search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்"

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் கருணாகர பிரபு (வயது33). இவருக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தன்னை மறு வாழ்வு மையத்தில் சேர்க்குமாறு தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தாய் விரைவில் ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளார்.

    மன உளைச்சலில் இருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது தாயும், மனைவியும் காப்பாற்றினர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார். சிறிது நேரம் கழித்து மனைவி கதவைத் தட்டியபோது திறக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கருணாகரபிரபு மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்தி மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் சாக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்தி (வயது 41).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை
    • பெங்களூக்கு சென்று மாணவியை மீட்டு போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை அருகே உள்ள கணுவாயை சேர்ந்த 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம் கள்ளக்கு றிச்சியை சேர்ந்தவரும், பெங்களூரில் வசித்து வரும் 19 வயது வாலிபர் ஒரு வருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரி வித்தனர்.

    மேலும் தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து மாணவி அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக வாலிபர் கோவைக்கு வந்து மாணவியை பெங்களூருக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் தடாகம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி அவரது காதலனுடன் பெங்களூரில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் பெங்களூக்கு சென்று மாணவியை மீட்டனர். அவரை அழைத்து சென்று பலாத்காரம் செய்த வாபரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஜூன் மாதம் தங்கேஸ்வரனை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.
    • திலகவதியை திருமணம் செய்துகொண்ட தங்கேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம் பண்ணை அருகேயுள்ள சண்முகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரன்.

    இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு திலகவதி தங்கேஸ்வரனை வற்புறுத்தினார்.

    விரைவில் நம்முடைய திருமணம் நடக்கும் என்று நம்பிக்கை வார்த்தை கூறிய தங்கேஸ்வரன், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு திலகவதியுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். தொடர்ந்து திருமணத்துக்கு காலம் தாழ்த்தியதால் ஏமாற்றம் அடைந்த திலகவதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியலுக்கு உட்படுத்தியது என்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தங்கேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே திலகவதியை சந்தித்து சமரசம் பேசிய தங்கேஸ்வரன், தான் வழக்கில் இருந்து விடுதலையாகும் வகையில் கோர்ட்டில் தனக்கு சாதகமாக சாட்சி சொன்னால் நாம் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தலாம் என்று கூறியுள்ளார். அதனை முழுமையாக நம்பிய திலகவதியும் நடந்துகொண்டார். அதன் மூலம் கடந்த ஜூன் மாதம் தங்கேஸ்வரனை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.

    இதையடுத்து திலகவதியை திருமணம் செய்துகொண்ட தங்கேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார். திருமணத்தின்போது திலகவதி 1 பவுன் நகை மட்டுமே அணிந்து வந்தார். இதனை ஏற்க மறுத்த தங்கேஸ்வரனின் பெற்றோர் எதுவும் இல்லாதவளை திருமணம் செய்து வந்ததாக மகனை திட்டியதோடு, மருமகளை சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.

    அத்துடன், உன் பிறந்த வீட்டில் இருந்து 10 பவுன் நகை வாங்கி வந்தால் மட்டுமே என் மகனுடன் குடும்பம் நடத்த முடியும் என்று கூறி திலகவதியை வீட்டை விட்டு துரத்தினர். வேறு வழியின்றி 10 பவுன் நகை வாங்கிவர அவரும் சம்மதித்தார். அப்போது தங்கேஸ்வரனிடம் சித்ரவதை குறித்து கூறி திலகவதி அழுது புலம்பினார்.

    அதனை காதில் வாங்கிக் கொள்ளாத தங்கேஸ்வரன், தான் வழக்கில் இருந்து விடுதலை ஆவதற்கே உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார். மேலும், வேலை விஷயமாக கோவை செல்வதாக தெரிவித்து விட்டு புறப்பட்டார்.

    ஒருசில நாட்களில் திலகவதியை செல்போனில் தொடர்பு கொண்ட தங்கேஸ்வரன், தான் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆண்டாள் கோவிலில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டியதாகவும், நீ உன் வீட்டிற்கு சென்றுவிடு என்றும் கூறி மிரட்டியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த திலகவதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசை வார்த்தைகளை தெரிவித்து பலாத்காரம் செய்தது அம்பலம்
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(20). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜெகதீசுக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி சிறுமி தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஷ், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லாத போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை தெரிவித்து, அவரை பலாத்காரம் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சியாகினர். சம்பவம் குறித்து தங்களது மகளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்தார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 36). இவருக்கு மது பழக்கம் இருந்தது.

    இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவராகவே வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார்
    • குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பக்கம் உள்ள ஆத்துப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கவுதம் (வயது 27). இவர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 21) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் இரண்டு பேரும் திருப்பூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம், காளம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்போது லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார். இதனை லட்சுமி மறுத்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் சண்டை வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த கவுதம், மண்எண்ணையை எடுத்து லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் அவர் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுதமை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திருப்பூர் மகிளா அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.பாலு வழக்கை விசாரணை செய்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், மேலும் மற்ெறாரு பிரிவில், ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

    • பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும் அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தினமும் பின் தொடர்ந்து சென்று தாலலை கொடுத்தப்படி இருந்துள்ளார். நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். பின்பு டியூசன் முடிந்ததும் இரவில் பீச் ராடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மாணவிக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அங்கு வந்தார்.

    அவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை செய் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார்.இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிப ரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க விரும்பவில்லை.

    இதனால் அந்த வாலிபர் மீது போலீசாரால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுபோன்ற செயலில் ஈடுப டக்கூடாது என்று அந்த வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். டியூசனுக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி பருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பீச் ரோடு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    • கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மோதியது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பூதலூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி தாலூகா டி.கல்விக்குடி மேலகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 19).

    இவர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பூண்டிக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் உணவை பார்சல் வாங்கி கொண்டு திரும்பி சென்றார்.

    பூண்டி அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அருகே இருந்தவர்கள் திருக்காட்டுபள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீசார் பிரேதத்தைப் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் களியக்காவிளையில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்றார்.
    • படுகாயம் அடைந்த ரவியை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    கொல்லங்கோடு :

    கொல்லங்கோடு அருகே உள்ள எஸ்.டி. மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 46). இவர் நேற்று சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாத்தங்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் களியக்காவிளையில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்றார். எதிர்பாராத விதமாக வாகனம் ரவி மீது பலமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த ரவியை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது சம்பந்தமாக ரவி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஸ்தம்பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 32). இவர் சமூக இணையதளமான டெலிகிராம் செல்போனில் பயன்படுத்தி வருகிறார்.
    • ஜாபர் தனது வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பினார்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 32). இவர் சமூக இணையதளமான டெலிகிராம் செல்போனில் பயன்படுத்தி வருகிறார். இதில் கடந்த 4-ந்தேதி ஒரு விளம்பர லிங்க் வந்தது. அதில் உங்களுக்கு பகுதி நேரம் வேலை வழங்கப்படும். அதற்கு முன்பு சில பதிவுகளை நிரப்பி கொடுக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு திருப்திகரமான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த கவர்ச்சிகர அறிவிப்பை நம்பி லிங்கை கிளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து கொடுத்தார். இதையடுத்து அவரிடம் உங்களுக்கு வேலை வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. மேலும் அதற்கான லிங்கும் ஜாபரின் செல்போனுக்கு டெலிகிராம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜாபர் தனது வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பினார். இதையடுத்து அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. தான் அனுப்பிய பணமும் கிடைக்கவில்லை.

    தான் ஏமாற்றம் அடைந்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்த ஜாபர் இது குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர்கிைரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலி தொழிலாளி.‌
    • ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலி தொழிலாளி.

    ஆழமான பகுதியில்...

    இவர் தனது நண்பருடன் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அஜித் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துபோது எதிர்பாராத விதமாக ராஜாவாய்க்காலில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

    இதை பார்த்த ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் ராஜா வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட அஜீத்தை நேற்று மாலை வரை தேடினர். இரவு ஆகிவிட்டதால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டனர்.

    2-வது நாளாக

    இதையடுத்து 2-வது நாளாக இன்று காலை 8 மணி முதல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீண்டும் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகுமூலம் அஜீத்தை தீவிரமாக தேடி வந்தனர்.

    பிணமாக மீட்பு

    அஜீத் குளித்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கரைேயாரம் தண்ணீரில் காலை 9.15 மணி அளவில் பிணமாக மிதந்தார். இதையடுத்து அவரை உடலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதையடுத்து அவரது உடல் போலீசார் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×