வடக்கு பாகிஸ்தானில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

புர்ஹானின் வடகிழக்கில் 11 கி.மீ. தூரத்திலும், 14 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உணரப்பட்டுள்ளது.
வடக்கு பாகிஸ்தானில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Published on

வடக்கு பாகிஸ்தானில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4. ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

புர்ஹானின் வடகிழக்கில் 11 கி.மீ. தூரத்திலும், 14 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உணரப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மாநிலத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியத்தில் 101 கி.மீ. ஆழத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

2005-ம் ஆண்டு நடைபெற்ற மோசமான நிலநடுக்கத்தால் 74 பேர் மக்கள் பலியாகினர்.

பலுசிஸ்தானில் கடந்த 13-ந்தேதி 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏறு்பட்டது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. அதேநாள் மற்றொரு இடத்திலும் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இமயமலையில் வடக்கு பாகிஸ்தான் அமைந்திருப்பதால் அங்கு பூகம்பங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com