என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஒன்பது குழந்தைகளின் தந்தையான 59 வயதான காஸ்ட், முன்பு இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
    • லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக்கு இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.

    தென் அமெரிக்க நாடான சிலியில் வலதுசாரி வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

    தீவிர வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சியின் ஜோஸ் அன்டோனியோ காஸ்டிலோ கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீனெட் ஜாராவை தோற்கடித்து 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

    புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, வடக்கு எல்லையை மூடுவது, குற்ற விகிதங்களைக் குறைப்பது மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற வாக்குறுதிகளுடன் காஸ்ட் பிரச்சாரம் செய்தார்.

    ஒன்பது குழந்தைகளின் தந்தையான 59 வயதான காஸ்ட், முன்பு இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்ற நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தென்மேற்கு அமெரிக்காவின் நிலையான நாடுகளில் ஒன்றாக இருந்த சிலி, கோவிட்-க்குப் பிறகு பொருளாதார சரிவை கண்டது.

    அர்ஜென்டினா, பொலிவியா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் ஈக்வடார் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக்கு இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.   

    • விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர்
    • இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.

    இந்த ஆண்டு ஏப்ரலில் 26 பேர் கொல்லப்பட்ட காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக  மே மாதம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.

    இதற்கு பதிலடியா இந்திய ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவியது.

    இந்த டிரோன்களை இந்திய ராணுவம் திறம்பட சுட்டு வீழ்த்தியது. தற்போது, அவற்றில் ஒன்றை டெல்லியில் ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி காட்சிப்படுத்தியுள்ளார்.

    துருக்கியில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் டிரோன்களைப் நடுவானில் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் அதில் ஒரு டிரோனை துண்டுகளிலிருந்து மீண்டும் உருவாக்கியது.

    இன்று நவம்பர் 15 விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது.

    பஞ்சாபில் உள்ள ஜலந்தரை குறிவைத்து லாகூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த வகை டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.

    மே 10 அன்று விமானப் படையால் 2000 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.  

    • ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
    • இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தனர்.

    இந்நிலையில் இன்றுடன் அவர்களின் பயணம் முடிவடைந்து அவர்கள் புறப்பட்டனர்.

    3 நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார்.

    அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.

    அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.

    இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

    மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

    மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.

    இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றார். மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

    மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

    நிகழ்வில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய மெஸ்ஸி, "நன்றி டெல்லி! விரைவில் சந்திப்போம்" என்று கூறியபோது அரங்கில் இருந்தவர்களிடமிருந்து பெரும் கரவொலி எழுந்தது.

    மெஸ்ஸி பேசியதாவது "இந்த நாட்களில் இந்தியாவில் நீங்கள் எங்களுக்குக் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி.

    இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தது எங்களுக்கு உண்மையிலேயே ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது.

    இது தீவிரமானதாகவும் மிகக் குறுகியதாகவும் இருந்தபோதிலும், இந்த அன்பைப் பெற்றது அற்புதமாக இருந்தது.

    இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும், ஆனால் அதை நேரடியாக அனுபவித்தது நம்பமுடியாததாக இருந்தது."

    இந்த நாட்களில் நீங்கள் எங்களுக்காகச் செய்த அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது. முற்றிலும் வியக்கத்தக்கது.

    எனவே, இந்த அன்புக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் நிச்சயமாக ஒரு நாள் திரும்புவோம்.

    ஒருவேளை ஒரு போட்டியில் விளையாடுவதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திற்காகவோ.ஆனால் நாங்கள் நிச்சயமாகத் திரும்புவோம். நன்றி, நன்றி." என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே பனிமூட்டத்தால் மெஸ்ஸியின் விமானம் மும்பையில் இருந்து வர தாமதமானதாலும், பிரதமர் மோடி ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் கிளம்பியதாலும் அவர்கள் இருவரின் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
    • போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

    அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் தங்களின் மூன்று நாள் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டனர்.

    கொல்கத்தா, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த சுற்றுப்பயணத்தில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி வீரர்களும் அவருடன் வந்திருந்தனர்.

    இன்று, மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

    மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

    இதற்கிடையே இன்று டெல்லியில் மெஸ்ஸி பிரதமர் மோடியை சந்தித்து பேசும் நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டுருந்தது. பிரதமரை சந்திக்க மெஸ்ஸிக்கு 21 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்படது.

    கடும் பனிமூட்டம் காரணமாக மும்பையில் இருந்து டெல்லி வந்த மெஸ்ஸின் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமானது.

    அதே நேரத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஓமன், எத்தியோப்பியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

    மெஸ்ஸி விமானம் தாமதமானதாலும், பிரதமரின் வெளிநாட்டு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்ததாலும் பிரதமர் மோடி மெஸ்ஸி சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

    • மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
    • முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியாவை சந்தித்தார்.

    அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குழுவினரின் மூன்று நாள் இந்திய சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவடைந்தது. 

    கொல்கத்தா, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த சுற்றுப்பயணத்தில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி வீரர்களும் லூயிஸ் சுவாரெஸ் மற்றும் அர்ஜென்டினா ரோட்ரிகோ டி பால் உள்ளிட்ட புகழ்பெற்ற வீரர்களும் அவருடன் வந்திருந்தனர்.

    இன்று, மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், மெஸ்ஸி குழந்தைகளுடன் கலந்துரையாடி, கால்பந்து விளையாடினார்.

    முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா ஆகியோரை அவர் சந்தித்தார். ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

    மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார். 

    • கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.

    2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பல மாநிலங்களில் கடுமையான மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன. 

    குறிப்பாக, இந்த ஆண்டில் பலத்த மழையால் வட இந்தியப் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

    வடமேற்குப் பிராந்தியம், குறிப்பாக இமயமலைப் பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 27% அதிக மழை பெய்தது. இது பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குக் காரணமாக அமைந்தது.

    இமாச்சலப் பிரதேசம்:

    *மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசமும் ஒன்றாகும்.

    *வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

    *செப்டம்பர் 2025 நிலவரப்படி, 355-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    *1,200 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

    *45 மேக வெடிப்புகள் (Cloudbursts) மற்றும் 132 பெரிய நிலச்சரிவுகள் இங்கு பதிவாகின.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்:

    *பலத்த மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    *கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    *கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.

    *லடாக் பிராந்தியத்தில் வழக்கத்தைவிட 342% அதிக மழை பதிவானது.

    உத்தரகாண்ட்:

    *உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    *பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன, சாலைகள் சேதமடைந்தன.

    *இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இயற்கைப் பேரழிவுகளால் 85 பேர் உயிரிழந்தனர். 

    பஞ்சாப்:

    *அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், கனமழை காரணமாகவும் மாநிலத்தின் 1,400 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

    பிற மாநிலங்களில் பாதிப்பு

    அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்:

    ஜூன் மாதத்தில் பிரம்மபுத்திரா மற்றும் பாராக் உட்பட பல ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, 8 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர்.

    கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பைவிட 20% குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

    தமிழ்நாடு:

    வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்தில் (அக்டோபர் 2025) இயல்பை விட 36% கூடுதல் மழைப்பொழிவு பதிவானது.

    லா நினா (La Niña) காலநிலை காரணமாக வடகிழக்குப் பருவமழையில் கூடுதல் மழை மற்றும் புயல் ஆபத்துகள் நெருங்கியது.

    இதில், ராமநாதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது
    • அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி நாளை மறுநாள் (டிச.17) நடைபெற உள்ளது.

    இந்நிலையில் மிஞ்சியுள்ள இருபோட்டிகளில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் அக்சர் படேல் விலகியுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார்.  தரம்சாலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது காய்ச்சலால் விளையாடாத அக்சர் படேல், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அதே காரணத்துக்காக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டுமே குவித்ததால், அக்சர் படேல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார். இந்நிலையில் மிஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் அக்சர் படேல்.

    • முத்தமிழ்ப் பேரவையின் 51வது ஆண்டு இசைவிழா மற்றும் விருது வழங்கும் வி
    • நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில்,  முத்தமிழ்ப் பேரவையின் 51வது ஆண்டு இசைவிழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். 

    அதன்படி, நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற, திருவாரூர் புலவர் சண்முக வடிவேலனுக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமனுக்கு இசை செல்வம் விருது அளிக்கப்பட்டது.


    விருது வழங்கியதற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம்

    நடனக் கலைஞர் அனிதா குகாவின் நாட்டிய சேவையை பாராட்டி, அவருக்கு நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது. மெய்நானம் சகோதரர்கள் டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நாதஸ்வர செல்வம் விருது வழங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தவில் உதவி பேராசிரியராக உள்ள நாகூர் செல்வகணபதிக்கு தவில் செல்வம் விருது வழங்கப்பட்டது. மிருதங்க கலைஞர் தஞ்சை கே. முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வன் விருது வழங்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.

    ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி என தகவல் வெளியானது.

    இந்நிலையில், 18ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையின் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

    அதன்படி, விஜய்யின் பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.

    நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும்.

    அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், பராசக்தி படத்தில் இடம்பபெற்றுள்ள ஒரு பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, படத்தின் "தரக்கு தரக்கு" பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். இதனை, ஜி.வி.பிரகாஷ் புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    • எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம்
    • கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று (டிச., 15) நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய அவர், 

    "ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை தவறவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நடிகர் நாசர் கூறியதைபோல முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன். விழாவின் இயக்குநர் அமிர்தம் அழைத்தால், நான் மறுக்கமுடியுமா?.

    சிறுவயதில் இருந்து என் வளர்ச்சியை பார்த்தவர். என்னை வளர்த்தவர்களில் முக்கியமான ஒருவர் அமிர்தம். தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் முத்தமிழ் பேரவையின் 51வது ஆண்டுவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். கலைகளை, கலைஞர்களை மதித்த காரணத்தால், கருணாநிதி கலைஞராக விளங்கினார். அவர்பேரில் விருது வழங்கவேண்டுமென்று நான் வைத்த கோரிக்கையின் படி கடந்த ஆண்டு சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு நாசருக்கு கலைஞர் விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் எழுத்தில் இளைஞன், பாசப்பறவை, பொன்னன் சங்கர் என பல படங்களில் நடித்தவர் நாசர். அவர் இன்று கலைஞர் விருதை பெறுவது மிக மிக பொருத்தம் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அவருக்கு எல்லாம் தகுதியும் உள்ளது. விருது பெற்றிருக்கும் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.


    விழாவில்

    முந்தைய ஆட்சிகாலத்தில் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளையும், சின்னத்திரை விருதுகளையும் நாம் ஆட்சிக்கு வந்தபின் 2022ஆம் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன விருதுகளும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

    வசனகர்த்தா ஆருர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது. டி.எம். சௌந்தராஜன் நூற்றாண்டு விழாவை கொண்டாடி உள்ளோம். எஸ்.பி.பி, விவேக், ஜெய்சங்கர் ஆகியோர் பெயரில் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தியுள்ளோம். கலைமாமணி விருதுகள் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. நடிகர் சிவக்குமாருக்கு மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு கலைஞர்களை போற்றக்கூடிய அரசாக திமுக உள்ளது. எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம். கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.  

    • பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை
    • பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம்

    கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், கேரள அரசு மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தது.

    இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையும், நடிகை மஞ்சு வாரியரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தனர். "நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு வழிவகுத்த அந்த மாஸ்டர் மைண்ட் அது யாருடையதாக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறது, அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது." என மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் மஞ்சு வாரியரின் பக்கமே தான் நிற்பதாக நடிகரும், இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டிருந்த அவர்,"பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது. மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×