search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்"

    • சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 12-ந் தேதி சிறுமியும், அவரது தாயும் ஆடுகளை மேய்க்க சென்றனர். அப்போது சிறுமி தனது தாயிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். சிறுமி வீட்டிற்கு நடந்து செல்வதை பார்த்த வாலிபர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை, வா பேசிக்கொண்டு இருக்கலாம் என கூறி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அப்போது அவர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சிறுமி இல்லை.

    அவரை தேடி சென்ற போது சிறுமி வாலிபரின் வீட்டிற்குள் இருந்து அழுது கொண்டே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் தனது மகளிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஜாலியாக இருந்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறி கதறி அழுதார்.

    இதனை கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • சிறுமியின் தந்தையிடம் உன் மகளை நான் தான் கட்டுவேன் என மிரட்டல்.
    • மாணவியின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் கோட்டூர் ரோட்டில் சென்ற போது ஜோதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். அவர் சிறுமியின் தந்தையிடம் உன் மகளை நான் தான் கட்டுவேன்.

    உன்னால் என்ன பண்ண முடியுமோ அதை நீ பண்ணு என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மாணவியின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த சக்திவேல் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.
    • தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பிடில்முத்து தெரு வை சேர்ந்தர் பாதுஷா. இவரது மகன் சாகில் (வயது 23). எம்.பி.ஏ. படித்து முடித்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார்.

    பரிதாபமாக இறந்தார்

    இந்த நிலையில் நேற்று சாகில் அலங்காநத்தம் சென்று விட்டு தனியார் பஸ்சில் நாமக்கல் நோக்கி வந்தார். தூசூர் ஏரி சாலை சந்திப்பில் வேகமாக திரும்பும் போது பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த சாகில் தவறி பஸ்சில் இருந்து வெளியே விழுந்தார்.

    இதில் பலத்தகாயம் அடைந்த சாகில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாகில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    டிரைவர் மீது வழக்கு

    இது குறித்து அவரது தந்தை பாதுஷா நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தனியார் பஸ் டிரைவர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இளைஞர் பஸ்சில் இருந்து வெளியே விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நன்னிலம்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அங்கு சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

    திருவாரூர்:

    நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருக்கண்டீஸ்வரம் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், நன்னிலம் பகுதியை சேர்ந்த கோவிந்தவேல் (வயது 23) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தவேலை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கணவன்-மனைவியாக வாழ்ந்தது அம்பலம்
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தந்தை தாயை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளார்.

    இதனால் சிறுமியை கவனிக்க யாரும் இல்லாத நிலையில் அவரை தந்தையின் தங்கை கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோலார்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். கடந்த 2 மாதங்களாக சிறுமி அங்கு வசித்து வந்தார். அப்போது சிறுமியை அவரது அத்தை மகன் அய்யப்பன் (வயது 24) என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    சட்டத்துக்கு புறம்பாக 14 வயது சிறுமியை வாலிபர் திருமணம் செய்து கொண்டு வாழ்வது அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் 14 வயது சிறுமியை திருமணம் செய்த அய்யப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெணைநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இதில் பஸ்சிற் காக காத்திருக்கும் பயணி கள் அமர்வதற்காக இரும்பி லான சேர்கள் போடப்பட்டி ருந்தது.இந்த நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி, திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மணக்குப் பத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 22) என்பவர் பயணியர் நிழற்குடையில் இருந்த இரும்பு சேர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணக்குப் பத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

    பாலா மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல் ஏரிக்கரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாலா (வயது 31). இவர் மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதுபோன்ற சமூக விரோதி செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சசாங்சாய் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஆணைக்கிணங்க பாலாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மனவேதனை காரணமாக அய்யப்பன் விஷம் குடித்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது32). கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் கடந்த 30-ந்தேதி விஷம் குடித்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யப்பன் இறந்தார். இதுகுறித்து அய்யப்பன் சகோதரி மகேஸ்வரி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அய்யப்பனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • குமார் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் குமார்(34). இவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது குமாரி டம் திருநங்கை ஒருவர் ஆசை வார்த்தை கூறி ஒரு ஆட்டோவில் 5 ரோடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே குமாரிடம் இருந்த செல்போனிலிருந்து வேறொரு செல்போன் எண்ணிற்கு கூகுள்பே மூலம் ரூ.5 ஆயிரத்தை அனுப்ப வைத்துள்ளார்.

    பின்னர் குமாரிடம் தகராறு செய்து ஆட்டோவில் இருந்து குமாரை கீழே இறக்கி விட்டு திருநங்கை தப்பி சென்று விட்டார். இது குறித்து குமார் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு சென்றதால் பரபரப்பு
    • வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி.

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியிடம் திரு மணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கேரளாவுக்கு கடத்தி சென்றார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் சிறுமி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எந்த பலனும் இல்லை.

    அப்போது சிறுமி அவரது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தான் கேரள மாநிலம் வடக்கஞ்சேரிக்கு வாலிபருடன் வந்து விட்டதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சமரசம் பேசியபோது தகாத வார்த்தைகளால் திட்டினார்
    • குடிபோதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சக்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது நேராக வீட்டிற்கு செல்லாம், அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே சென்றார்.

    பின்னர் வேக, வேகமாக தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு விட்டனர்.

    அவர்கள் மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்ததுடன், தன்னை அழைத்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசினார். தொடர்ந்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டு கொண்டே இருந்தார்.

    இதுகுறித்து பொது மக்கள், ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, தண்ணீர் தொட்டி மீது நின்றிருந்த வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கீழே அழைத்து வந்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் இன்று பேலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் கருணாகர பிரபு (வயது33). இவருக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தன்னை மறு வாழ்வு மையத்தில் சேர்க்குமாறு தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தாய் விரைவில் ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளார்.

    மன உளைச்சலில் இருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது தாயும், மனைவியும் காப்பாற்றினர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார். சிறிது நேரம் கழித்து மனைவி கதவைத் தட்டியபோது திறக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கருணாகரபிரபு மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×