search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநடப்பு"

    • சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது.
    • சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி, துணை ஆணையாளர் அசோக்குமார் மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் கவுன்சிலர் இமயவர்மன், சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளிநடப்பு செய்தார்.

    தொடர்ந்து பேசிய அ.தி.மு.க கவுன்சிலர் ஆணை வரதன், அண்ணா பூங்கா வில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் தனது வார்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். மேலும் மண்டல அலுவலகம் எப்போது திறக்கப்படும்? என்று கேள்விகளை எழுப்பினார்.

    தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் குணா பேசுகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள சுடுகாடுகளுக்கு அதிக அளவில் பிணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மயானங்களில் மின் தகன மேடை அமைக்க வேண்டும என்றார்.

    அ.தி.மு.க கவுன்சிலர் கே.சி.செல்வராஜ் பேசுகையில், மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. 3-வது முறையாக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் காரணம் என்ன?, புதிய பஸ் நிலையத்தில் தனி நபர்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளனர்.

    புதிய பஸ் நிலைய பகுதியில் காலியாக உள்ள இடம் தனியாருக்கு வாட கைக்கு கொடுக்கப்படு வது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

    தி.மு.க கவுன்சிலர் தெய்வலிங்கம் பேசுகையில், கூடுதல் வரி வசூலாகும் வார்டுகளில் அதிக நிதி ஒதுக்கீடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றார். தி.மு.க கவுன்சிலர் திருஞானம் பேசுகையில், பொன்னம்மா பேட்டை-அம்மாபேட்டை மெயின் ரோடு பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் வெளியூர் பஸ்களை பைபாஸ் சாலையில் இயக்க வேண்டும் என்றார்.

    எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த பல்வேறு தீர்மானங்களுக்கு விளக்கம் கேட்டார். தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து கவுன்சிலர்க ளின் கேள்விகளுக்கு அதி காரிகள் மூலம் பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.

    • பட்ஜெட் சமர்பிக்கப்படுவதற்கு முன்னால் மாமன்ற குழுதலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை.
    • மேலாண்மை, வரி ,பாதாள சாக்கடை வரி போன்றவற்றை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கு போதிய அவகாசம் வேண்டும். மக்களுக்கு பயன்பட க்கூடிய திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.வெளியே வந்த பின்னர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி பேட்டி அளித்தார் .அவர் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் சமர்பிக்கப்ப டுவதற்கு முன்னால்மாமன்ற குழுதலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வளர்ச்சி திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.அதேபோல் சொத்துவரி, திடக்கழிவு மேலாண்மை, வரி ,பாதாள சாக்கடை வரி போன்றவற்றை கடுமையாக உயர்த்தி உள்ளனர். மாநகராட்சி மக்களுக்கான சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீர்மிகு நகரம் திருப்பூர் என்ற இலக்கை நோக்கி செல்ல புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.

    உடனடியாக மெத்தன போக்கை கைவிட்டு உரிய காலகெடுவுக்குள் நான்காவது குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பா ட்டுக்கு கொண்டுவர வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கூடிய திட்டம் பட்ஜெட்டில் இல்லை.தொழில் நகரமான திருப்பூர் மிகவும் நெருக்கடியான சூழலில் தள்ளப்பட்டு இருக்கின்ற இந்த காலகட்டத்தில் திருப்பூர்மாநகராட்சி மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் அல்லாமல் மிகவும்ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் வெற்று அறிக்கையாகவே உள்ளது. இந்தபட்ஜெட்டை கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது என்றார்.மேலும் சாமாளியர்களுக்கான பட்ஜெட் இல்லை என்று கூறி பா.ஜ.க.வை சேர்ந்த கவுன்சிலர் தங்கராஜூம் வெளிநடப்பு செய்தார்.

    • அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும்

    கடலூர்:

    தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெரும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்க வேண்டும்.

    அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும். அரசு டன்பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கடலூர் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் ஒரு மணி நேரம் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பூபாலச்சந்திரன் வரவே ற்றார். ஆர்ப்பாட்டத்தில் தாசில்தார் ஸ்ரீதரன், துணை தலைவர் ராஜேஷ் பாபு, மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினகுமரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் வட்ட தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.

    • தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் தி.மு.க கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
    • அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் ஆணையாளர் முஸ்தபா தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் தனது வார்டில் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

    அதற்கு மறுப்பு தெரிவித்து ஆணையாளர் தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்களை வசித்த போது உறுப்பினர் வேதாச்சலம் வெளிநடப்பு செய்தார். அதனை தொடர்ந்து நகரமன்ற துணைத்தலைவர் தனம், திமுக உறுப்பினர் மைசூர், சுயேட்சை உறுப்பினர் முருகன், வி.சி.க. உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் தங்களது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுக்கு பதில் அளித்து பேசிய தலைவர் குணசேகரன் இந்த நிதி ஆண்டில் அனைத்து வார்டுக்கும் தேவையான நிதியை பெற்று அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.

    • அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார்.
    • கவர்னர் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக்கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.

    விழுப்புரம்::

    விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது              கடந்த பல மாதங்களாகவே தமிழக மக்களின் உணர்வுக்கு விரோதமாக, கூட்டாட்சித் தத்துவம், அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார்.  நாட்டில் தமிழகத்தின் பாரம்பரியத்துக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்போல் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். நேற்று (திங்கட்கிழமை) காலை சட்ட சபையில் கவர்னர் உரையாற்றத் தொடங்கியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு, வெளிநடப்பு செய்தன. மாநில அரசு ஏற்கனவே வழங்கிய உரைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், பேரவையில் அதை முழுமையாக படிக்காமல், பல வார்த்தைகளைப் படிக்காமல் தவிர்த்திருக்கி றார். தமிழக கவர்னரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு, கூட்டாட்சித் தத்துவத்துக்கு, அவை மரபுக்கு எதிரானது. கவர்னரின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் சாசனத்தை மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் செயலாகும்    தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், அரசு அளித்ததை முழுமையாகப் படிக்காமல், கவர்னர் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக்கோரி தீர்மானம் கொண்டு வந்தார்  முதல்-அமைச்சரின் இந்த செயல் கூட்டாட்சித் தத்துவத்தை, பேரவையின் மாண்பைக் காக்கும் நடவடிக்கையாகும். இனி யும் ரவி தமிழக கவர்னராக நீடிக்கக்கூடாது. அவரது செயல்பாடுகளைக் கண்டித்து, வருகிற 20-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும். மத்திய அரசு அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும். மற்றக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மகத்தான போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம்.  மிழ்நாடு அல்லது தமிழகம் என அழைப்பதால் எந்த தவறும் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்ற சொல்லுக்கு கவர்னர் எடுத்துரைக்கும் அர்த்தம்தான் தவறானது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கிய போது ஏற்பட்ட சில விமர்சனங்களால்தான், அரசு இந்த ஆண்டு 6 அடி கொண்ட செங்கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறி, அரசாணை வெளியிட்டுள்ளது. எல்லா இடங்களிலும் 6 அடி நீளத்துக்கு கரும்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும் போது 5 அடி 5½ அடி உயரம் கொண்ட கரும்புகளைக் கொள்முதல் செய்யுமாறு அரசிடம் எடுத்துரைத்து உள்ளோம்.

    தகுதி இல்லை

    ஊழலைப் பற்றி பேச தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்குத் தகுதி இல்லை. மேலும் தமிழக சட்டப்பேரவை அவை மாண்பை கேவலப்படுத்திய கவர்னரை கேட்க திரணியில்லாதவர்தான் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சை மாநகராட்சி சாதாரண மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி சாதாரண மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது, கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் வியாபாரிகள் 46 கடைகளை திருப்பி கொடுத்து உள்ளார்கள் என தீர்மானம் போடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மேயர் சண் ராமநாதனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மேயர் சண் ராமநாதன், தீர்மானத்திற்கு நான் கையெழுத்து போட்டுள்ளேன். ஜெயலலிதாவை போல் போலி கையெழுத்து இட வில்லை. அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது என்றதும், நீங்கள் எப்படி ஜெயலலிதா பற்றி பேசலாம். அவர் முன்னாள் முதலமைச்சர். ஏன் கருணாநிதி மீது கூட வழக்கு இருந்தது என மணிகண்டன் பேசினார்.

    இதனால் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டம் முடிவடையும் நேரத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சீன அத்துமீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
    • அவை நடவடிக்கையை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி நோட்டீஸ்

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அவைத் தலைவரின் பரிசீலனையில் இருந்தன. 

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் சீன பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது 267 விதியின் கீழ் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் சரியான முறையில் இல்லை என்று கூறிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவற்றை நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வாகித்தார்.ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கி மன்ற தீர்மானங்களை ஆணையாளர் வாசித்து கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய பாமக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தினசரி மார்க்கெட் சுங்க வசூல் கட்டணத்திற்கு சீல் வைக்கப்பட்ட முறையான ரசீது வழங்கவேண்டும். ஆனால் தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    பாமக உறுப்பினர்களை தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் சுமதியும் இதே குற்றசாட்டை முன்வைத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கூட்டதில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டது.

    • பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
    • பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    நாகர்கோவில்:

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது.
    • அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் நான்கு தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் திவ்யா, கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்ககா தேவி, ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், ஜெயநிர்மலா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் நான்கு தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    சுரேஷ் (சி.பி.ஐ.):-

    மாமன்றத்தில் கவுன்சிலர்களை தலைவர்களாகக் கொண்ட வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபாக்கள் உருவாக்கிடவும், இதர உறுப்பினர்களை மாமன்றம் நியமனம் செய்திடவும், வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபாக்கள் கூட்டங்கள் நடத்திடவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். அரசு இதனைமறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இதே கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய் ஆகியோரும் பேசினர்.

    மேயர் அன்பழகன்: உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். கடிதம் எழுதி கவுன்சிலர்களின் கையெழுத்துக்கள் மூலம் மறுபரிசலனை செய்யுமாறு அரசை வலியுறுத்துவோம்.

    இந்த தீர்மானத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பிரபாகரன் (வி.சி.க): மாநகராட்சிகளில் துப்புரவு பணிகள், பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கப்பட உள்ளது. ஊழியர்கள் தனியார் மயமாக்கபட்டால் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகளாக உள்ள தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். தமிழக அரசு இதற்கு செவி சாய்க்கக் கூடாது. சமூக நீதி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசின் அவுட்சோர்சிங் தனியார் மய முறைக்கு ஒத்துக் கொள்ளக் கூடாது.

    மேயர் அன்பழகன்: திருச்சி மாநகரில் தினமும் 470 டன் குப்பைகள் சேருகின்றன. அந்த குப்பைகள் தரம் பிரித்து கொடுத்தால் தான் விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள். சென்னையில் இந்த பணி சரியாக திட்டமிட்டு செய்யப்படுகிறது. திருச்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற வேண்டும், குப்பைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக பரீட்சார்த்த முறையில் முதல் கட்டமாக இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இது நமக்கு சரிவரவில்லை என்றால் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு பரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என்றார்.

    ஆனால் இதற்கும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கொட்டப்பட்டு தர்மராஜ்: கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் எனது வார்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்திய போது தாங்கள் (மேயர்) டேப் எடுத்துக்கொண்டு அளந்து விட்டு சொல்லுங்கள் என கூறினீர்கள். நீங்கள் வந்த காலகட்டத்தில் நானும் தி.மு.க.வுக்கு வந்து விட்டேன். இந்தப் பதில் எனக்கு நக்கலாக தெரிகிறது. இதனை மாமன்றத்தில் தெரியப்படுத்தவே இங்கு பேசினேன்.

    மேயர் அன்பழகன்: தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வேலையை செய்வதற்காகத் தான் அதை சொன்னேன். கட்சிக் கூட்டத்தில் பேசியதை மன்றத்தில் பேசியது தவறான அணுகுமுறை எனக் கூறினார். இதைத்தொடர்ந்து கொட்டப்பட்டு தர்மராஜ், மேயர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 9 மாதத்துக்கு முன் நம்பிக்கையில்லா தீர்மானம் புகாராக கொடுக்கப்பட்டது.
    • ராஜாமணி, ராணி,கண்மணி, சுகுணா, ருக்குமணி, சித்ரா, உள்ளிட்ட கவு ன்சிலர்கள்வெளிநடப்பு செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். பா.ம.க. 5, தி.மு.க. 3 அ.தி.மு.க.- தே.மு.தி.க. 1 மற்றும் சுயேச்சை ஒருவர் உள்பட 13 பேர் உள்ளனர். இதில் துணை தலைவராக உள்ள சத்திவேல் மீது 11 கவுன்சிலர்கள் கலெக்டரிடம் கடந்த 9 மாதத்துக்கு முன் நம்பிக்கையில்லா தீர்மானம் புகாராக கொடுக்கப்பட்டது.

    அவர் அரூர் ஆர்.டி.ஒ.விடம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் உள்ளது. தற்போது 2021-2022 பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டவேலைகளை முறையாக ஒதுக்கவில்லை என கூறப்படுகின்றது.

    இதை கண்டித்தும் பி.டி.ஒ. உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்தும் முத்துகுமரன், ஜெயகுமார், சங்கர், கோபுரம் கோவிந்தசாமி, ராஜாமணி, ராணி,கண்மணி, சுகுணா, ருக்குமணி, சித்ரா, உள்ளிட்ட கவு ன்சிலர்கள்வெளிநடப்பு செய்தனர். இதனால் கடத்தூர்பி.டி.ஒ. ஆபீசில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போகலூர் யூனியன் கூட்டம் நடந்தது.
    • அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை என வெளிநடப்பு செய்தனர்.

    போகலூர்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் செல்லம்மாள் வரவேற்றார்.

    அப்போது திடீரென அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை. இந்த கூட்டம் நடத்த வேண்டாம் என கூறி அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    உடனே ஆணையாளர் செல்லம்மாள் உள்பட அலுவலர்கள் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தலைவர் சத்யா குணசேகரன் அறையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

    துணைத்தலைவர் பூமிநாதன் பேசுகையில், அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. எப்போது போனில் தொடர்பு கொண்டாலும் மீட்டிங்கில் இருக்கிறோம் என்று சொல்கின்றனர். இப்படி இருந்தால் மக்கள் பணியை நாங்கள் எப்படி செய்வது? அலுவலகத்திற்கு வரும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உட்கார சேர் கொடுப்பதில்லை. இது சரியா?.

    எங்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும்? என்றார்.

    தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், அதிகாரிகள் 11 மணிக்கு தான் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அவ்வாறு வந்தால் என்ன வேலை செய்ய முடியும்? அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வராவிட்டால் அவர்களின் வருகை பதிவேட்டில் ஆப்ஷன்ட் போட்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும் அதிகாரிகள் தினமும் எந்த வேலையை பார்க்க செல்கிறீர்கள் என்பதை படம் எடுத்து எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்ப வேண்டும் என்றார். அதற்கு ஆணையாளர் செல்லம்மாள் பதில் அளிக்கையில், இனிமேல் சரியான நேரத்திற்கு வராத அலுவலர்களுக்கு ஆப் செட் போடுங்கள். அதை நான் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

    ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகள் பயந்து பணியாற்றினார்கள். தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் ஆகிவிட்டது என்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூரில் டிரான்ஸ்பார்மர் அமைக்காததால் குறைந்த மின் அழுத்தம் வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. உரத்தூர் - கொடிக்குளம் செல்லும் சாலை 15 ஆண்டுகளாக போடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், பொது மக்களும் அவதிப்படுகின்றனர். அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ நன்றி கூறினார்.

    ×