என் மலர்
நீங்கள் தேடியது "மாயக்கூத்து"
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே கதையின் மையக் கரு..மிக வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், கதைக்கு ஏற்ற நடிப்பும், அழுத்தமும் கொண்ட புது முகங்கள் இந்த படத்தின் வலுவாக விளங்குகின்றன. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார்..
நாகராஜன் கண்ணன், வாசன் எனும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். அவருடைய உணர்ச்சிபூர்வமான இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது.
சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி போன்றோரின் நடிப்பும், திரைப்படத்தின் உணர்வுப் பாசறையை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே சித்திரவதை இல்லாமல், கதைக்கு தேவையான அந்தஸ்தில் இசையை கொடுத்திருக்கிறார். ஐந்து பாடல்களும் புதுமை, இனிமை மற்றும் உள்ளார்ந்த பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
மாயக்கூத்து என்பது எதையும் நம்பாமல், தங்கள் கலையை மட்டுமே நம்பிக்கையுடன் பயணித்த ஒரு குழுவின் கனவு. மிகச் சிறிய பட்ஜெட்டிலும், மிகப்பெரிய உள்ளடக்கம் கொண்ட இந்த படம், தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் உண்மை முயற்சியின் உதாரணம். இது ஒரு வெறும் திரைப்படம் அல்ல, இது ஒவ்வொரு கலைஞனுக்கும் நம்பிக்கை தரும் ஒரு கலாச்சாரச் சின்னம்.
இது போன்ற சிறந்த படைப்புகளை மக்கள் மட்டும்தான் வாழ வைக்க முடியும். மாயக்கூத்து போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்கினால் தான், புதிய படைப்பாளிகளும், நல்ல சினிமாக்களும் வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இப்படம் இன்று முதல் பிரைம் வீடியோ மற்றும் நாளை டெண்ட் கொட்டா ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
- எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார்.
- கர்வமிகு எழுத்தாளர் வாசன் கதாபாத்திரத்தில் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதைக்களம்
எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தனது 50 ஆவது கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலில் இருந்து விடுபட நினைக்கிறார். இரண்டாவது தொடரில், மருத்துவராக நினைக்கும் பள்ளி மாணவியான ராஜிக்கு நீட் தேர்வு பிரச்சனையில் சிக்குகிறார். மூன்றாவது தொடரில், செல்வியெனும் வேலைக்காரப் பெண்ணின் மீது இரண்டாயிரம் ரூபாய் திருடியதாகப் பழி விழுகிறது.
கற்பனையில் எழுதிய கதாபாத்திரங்கள் உயிர் பெற்று வந்து, எழுத்தாளர் வாசனை சந்திக்கின்றன. எங்களை இப்படி தவிக்க விடலாமா... கதையை மாற்றுங்க என எழுத்தாளரை மிரட்டுகின்றன. அவர் மறுக்கிறார். உண்மைக்கும், பேண்டசிக்கு நடுவில் வாசன் தவிக்கிறார்.
இறுதியில் வாசன், அவர் எழுதி வந்த தொடர் கதைகளை மாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாபாத்திரங்களை படைப்பதால் தன்னைக் கடவுளென நினைத்துக் கொள்ளும் கர்வமிகு எழுத்தாளர் வாசன் கதாபாத்திரத்தில் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆணவமாக பேசுவது, பயப்படுவது, கோபம் என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எடிட்டர் டெல்லி கணேஷ், ரவுடி சாய் தீனா, சிற்பி மு.ராமசாமி, வாசனின் மனைவி காயத்ரி, வேலைக்கார பெண் ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.
இயக்கம்
சமூகத்தில் பெரும்பாலானவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பொறுப்புடன் தங்கள் எழுத்துகளை அளிக்கவேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா. படம் பார்ப்பவர்களை சீட்டில் இருந்து எழுந்துக்க விடாமல் காட்சிகளால் கட்டி போட்டு இருக்கிறார். அதிக வசன காட்சிகள் இருந்தாலும் அதை ரசிக்கும் படியும், புரியும் படியும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன்-இன் ஒளிப்பதிவு படத்தின் திரையோட்டத்திற்கு பெரிதும் பலமாக அமைந்துள்ளது.
இசை
இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் ஆகியோரின் உழைப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
தயாரிப்பு
Rahul Movie Makers & Abhimanyu கிரேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.






