search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள் கட்சி"

    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    • கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

    இந்நிலையில் இன்று தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது. மீண்டும் அதே தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடுகிறது.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இறுதி செய்யப்படும். கடந்த தேர்தலின் போது நடந்த பகிர்வு முறையை இந்த முறையும் விசிக ஏற்றுக்கொண்டது. தென்னிந்திய மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடுகிறோம். விசிக தனி சின்னத்தில் போட்டியிட தி.மு.க. உடன்பாடு. தேர்தல் ஆணையத்திடம் பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். உயர்நிலை கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தனி தொகுதிகளும், ஒரு பொது தொகுதி வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறது.
    • ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் சந்திக்கிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகள் எவை என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு தேர்தலில் தந்தது போல தங்களுக்கு 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் தி.மு.க. 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இயலும் என்று கூறி வருகிறது. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தனி தொகுதிகளும், ஒரு பொது தொகுதி வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது. அதுபோல ம.தி.மு.க.வும் 2 தொகுதிகள் கேட்டதால் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

    நேற்று ம.தி.மு.க. உயர் நிலைக் குழு கூட்டம் சென்னையில் கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அப்போது 2019-ம் ஆண்டு தேர்தலை போல ஒரே ஒரு தொகுதியை ஏற்றுக்கொள்வது என்றும் ஒரு மேல்சபை தொகுதியை கேட்டு பெறலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த இழுபறிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 தினங்களாக தி.மு.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 10-ந்தேதி வேட்பாளர் தேர்வை தொடங்க இருப்பதாகவும் வெள்ளி, சனி இரண்டு நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதன் பேரில் பேச்சு நடத்த வருமாறு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்துக்கு சென்றார்.

    அங்கு அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இருவரும் தொகுதி பங்கீடு குறித்து மனம் விட்டு பேசினார்கள். இதில் ஒருமித்த கருத்து உருவானதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே வைகோவும் ஒரு தொகுதியை ஏற்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு தொகுதி பங்கீடு குறித்து அவர் தி.மு.க. தலைவர்களுடன் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
    • போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ளனர்.

    சென்னை:

    டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும் அரசியல் பிரமுகருமான ஜாபர் சாதிக் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ளனர்.

    இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர்.
    • மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருப்பேன் என தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர்.

    அதற்கு அவர் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, எங்களுக்கான தனித்தன்மை இருக்கு. அதற்கான அடையாளம் இருக்கிறது. அதிமுக தனியாக நின்று கூட சாதனை படைத்திருக்கிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    2016, 2014 இரண்டு தேர்தல்களில் தனியாக நின்றோம். அதே நேரத்தில் ஒரு கட்சி கூட்டணிக்கு விரும்பினால் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். அதைத்தான் நான் சொன்னேன்.

    எங்கள் கட்சியை பொறுத்தவரை வாங்க வாங்க என்று யாரையும் பத்திரிகை வைத்து அழைக்கவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட கட்சியும் இல்லை. யாராக இருந்தாலும் சரி அவர்கள் வருவதை கட்சி முடிவு செய்யும்.

    விடுதலை சிறுத்தைகள் குறித்து நான் சொன்ன கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. தி.மு.க. கூட்டணி குறித்து இழுபறி இழுபறி என தகவல் வருகிறது. அதைத்தான் நானும் சொன்னேன்.

    அதை நான் சொல்லக்கூடாதா இன்னும் அவர்கள் கூட்டணி இறுதி செயப்படவில்லை?

    திமுக வெறும் சில்லறை கட்சிகளுடன் மட்டுமே இப்போது இடங்களை முடித்துள்ளது. இன்னும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு இடங்கள் இறுதியாகவில்லை.

    கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அவர்கள் வந்தால் அவர்களுக்கு தான் அதிக இடம் கிடைக்கும். திமுகவில் ஒரு இடம் கிடைக்க போவதில்லை. எந்த வண்டி வேகமாக போகிறதோ அந்த வண்டியில் தான் ஏறுவார்கள்.

    பா.ஜ.க.வை, அதிமுக கழட்டிவிட்ட பிறகு திமுக அதற்கு முன்பு சர்வாதிகாரமாக இருந்தது. இப்போது திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் திமுகவை மிரட்டுகிறார்கள். உங்களுக்கு உரிய தொகுதியை கொடுங்கள் எங்களுக்குரிய இடங்களை கொடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். இல்லையென்றால் அண்ணா திமுகவுக்கு போய்விடும் என்று சொல்கிறார்கள்.

    கெஞ்சி கூத்தாடி கட்டிப்பிடித்து அனைத்து கூட்டணியை வைத்திருக்கிறது திமுக. அது எப்போது உடையும் என்று தெரியாது. பத்து நாள் இருக்கிறது பொறுத்திருந்து பாருங்கள்.

    மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அது வீண் முயற்சி ஏனெனில் இது திராவிட மண்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். குறிப்பாக பல்லடத்தில் பேசிய பேச்சில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை.

    10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதையும், என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

    குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார்.

    தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பா.ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகழை பேசுவது போன்ற யுக்தியை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

    பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.

    எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அ.தி.மு.க.வின் வாக்கை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது என்று உணர முடிகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுற்றி சுழன்று வந்து பிரசாரம் மேற்கொண்டா லும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள்.

    பா.ஜனதாவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.
    • 2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 2 தனி தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

    முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.

    2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்பதால் தி.மு.க.விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருமாவளவனும் கடந்த முறையைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்டு பெறுவதில் உறுதியாக உள்ளார்.

    இந்த நிலையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.விடம் இருந்து நாளை அழைப்பு வரும் என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். நாளை நடக்கும் பேச்சு வார்த்தையின் போது எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தி.மு. க. தரப்பில் வலியுறுத்தப்படும்.

    கடந்த முறை திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதியை தவிர மேலும் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த உள்ளார்.

    • கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.
    • கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    இந்த முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியை கேட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொதுத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாத பிற சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவினை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்துள்ளார்.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருமாவளவன் பொதுத் தொகுதியின் அவசியத்தை விளக்கி கூறினார்.

    ஆனால் தி.மு.க. தரப்பில் சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதியை ஒதுக்க விரும்புகிறது. பொதுத் தொகுதியை தவிர்க்குமாறு வலியறுத்தப்பட்டது. ஆனால் கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தையுடன் 2-வது கட்ட பேச்சு வார்த்தைக்கு இன்னும் அழைப்பு கொடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இன்று மாலையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம் திறப்பு விழா நடைபெறுவதால் நாளை (27-ந்தேதி) பேச்சு வார்த்தைக்கு அழைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

    எனவே அக்கூட்டத்தில் 3 தொகுதிகளை கேட்டு பெறுவதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார். தி.மு.க.வும் அவரது கோரிக்கையை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் அதற்கு தி.முக. தரப்பில் இன்னும் இறுதியாக எதுவும் தெரிவிக்காததால் விடுதலை சிறுத்தைகளும் தயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரம் பா.ம.க.வும் தனது முடிவை அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும். திமு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று கூறி வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகளை குறி வைத்தே அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

    விடுதலை சிறுத்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது.

    4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


    அப்போது பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.க. வரும் என்பது உறுதியாகவில்லை என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி இருக்கிறார்கள்.

    ஆனாலும் அ.தி.மு.க.வின் 'ஆஃபரை' ஏற்க விடுதலை சிறுத்தைகள் தயக்கம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் அ.தி.மு.க. 5 இடங்கள் வழங்கினாலும் அது வேட்பாளராகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள் நிச்சயம் எம்.பி.க்கள் ஆகி விடுவார்கள் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    எனவே இந்த தேர்தலில் விட்டுவிடுங்கள். பின்னர் பார்க்கலாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    • திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
    • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற் கொள்ளப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும்.
    • மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப்பேரவையில் நடந்து கொண்டுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் கவர்னர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் கவர்னர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பதென்பது ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி அவர்கள் நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியலமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி அவர்கள் எந்த அடிப்படையில் கவர்னர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் கவர்னர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும்கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன.

    ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் மூலம் இங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் வகிக்கும் கவர்னர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய போக்குள்ள அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருப்பதே தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

    "கவர்னர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். ஒன்றிய அரசால் கவர்னர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் கவர்னர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் கவர்னர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

    மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே கவர்னர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன.

    'இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் கவர்னர் பதவி ஒழிக்கப்படும்' என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.
    • தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றனர்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க தயாராக உள்ள விடுதலை சிறுத்தை 4 தொகுதிகளையும் ஒரு மேல்சபை எம்.பி.யும் கேட்க உள்ளனர்.

    திங்கட்கிழமை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் வி.சி.க. அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சியின் சின்னத்தில் நிற்காமல் தனி சின்னத்தில் முழுமையாக நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை ஒதுக்கப்படுகின்ற அனைத்து தொகுதியிலும் தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

    இரண்டு தேர்தலில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. மிக குறுகிய காலத்தில் பானை சின்னம் வாக்காளர்கள் மத்தியில் இடம் பிடித்தது. அதனால் இந்த முறையும் பானை சின்னத்தில் போட்டியிடவே திருமாவளவன் ஆர்வம் காட்டுகிறார்.

    அதற்காக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 முறை பானை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு கணிசமாக வாக்குகள் பெறப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு மீண்டும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    தி.முக. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தொகுதி பங்கீட்டு குழுவினர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதைத்தொடர்ந்து ம.தி.மு.க.வினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் வரும் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்த தி.மு.க. தலைவர் முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

    ×