்தத்தில் பன் பட்டார் ஜாம் டேஸ்ட் இல்லை

    • எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார்.
    • கர்வமிகு எழுத்தாளர் வாசன் கதாபாத்திரத்தில் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கதைக்களம்

    எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தனது 50 ஆவது கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலில் இருந்து விடுபட நினைக்கிறார். இரண்டாவது தொடரில், மருத்துவராக நினைக்கும் பள்ளி மாணவியான ராஜிக்கு நீட் தேர்வு பிரச்சனையில் சிக்குகிறார். மூன்றாவது தொடரில், செல்வியெனும் வேலைக்காரப் பெண்ணின் மீது இரண்டாயிரம் ரூபாய் திருடியதாகப் பழி விழுகிறது.

    கற்பனையில் எழுதிய கதாபாத்திரங்கள் உயிர் பெற்று வந்து, எழுத்தாளர் வாசனை சந்திக்கின்றன. எங்களை இப்படி தவிக்க விடலாமா... கதையை மாற்றுங்க என எழுத்தாளரை மிரட்டுகின்றன. அவர் மறுக்கிறார். உண்மைக்கும், பேண்டசிக்கு நடுவில் வாசன் தவிக்கிறார்.

    இறுதியில் வாசன், அவர் எழுதி வந்த தொடர் கதைகளை மாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாபாத்திரங்களை படைப்பதால் தன்னைக் கடவுளென நினைத்துக் கொள்ளும் கர்வமிகு எழுத்தாளர் வாசன் கதாபாத்திரத்தில் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆணவமாக பேசுவது, பயப்படுவது, கோபம் என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    எடிட்டர் டெல்லி கணேஷ், ரவுடி சாய் தீனா, சிற்பி மு.ராமசாமி, வாசனின் மனைவி காயத்ரி, வேலைக்கார பெண் ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    சமூகத்தில் பெரும்பாலானவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பொறுப்புடன் தங்கள் எழுத்துகளை அளிக்கவேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா. படம் பார்ப்பவர்களை சீட்டில் இருந்து எழுந்துக்க விடாமல் காட்சிகளால் கட்டி போட்டு இருக்கிறார். அதிக வசன காட்சிகள் இருந்தாலும் அதை ரசிக்கும் படியும், புரியும் படியும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன்-இன் ஒளிப்பதிவு படத்தின் திரையோட்டத்திற்கு பெரிதும் பலமாக அமைந்துள்ளது.

    இசை

    இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் ஆகியோரின் உழைப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    தயாரிப்பு

    Rahul Movie Makers & Abhimanyu கிரேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.                                                 

    ×