என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்
- இருசக்கர வாகனத்தில் களியக்காவிளையில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்றார்.
- படுகாயம் அடைந்த ரவியை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கொல்லங்கோடு :
கொல்லங்கோடு அருகே உள்ள எஸ்.டி. மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 46). இவர் நேற்று சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாத்தங்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் களியக்காவிளையில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்றார். எதிர்பாராத விதமாக வாகனம் ரவி மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ரவியை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது சம்பந்தமாக ரவி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






