search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.
    • எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக்களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி ரோடு ஷோ நடத்தினார்.

    அப்போது அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-

    கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர். அதற்குப் பதிலாக அவர்களுடைய எம்.பி.க்கள் அர்ஜுன் சிங், பாபுல் சுப்ரியோ எங்கள் கட்சியில் இணைந்தனர்.

    சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனையை பயன்படுத்தி தபாஸ் ராய்-ஐ இணைத்துக் கொண்டது. பா.ஜனதாவின் குறைந்தது டாப் 10 தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய வரிசையில் உள்ளனர். சரியான நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கதவை திறக்கும். பா.ஜனதா மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும்" என்றார்.

    இதற்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சமிக் பட்டச்சார்யா பதில் கூறுகையில் "இது தொடர்பாக கூறுவதில் ஒன்றுமே இல்லை. மேற்கு வங்காளத்தில் தோல்வியை சந்திக்க இருக்கும் விரக்தியில் அரசியல் சொல்லாடல்தான் இது. மக்களவை தேர்தல் முடிந்த உடன், திரிணாமுல் காங்கிரஸ் அட்டை பெட்டை போல் சிதைந்து போகும்" என்றார்.

    • இந்தியா கூட்டணியில் "ஒரு வருடம் ஒரு பிரதமர் (One Year One PM)" பார்முலாவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை.
    • ஒரு வருடம் ஒரு பிரதமர் என்பதை உலகம் கேலி செய்யும்.

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் பீட்டலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் "ஒரு வருடம் ஒரு பிரதமர் (One Year One PM)" பார்முலாவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக சில மீடியாக்கள் தெரிவிக்கின்றன. இதன் அர்த்தம் முதல் வருடம் முதல் பிரதமர், 2-வது வருடம் 2-வது பிரதமர், 3-வது வருடம் 3-வது பிரதமர், 4-வது வருடம் 4-வது பிரதமர், ஐந்தாவது வருடம் ஐந்தாவது பிரதமர். அவர்கள் பிரதமர் இருக்கைக்கான ஏலத்தில் மும்முரமாக உள்ளனர்.

    ஒரு வருடம் ஒரு பிரதமர் என்பதை உலகம் கேலி செய்யும். ஒவ்வொரு வருடத்திற்கும் புதிய பிரதமரை என்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, அவர்கள் முதலில் ஆந்திர மாநிலத்தில் மதம் அடிப்படையிலான ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார்கள். அந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. காங்கிரஸ் இன்னும் அந்த விளையாட்டை விளையாட விரும்புகிறது. ஓபிசி-யினர் பெற்று வந்த இடஒதுக்கீட்டை பங்கை காங்கிரஸ் பறித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு மூலம் ஓபிசியினர் கர்நாடகாவில் பெற்று வந்துள்ள நிலையில், ஓபிசியில் முஸ்லிம்களை சேர்த்துள்ளது. காங்கிரசின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள ஓபிசி சமுதாயத்திற்கான எச்சரிக்கை மணி.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
    • 2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்

    உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக இந்த தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்திருந்தது.

    2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 2012 இல் அவர் முதலமைச்சரான பிறகு அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அத்தொகுதியில் டிம்பிள் வெற்றி பெற்றார். ஆனால் அவர் 2019 இல் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் அவர் தோல்வியடைந்தார்.

    இந்த தொகுதிக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கு உள்ள 80 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    • 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இந்த ஊழல் நடந்தபோது, மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குனராக இருந்தார்

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த போட்டி சுப்மன் கில்லுக்கு 100-வது போட்டியாகும்.
    • டாஸ் தோற்றது நல்லதுதான் எனத் தெரிவித்துள்ளார் ரிஷப் பண்ட்.

    டெல்லியில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டி இதுவாகும்.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி சுப்மன் கில்லுக்கு 100-வது ஐபிஎல் போட்டியாகும்.

    டாஸ் தோற்றது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் "டாஸ் தோற்றது நல்லதுதான். நாங்கள் முதலில்தான் பேட்டிங் செய்ய விரும்பினோம்" என்றார்.

    டாஸ் வென்ற சுப்மன் கில் "இது சிறந்த ஆடுகளம் போன்று தெரிகிறது. நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளில் சிறந்த வகையில் சேஸிங் செய்தோம்" என தெரிவித்துள்ளார்.

    • குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டி தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2030 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது.

    குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி மற்றும குரூப் சி தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது.

    105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் பதவி) தேர்வு ஆகஸ்டு 11ம் தேதி நடைபெறுகிறது.

    605 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் அல்லாத பதவி) தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெறுகிறது.

    730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- டிப்ளமோ/ஐடிஐ நிலை தேர்வு நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.

    50 பணியிடங்களுக்கான வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர் தரம் II (முதன்மை) தேர்வு வரும் டிசம்பர் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது.b 

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    • கேரளாவில் உள்ள 20 தொதிகளுக்கும் ஒரே நேரத்தில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு.
    • கர்நாடகா மாநிலத்தில் 14 இடங்களில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதனைத் தொடர்ந்து மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியது.

    தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அடங்கிய 102 தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    2-ம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (26-ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது.

    கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆனிராஜா, பா.ஜ.க சார்பில் சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பா.ஜ.க சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரும், திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் சுரேஷ்கோபியும் போட்டியிடுகின்றனர்.

    இந்த 3 தொகுதிகளும் நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளன. இதனால் திருவனந்தபுரம், வயநாடு, திருச்சூர் தொகுதிகளின் முடிவை அனைவரும் எதிர்பார்த்து ஆவலாக உள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. அங்கும் இன்று பிரசாரம் ஓய்ந்தது.

    மேலும் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி இந்த மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த மாநிலங்களில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த மாநிலங்களிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    இறுதி கட்ட பிரசாரம் முடிந்துள்ள நிலையில் கேரளா உள்பட 12 மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள தொகுதி என மொத்தம் 89 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், அதற்கு ஏற்ற வகையில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள்:

    அசாம்-5, பீகார்-5, சத்தீஸ்கர்-3, கர்நாடகா-14, கேரளா-20, மத்திய பிரதேசம்-7, மராட்டியம்-8, ராஜஸ்தான்-13, திரிபுரா-1,

    உத்தர பிரதேசம்-8, மேற்கு வங்காளம்-3, ஜம்மு காஷ்மீர்-1, மணிப்பூர்-1

    • கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது
    • மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது

    கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.

    வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு-1ல் 17 முஸ்லிம் சமூகங்களும், பிரிவு-2ல் 19 முஸ்லிம் சமூகங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இவ்வாறு தெரிவித்தார்.

    அக்கூட்டத்தில் பேசிய மோடி, "மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இடஒதுக்கீடு கொடுங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2004ல் கர்நாடகாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை முதுகில் காங்கிரஸ் குத்தியது

    மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. பாபாசாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு எதிரானவர். ஆனால் காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்ற ஆபத்தான தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற பல்வேறு யுக்திகளை கையாள்கிறது.

    கர்நாடகாவில், காங்கிரஸ் சட்டவிரோதமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. முஸ்லிம்களின் அனைத்து சாதியினரும் ஓபிசி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஓபிசியினருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, மதத்தின் அடிப்படையில் அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறையை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

    "ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் சமூக நீதியை கொலை செய்துள்ளது. அரசியலமைப்பை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் மத்தியப் பிரதேசம் பின்தங்கிய மாநிலமாக அறியப்பட்டது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இங்கு வளர்ச்சி தொடங்கியது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
    • ரத்னம் படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார்.

    இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன.

    இப்படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

    இந்நிலையில் நான்காவது சிங்கிளான "எதுவரையோ.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான ஹரிஹரன் இப்பாடலை பாடியுள்ளர்.

    இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
    • சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 108 ரன்கள் குவித்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் (108) சதம் அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் இதுவரை சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்ததில்லை. இதன் மூலம் சேப்பாக்கத்தில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

    சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும் கேப்டன் ருதுராஜ் சிஎஸ்கே அணிக்காக மிரட்டலான சாதனை ஒன்றை படைத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக டோனி படைக்காத சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக முதல் சதத்தை அவர் படைத்து அசத்தியுள்ளார்.

    சிஎஸ்கே அணியின் கேப்டனாக 2019-ம் ஆண்டில் டோனி 84 ரன்கள் குவித்ததே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புஷ்பா படத்தை விட இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது.
    • புஷ்பா 2- படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா.

    புஷ்பா வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா படத்தை விட இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

    இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதையொட்டி, இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    புஷ்பா 2 படத்தின் "புஷ்பா புஷ்பா" என துவங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் ப்ரோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், 'புஷ்பா-2' படத்தின் முதல் பாடலான 'புஷ்பா புஷ்பா' வரும் மே 1ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, லிரிக்கல் ப்ரோமோ வீடியோவை மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

    ×